.
இந்த குடும்ப போராட்டத்தில் இயேசுகிறிஸ்துவை இறுக பிடித்து கொண்ட மனைவி ஞாயிறு தோறும் ஒரு சபைக்கு சென்று ஆண்டவரை ஆராதித்து வந்தாள். ஆண்டவரை நம்பும்படியும், ஜெபிக்கும்படியும் கணவரிடம் அடிக்கடி கூறுவாள். ஆனாலும் அவளது வார்த்தைகளுக்கு அவர் சற்றும் செவிசாய்க்கவில்லை. ஒரு நாள் காலை பிள்ளைகள் இருவரும் பசியால் அழுதனர். அடுப்பில் உணவோ. கையில் காசோ இல்லை. பக்கத்து வீட்டில் போய் உணவோ கடனோ கேட்கவும் தன்மானம் ஒத்து வரவில்லை.
.
ஆகவே இடுப்பில் ஒரு பிள்ளையையும் கையிலொரு பிள்ளையையும் பிடித்து கொண்டு இருதயம் கனத்தவளாக கலங்கிய கண்களோடு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்று, ஒரு டம்ளர் பாலும், இரண்டு பன்னும் வாங்கி விட்டு, தயங்கியவளாக, 'அண்ணா காசு நாளைக்கு கொடுக்கிறேன்' என்று கூறினாள். டீக்கடைக்காரரோ 'என்னம்மா, இப்போதுதானே உன்கிட்ட நின்ற பெரியவர் காசு கொடுத்து விட்டு போனார்' என்றார். இவளால் நம்பி முடியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள். அப்படி யாருமில்லை. யாராக இருக்கும்? என்று குழம்பி கொண்டிருக்கையில் உன்னை போஷிக்கிற தேவன் நானல்லவா? என்று உள்ளத்தில் அழுத்தமாய் கர்த்தர் நினைவுப்படுத்தினார். அவளடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பாலில் பன்னை தொட்டு சாப்பிட்டு விட்டு திருப்தியாய் தூங்கினர் இரட்டையர்கள்.
No comments:
Post a Comment