Wednesday, February 13, 2013

தேவன் மேல் உள்ள நம்பிக்கை

சந்நியாசி ஒருவர் தனக்கு எண்ணெய் வேண்டுமென்று ஒரு ஒலிவ மரக்கன்றை நட்டார். அன்று இரவு ஜெபத்தில், 'கர்த்தாவே இந்த ஒலிவ மரக்கன்றின் மெல்லிய வேர்கள் தண்ணீர் குடித்து பெரிதாக, இதற்கு மழை தேவை. சிறு தூரலை அனுப்பும்' என்று ஜெபித்தார். தேவன் சிறு மழையை பெய்ய செய்தார். மறுநாள் 'ஆண்டவரே, என் மரத்திற்கு சூரிய வெப்பம் வேண்டும்' என்றார். சூரியனும் பிரகாசித்தது. இப்பொழுது 'இதன் பாகங்கள் உறுதிப்பட கடும் பனி வேண்டும்' என்றார். இதோ அந்த சின்ன மரத்தில் பனித்துளிகள் மின்னின. ஆனால் அந்த செடி சாயங்காலத்தில் வாடிப்போனது.


 இந்த சந்நியாசி தன்னை போலொத்த மற்றொரு சந்நியாசியிடம் சென்று தன் கதையை சொன்னார். அந்த சந்நியாசி 'நானும் ஒரு சின்ன மரம் நட்டேன். இதோ பாரும் அது செழித்து ஓங்குவதை. நான் மரத்தை தேவனிடம் நம்பிக்கையாய் விட்டுவிட்டேன். அதை உண்டாக்கினவர் அதற்கு இன்னது தேவை என்பதை என்னை விட நன்றாக அறிவார். நான் ஒரு நிபந்தனையும் வைக்கவில்லை. தேவனே அதற்கு புயலோ, வெயிலோ, காற்றோ மழையோ எது தேவையோ அதை அனுப்பும். சிருஷ்டித்த நீர் அதன் தேவைகளை அறிவீர்' என்று ஜெபித்தேன் என்றார். இந்த அழகான உவமையை சார்லஸ் கவ்மேன் அம்மையார் தனது புத்தகமொன்றில் எழுதியிருந்தார்.

No comments:

Post a Comment