Wednesday, January 23, 2013

கிரகாம் ஸ்டைய்ன்ஸ் (1941 - 2002)

நம்மில் எவ்வளவு பேர் இம் மனிதரை நினைவு வைத்திரிக்கிரோம்? இவருடைய தியாகம் நினைவு இருக்கிரதா? இவரை மட்டும் அல்ல, இவரோடு இரண்டு பிள்ளைகளும் எரித்து கொள்ளப்பட்டார்கள். இந்த மரணம் ஒரு இந்து அல்லது முகமதிய தலைவருக்கு நடந்திருந்தால்? பெரிய கலவரமோ அல்லது போராட்டமோ இந்தியா முழுவதும் வேடித்திருக்கும்.

ஆனால் நாம் அப்படி செய்ய அழைக்கபடவில்லை. வேதம் வன்முரையை தூண்டவோ போராட்டத்தை தூண்டவோ இல்லை. பல கிறிஸ்த்தவ ஆலையங்கள் சபைகள், நிருவனங்கள் ஆதியில் இவரை பற்றி பேசி பின்னர் மறந்து விட்டன.

நான் கோவையில் இந்திய நற்செய்தி மாணவ மன்றத்தில் இனைந்து ஊழியம் செய்த போது இம் மா மனிதரை நினைவு கூரும் வகையில் சில ஊழியங்கலை செய்து வந்தோம்

  • ஒவ்வொரு வருடமும் 22ம் ஜனவரி மாதம் ஊழிய திருநாள் ஆக அனுசரிக்கப் படவேண்டும்.
  • அந்நாளில் ஆலையங்கலிலும், ஊழிய நிறுவனங்களிலும் தேவ செய்தி ஊழிய தலைப்போடு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
  • அந்நாளில் ஒரு முழு நேர ஊழியக்காரரை குடும்பத்தோடு அழைத்து நேரம் செலவிடலாம்.
  • உங்கள் குடும்ப ஜெபத்தில் ஊழியத்தை பற்றியும், ஊழியத்தின் முக்கியத்துவத்தையும் குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளலாம்.
  •  குடும்ப ஜெபத்தில் ஊழியம் மற்றும் ஊழியகாரர்களுடைய சரித்திரங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
  • உங்கள் குழந்தைகளை அருகில் உள்ள ஊழிய ஸ்தாபனங்களுக்கு அழைத்து சென்று ஊழியம் செய்வதின் முக்கியத்துவத்தை பகிர்ந்து கொள்ளலாம்.
  • ஆழையங்கள் 22ம் தேதி ஒட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று 'ஊழிய ஞாயிறு" ஆக அனுசரிக்க பட வேண்டும்.
  • ஊழிய ஸ்தாபனங்களை  அழைத்து சபை மக்களோடு ஊழியத்தை பகிர்ந்து கொள்ளலாம்.
  • ஒரு ஊழிய குடும்பத்திற்கு பணமோ அல்லது பரிசு அனுப்பி மகிழ்விக்கலாம்.
  • உங்கள் வீட்டின் அருகில் missionary குழந்தைகள் படிப்பார்கள் என்றால் அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து அவர்களோடு நேரம் செலவிடலாம்.
  • ஒருவருக்கவாவது இயேசுவை பற்றி சொல்லலாமே?
இது நீங்கள் விரும்பினீர்கள் என்றால் உங்கள் சபைகளில் இதை பகிர்ந்து கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசிர்வதிப்பார். 
 
                                                                       

No comments:

Post a Comment