.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Sunday, January 13, 2013
இயேசுவே வழி
ஆப்ரிக்காவின் அடர்ந்த காட்டு
பகுதிகளில் ஒருவர் சுவிசேஷ ஊழியம் செய்து வந்தார். தான்
தங்கியிருந்த கூடாரத்தை விட்டு அங்கு வாழும் பழங்குடி
மக்களை தேடி சென்றார். அங்கு அவர் தன் ஊழியங்களை
நிறைவேற்றி மாலை நேரத்தில் தான் தங்கியிருக்கும்
கூடாரத்திற்கு திரும்பி வரும்படி புறப்பட்டார். அது
எவ்வித பாதையும் இல்லாத காட்டு பகுதியாய் இருந்தபடியால்,
எந்த வழியாக தன் கூடாரத்தை சென்றடைவது என்று அறியாத அவர்
அலைந்து திரிந்தார். மிக ஆபத்தான அக்காட்டுப்பகுதியில்
கடைசியாக ஒரு சிறு குடிசை அவர் கண்களில் பட்டது. அது
அப்பழங்குடியினரில் ஒருவனது குடிசையாயிருந்தது. அவர்
அவனை அணுகி, தன் கூடாரத்திற்கு போகும் வழியை அறிந்து
கொள்ள அவன் தனக்கு உதவி செய்யக்கூடுமா என கேட்டார். உடனே
அம்மனிதன் அவருக்கு உதவி செய்ய சம்மதித்தான்.
அந்த
சுவிசேஷகர் அவனுக்கு தன் நன்றியை தெரிவித்து கொண்டு, 'சரி
நான் எந்த வழியாக செல்ல வேண்டுமென்று கேட்டார்.
அம்மனிதன் நடந்து வாரும் என்று சொல்லிவிட்டு, அவருக்கு
முன்பாக நடக்க தொடங்கினான. ஒரு மணி நேரம் நடந்த பின்னர்
அச்சுவிசேஷகர் மிகவும் களைத்து போனார். அவருடைய
இருதயத்தில் அம்மனிதனை பின்தொடர்ந்து சென்று கடைசியில்
தன் கூடாரத்தை அடைவது நிச்சயம் தானா என்ற கேள்வி
எழுந்தது. எனவே அவர் அம்மனிதனை நோக்கி, 'இவ்வழியாகத்தான்
போக வேண்டுமென்று உனக்கு நிச்சயமாக தெரியுமா? எந்த
பாதையும் என் கண்களுக்கு புலப்படவில்லையே' என்று
கேட்டார். அப்பழங்குடியான் அவரை பார்த்து, 'இவ்விடத்தில்
பாதை ஒன்றுமில்லை. நான்தான் பாதை' என்று கூறினான். மிஷனெரி
அவனை பின் தொடர்ந்து சென்று கடைசியில் காரிருள் சூழும்
முன்பாக தன் கூடாரத்தை சென்றடைந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், ...
No comments:
Post a Comment