Saturday, February 23, 2013

ஆனி ஆஸ்கவித் - நெல்லை பார்வையற்றோர் பள்ளி

ஆனி ஆஸ்கவித் என்னும் ஆசிரியர் 1887ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தின் கல்லூரி ஒன்றில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது பிச்சை எடுப்பதற்காக வந்தான் பார்வையற்ற சிறுவன் ஒருவன்.
ஆனி அவனிடம், “தம்பி இது கல்வி வழங்கும் இடம். உணவு வழங்கும் இடமல்ல. எனவே நீ வேறு இடத்திற்குச் சென்று பிச்சையெடு” என்றார்கள்.
பையன் மறுமொழியாக, அப்படியெனில் எனக்குக் கல்வி கொடுங்கள். என்றான்.
அந்த கேள்வி ஆனியின் உள்ளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கேள்வியின் தாக்கத்தால் அவனுக்கு கல்வி புகட்ட ஆரம்பித்தார். அது பள்ளியாக வளர்ந்தது. பிற்காலத்தில் மிகப்பெரிய பார்வையற்றோர் பள்ளியாக உருவெடுத்தது.
சிறுவன் கேட்டான். பெற்றுக் கொண்டான்.
அழுகின்ற குழந்தைக்குத் தான் பால் கிடைக்கும் என்ற பழமொழி நம் ஊரில் உண்டு. அதற்காக அழாமல் இருக்கும் குழந்தை பட்டினியையே உண்டு வாழும் என்பதில்லை. பசியாற தாமதம் நேரிடலாம்.
நீங்கள் கேட்பதற்கு முன்பாகவே உங்களுக்கு என்ன தேவை என்பது வானகத் தந்தைக்குத் தெரியும்” என்று சொல்லும் இயேசு “கேளுங்கள் தரப்படும்” என்றும் சொல்வதில் உள்ள அர்த்தத்தைக் கண்டுணர வேண்டும்.

No comments:

Post a Comment