Monday, October 1, 2012

ஜெபங்களுக்கு பதில் கொடுக்கிற தேவன்


ராபர்ட் மேத்தியூ என்பவர், தனது மனைவி கர்ப்பிணியாய் இருப்பதை சில வாரங்களுக்கு முன்தான் குடும்பமாய் அறிந்திருந்தனர். அவர்கள் விர்ஜினியாஎன்னும் அமெரிக்க நகரத்தில் வசித்து வந்தார்கள். மனைவிகலிபோர்னியாவில் உள்ள தன் சகோதரியை பார்க்க வேண்டும் என்றுஆவலாய் இருந்தபடியால், அதற்கென்று திட்டமிட்டு அவர்கள் அடுத்த நாள்தயாரானார்கள். அன்று செப்டம்பர் மாதம் 10ம் தேதி.
.
அவர்கள் தயாராகி, காரில் போய் கொண்டிருந்தபோது, இருவரும் ஜெபித்தார்கள். தன் மனைவியின் இந்த கலிபோர்னியா போய் வரும் திட்டம் நல்லபடியாக முடியவேண்டும் என்று அவர் ஜெபித்து ஆமென் என்று சொல்வதற்கும், காரின் டயர் வெடிப்பதற்கும் சரியாக இருந்தது. உடனே வேகமாக அந்த காரின் டயரை மாற்றி, புறப்பட்டு ஏர்போர்ட் போவதற்குள் அவர்கள் செல்ல வேண்டிய பிளேனை மிஸ் பண்ணி விட்டார்கள்.
.
அடுத்த நாள் ராபர்ட் மேத்தியூவின் அப்பாவிடமிருந்து டெலிபோன் வந்தது. எந்த பிளேனில் அவருடைய மனைவி வருவதாக இருந்தது என்றும், அந்த பிளேனின் நம்பரையும் கேட்டபோது, அந்த பிளேன்தான், அந்த இரட்டை மாடி கட்டிடத்தில் மோதிய ஒரு பிளேன் ஆகும் என்று கூறினார். கர்த்தர் எப்படி தங்களை காத்து கொண்டார் என்று அவர்கள் நினைத்திருந்த போது, அவர்களின் அப்பா, சொன்னார், 'நான் சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கபோவதில்லை, நான் போய் அங்கு கட்டிடம் விழுந்து, அதில் மாட்டி கொண்டு இருப்பவர்களை விடுவிக்கபோகிறேன்' என்று சொல்லி, போனை வைத்து விட்டார்.
.
அவர் ஒரு ஓய்வுபெற்ற நியூயார்க் தீயணைக்கும் படையை சேர்ந்தவர். அவர் அங்கு உதவி செய்ய போனதும், அங்கு அவர் சென்ற பிறகு எந்த செய்தியும் வராமல் அவர் மேல் கட்டிடம் விழுந்து இறந்து போனதும் பின்னால் வந்த செய்திகள். ராபர்ட்க்கு தேவன் தன் மனைவியை காத்தது பெரிய காரியமாயிருந்தாலும், தன் தகப்பன் இறந்தது குறித்து மிகவும் வேதனை, தேவன் மேல் கோபமாகவும் இருந்தது. ஏனென்றால் அவருடைய அப்பா இன்னும் இரட்சிக்கப்படவில்லை.
.
இரண்டு வாரங்களுக்கு பிறகு, வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அங்கு ஒரு தம்பதியர் ஒரு சிறு கைக்குழந்தையுடன் நின்றிருந்தனர். அவர்கள் 'உங்கள் தந்தைதானே ஜேக் மேத்யூ' என்று கேட்டார்கள். ஆம் என்றதற்கு, 'நாங்கள் உங்களுக்கு சொல்ல வேண்டிய விஷயங்கள் உண்டு' என்று கூறி, 'செப்டம்பர் மாதம் 11ம் தேதி, என் மனைவி அங்கிருந்த இடிபாடுகளுக்குள் மாட்டி கொண்டாள். உங்கள் தந்தைதான் பாடுபட்டு இவளை காப்பாற்றினார்.  அவர் அப்படி காப்பாற்றி கொண்டு இருக்கும்போதே, என்மனைவி உங்கள் தகப்பனுக்கு கர்த்தரை பற்றி சொல்லி, அவரை கர்த்தருக்குள் வழிநடத்தினாள்' என்று கூறினார். இதை கேட்டவுடன் ராபர்ட்டின் கண்களில் கண்ணீர் வழிந்தது. எத்தனை நல்ல ஆண்டவர் நம் தேவன்! அவர்மேல் அநியாயமாக கோபித்து கொண்டு இருந்தோமே என்று வெட்கப்பட்டார். தன் தந்தை கர்த்தரை அறிந்தவராய் நித்தியத்திற்கு கடந்து சென்றார் என்பது எத்தனை ஆறுதலான விஷயம்!
.
இந்த சம்பவம் உண்மையில் நடந்த சம்பவமாகும். இந்த காரியம் நடந்து இப்போது 9 வருடங்களாகி இருக்கலாம், ஆனால் நடந்தது நடந்ததே! கர்த்தர் தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களின் சத்தத்தை கேட்டு புறம்பே போய் விடுகிற தேவனல்ல, நம்முடைய ஜெபங்களுக்கு பதில் கொடுக்கிற தேவன்!

No comments:

Post a Comment