Thursday, October 11, 2012

ஐயோ சாரி!!!

மென்சா என்னும் குழுவில் அதிக அறிவுள்ளவர்களே சேர்த்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய I.Q. 140 க்கு மேல் இருக்கும். சமீபத்தில் அந்த குழுவை சேர்ந்தவர்கள் ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அவர்களில் சிலர் கூட்டம் முடிந்தபிறகு சாப்பிடுவதற்கு பக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். அங்கு அவர்கள்உப்பு இருந்த பாட்டிலில் மிளகு பொடியும்மிளகுபொடி  இருந்த பாட்டிலில் உப்பும் இருந்ததை கண்டார்கள். இவர்கள்தான் அறிவாளிகளாச்சே என்ன செய்வது என்று யோசித்து யோசித்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி ஒரு பேப்பர் டவலில் உப்பை கொட்டிஅதை மாற்றுவது என்று முடிவெடுத்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த பணிப்பெண்ணிடம்இப்;படி பாட்டில்கள் மாறி இருக்கிறது என்று கூறினார்கள். அப்போது அந்த பணிப்பெண் 'ஐயோ சாரி! மன்னியுங்கள்என்று சொல்லி விட்டுமிளகு பொடியில் இருந்த மூடியை எடுத்துஉப்பு பாட்டிலிலும்உப்பில் இருந்த மூடியை எடுத்து மிளகு பொடி பாட்டிலிலும் மாற்றி வைத்து விட்டு போனாள். அங்கிருந்த அறிவாளிகள் அசடு வழிந்தார்கள்.

No comments:

Post a Comment