
.

.
மூன்றாம்
நாள் இரவில் ஜெபித்து மரணத்தை எதிர்பார்த்திருந்தார்.
திடீரென கிணற்றின் வாயை மூடியிருந்த கதவின் பூட்டை யாரோ
திறக்கும் சத்தம் கேட்டது. பேராவலோடு அண்ணாந்து
பார்த்தார். மேலேயிருந்த மனிதர் ‘கீழே விடப்படும்
கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள்’ என்றார். அதன்படியே
செய்தார். மேலே வந்ததும் அவர் சுந்தரை தூக்கி
கிணற்றிற்கு வெளியே விட்டார். நல்ல காற்றை சுவாசித்து
கர்த்தருக்கு நன்றி செலுத்தும் வேளையில் மறுபடியும்
கதவு மூடப்படும் சத்தம் கேட்டது. தனக்கு உதவிய நபருக்கு
நன்றி செலுத்தும்படி திரும்பினார். என்ன ஆச்சரியம்!
அங்கு யாருமில்லை. அவருடைய தோள்பட்டை வலியும் மறைந்து
போனது. அப்போது தன்னை காப்பாற்றியது கர்த்தர் என அறிந்து
தேவனுக்கு நன்றி செலுத்தினார்
No comments:
Post a Comment