Tuesday, February 26, 2013

பாவம் என்னை சுற்றி இருக்கிறது

கோட்டையூர் வீரவர்மன் தன்னுடைய ராஜ்யத்தை கட்டுகோப்பாக வைத்திருந்தான். எல்லையை சுற்றி அலங்கமும் அதன் மத்தியில் மன்னர் தங்கும் கொட்டையும் மிக அழகாக அமைத்திருந்தான். கோட்டையின் பின் புறம் இருந்த குளத்தில் அவ்வப்போது பொழு போக்குவான்.

ஒரு நாள் இரவு ஒரு சத்தத்தை கேட்டான். அது அவனை தூங்கவே விடவில்லை. மிகவும் எரிச்சலோடு காலையில் எழுந்து வேலைகாரர்களிடம் அந்த சத்தத்தை குறித்து விசாரித்தான். அதற்கு வேலைக்காரர்கள் "இது கோட்டைக்கு பின்புறம் உள்ள குளத்திலிருந்து வரும் தவளைகள் சத்தம். இது பனிக் காலம் ஆதலாம் அப்படி தான் சத்தமிடும்" என்றனர்.

இந்த சத்தத்திலிருந்து எப்படி விடுபடுவது என்று தனது மந்திரிகளை நாடினான். மந்திரி ஒருவன் ஒவ்வொன்றாக பிடித்து நெருப்பில் போடலாம் என்றான். அப்படியே செய்ய உத்தரவிட்டான் மனனன். காரியங்கள் நடந்தது. அடுத்த இரவும் வந்தது. மீண்டும் சத்தமும் வந்தது.

மறுபடியும் ஆலோசனை கூட்டத்தை கூட்டினான். அப்போது ஒரு அறிவாளி மந்திரி குளத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் மாற்றிவிடலாம் அப்போது தவளை எல்லாம் ஒழிந்துவிடும் என்றான். அப்படியே செய்யுமாறு உத்தரவிட்டான். ம்ஹும் சத்தம் நின்றபாடில்லை ஆகவே மன்னன் மிகவும் கோபமடைந்தான்.

மன்னன் தனது நாட்டின் குடிகளுக்கு பொதுவான அறிவிப்பு கொடுத்தான். தவளை சத்தத்தை ஒழிப்போருக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும் என்று பிரகடனம் செய்தான்.

ஒரு முதியவர் மன்னனிடம் வந்து, "உங்கள் நிம்மதியான தூக்கத்திற்கும், தவளை சத்தத்திலிருந்து விடுபடவும் என்னிடம் ஒரு வழி உண்டு" என்றார். "தயவு செய்து சொல்லுங்கள்" என்றான் மனனன்.

"நீங்கள் நித்திரை செய்யும் போது உங்கள் இரண்டு காதுகளிலும் பஞ்சு சுருளை வைத்தால் போதும். எந்த சத்தமும் இல்லாமல் நல்ல நித்திரை உங்களுக்கு உடனே கிடைக்கும்" என்றார்.

இந்த கதையை வாசித்துக்கொண்டிருக்கும் எனது அருமையானவர்களே! எங்கு பார்த்தாலும் பாவம் என்னை சுற்றி இருக்கிறது என்கிறீர்களா?

குளம் என்றால் தவளை இருக்க தான் செய்யும். நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.(1 யோவான் 5:19)

நாமோ நம்முடைய கண்களையும், இருதயத்தையும், செவியையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அர்ப்பணித்து தூய ஆவியானவரோடு நாமும் இணைந்து செயல்படும் போது எல்லா பாவத்திற்கும் விலகி பரிசுத்தமாக வாழ முடியும்.

For more Stories:

kadambamtamil.blogspot.com

No comments:

Post a Comment