Friday, October 5, 2012

ஏழு அதிசயங்கள்

ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியை தன் மாணவிகளிடம் இன்று உலகத்தின் காணப்படும் ஏழு அதிசயங்களை குறித்த எழுதும்படி சொன்னார்கள். ஒவ்வொரு பிள்ளையும் எழுத ஆரம்பித்தார்கள். அவர்கள் உலகின் ஏழு அதிசயங்களையும் தாஜ்மகால் சீன சுவர்எகிப்தின் பிரமீடுகள்..  என்று எழுத ஆரம்பித்தார்கள். எல்லாரும் எழுதி கொடுத்தபின்னும் ஒரு மாணவி மாத்திரம் தரவில்லை. ஆசிரியை அந்த மாணவியிடம் சென்று 'ஏன் இன்னும் முடிக்கவில்லை என்று கேட்டபோது அவள் சொன்னாள் 'அவை மிகவும் அதிகமாய் இருப்பதால் என்னால் எழுதி முடிக்க முடியவில்லைஎன்று சொன்னாள். அப்போது ஆசிரியை கேட்டார்கள்,  'நாங்கள் உனக்கு உதவி செய்கிறோம் சொல்என்று சொன்னார்கள். அப்போது அவள் சொன்னாள், 'நான் நினைக்கிறேன்உலகின் ஏழு அதிசயங்கள் நம்மால் காண முடிவது நம்மால் உணர முடிவது கேட்க முடிவது தொட முடிவது சிரிக்க முடிவது,  ருசிக்க முடிவது அன்பு கூற முடிவது என்று நினைக்கிறேன் என்று கூறினாள். அது எவ்வளவு உண்மை!

No comments:

Post a Comment