Sunday, January 13, 2013

இயேசு ஏன் பிறந்தார்?

ஒரு ஊரை சேர்ந்த மக்கள் வித்தியாசமான ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதை கேள்விப்பட்ட ஒரு புகழ்பெற்ற மருத்துவர்
அந்த நோயை ஆராய்ந்து, நல்ல ஒரு மருந்தைக் கண்டுபிடித்தார். தனதுமிகுந்த அலுவல்கள் மத்தியிலும் அந்த மருத்துவர் ஒரு நாளை நியமித்து அன்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். இச்செய்தியைக் கேட்ட ஊரார் மிகவும் சந்தோஷப்பட்டனர். அவருக்கு பெரிய அளவில் மரியாதையும் வரவேற்பும் கொடுக்க விரும்பினர். அந்த நாளும் வந்தது. மக்கள் அவரை குதிரையில் ஏற்றி, வீதி வீதியாய ஊர்வலம் வந்து கௌரவப்படுத்தினர். பட்டடாசுகள் வெடித்தனர். பல பிரமுகர்கள் அவரை வாழ்த்திப் பேசி புகழாரம் சூட்டினர். பின் அவருக்கு அறுசுவை உணவுகளை தயாரிப்பதிலும், அவரை கவனிப்பதிலும் மூழ்கிப்போன அந்த மக்கள் அவரிடம் சிகிச்சை பெற கவனம் செலுத்தவில்லை. மாலை வந்தபோது மருத்துவர் அவசர வேலையாக ஊருக்கு திரும்பினார். அவர்களோ தொடர்ந்து நோயாளிகளாகவே இருந்தனர்.
.

இந்த ஜனங்கள் செய்தவை யாவும் நல்ல செயல்கள்தான். ஆயினும் முக்கிய
நோக்கத்திற்கு அவர்கள் முதல் கவனம் செலுத்தவில்லை. இதுப்போலவே
பாவிகளை இரட்சிக்க உலகத்தில் உதித்த இயேசுகிறிஸ்துவின் பிறப்பை
கோடிக்கணக்கானோர் வெகு விமரிசையாக வருடந்தோறும்
கொண்டாடுகிறார்கள். டிசம்பா மாதம் வந்துவிட்டால் விசேஷ
ஆராதனைகள், பாடல் நிகழ்ச்சிகள், வண்ண விளக்குகள், புத்தாடைகள்,
இனிப்பு, விருந்து என கொண்டாட்டத்தின் நாட்களாக அவை மாறி
விடுகின்றன. இன்னும் அநேக இடங்களில் குடித்து கும்மாளமிடுவதும்
கிறிஸ்மஸின் கொண்டாட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால்
இயேசுகிறிஸ்து எதற்காக வந்தார்? என் பாவத்திலிருந்து விடுதலையளிக்க
அல்லவா வந்தார். அதை நான் பெற்றிருக்கிருக்கிறேனா என்று அநேகர்
சிந்திப்பதில்லை.
.


பொதுவாக எல்லா மனிதர்களிடமும் பாவம் என்ற கொடிய நோய்
காணப்படுகிறது. அதன் வெளிப்பாடுகள் தான் தவறான சுபாவம், தவறான
இயல்பு. தவறான செயல், தவறான மனநிலை ஆகும். அந்த பொல்லாத
பிசாசின் கிரியைகளை அழித்து, நமக்கு விடுதலையளிக்கவே
இயேசுகிறிஸ்து உலகத்திற்கு வந்தார். அவர் நமது கனத்தையும்,
மரியாதையையும், காணிக்கையையும் பெறுவதை பிரதான நோக்கமாக
கொண்டு பூமிக்கு வரவில்லை, ஒரு விசேஷ செயலை ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் செய்ய வந்தார். அதாவது நமக்குள் இயங்கும் பாவத்தின்
ஆதிக்கத்தை அழித்து அப்புறப்படுத்தவே வந்தார்.

No comments:

Post a Comment