எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Sunday, January 13, 2013
ஜெபம் கேட்கப்படாததன் ஒரு காரணம்
ராஜன் ஒரு உதவியை எதிர்பார்த்து தன்
நண்பனுக்கு போன் செய்தான். அநத நண்பர் காவல் துறையிலே
உயர்ந்த பதவியில் இருந்தார். ராஜன் தொலைபேசியை
எடுத்தான். எண்களை சுழற்றினான். நண்பர் இன்னும் போனை
எடுக்கவில்லை. மணி அடித்து கொண்டேயிருந்தது. ராஜன் தனது
தேவையை மளமளவென்று சொன்னான். போனை வைத்து விட்டான்.
மறுநாள் 'ஐயோ நான் அவரிடம் கேட்டேனே அவர் எனக்கு ஒன்றும்
செய்யவில்லையே' என்று புலம்பினான். ஆனால் அவனோ அவரிடம்
பேசவே இல்லை. அவர் மறுமுனையில் போனை எடுக்கவே இல்லை. ஆம்
நம்மில் அநேகருடைய ஜெபமும் இப்படித்தான் இருக்கிறது,
'ஆண்டவரே இதுதான் என்னுடைய வேண்டுதல். இயேசுவின்
நாமத்தில் பிதாவே ஆமென்'. ஆண்டவர் அந்த முனையில் போனை
எடுக்ககூட இல்லை. இப்பொழுது நீங்கள் தேவனிடம்
ஜெபிக்கவில்லை. உங்களிடமே ஜெபித்திருக்கிறீர்கள். 'நான்
ஜெபித்து விட்டேன், தேவன் எனக்கு பதில் கொடுப்பார்' என
எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால் நாம் செய்யும்
ஜெபங்கள் கேட்க கூடாதபடி சில தடைகள் நம் வாழ்வில்
காணப்படுமேயானால், அதை திருத்தி கொள்ள முயற்சிக்க
வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment