Saturday, February 23, 2013

இயேசுகிறிஸ்துவின் அன்பு

பாலத்தில் நடந்து கொண்டிருந்தார்கள் தந்தையும், மழலை மகளும். கீழே ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தந்தை மகளிடம் சொன்னார்

“மகளே.. எனது கையைப் பிடித்துக் கொள். அப்போது விழமாட்டாய்”

மகள் சொன்னாள் ,’ இல்லை அப்பா.. நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்”

தந்தைக்கு ஆச்சரியம். “இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது ? நீ பிடித்தால் என்ன ? நான் பிடித்தால் என்ன ” ஆச்சரியப்பட்ட தந்தை கேட்டார்.

“நான் உங்கள் கையைப் பிடித்தால், ஒரு வேளை நான் கையை விட்டு விடும் வாய்ப்பு உண்டு. பாதை வழுக்கினால் கூட நான் கையை விட்டு விடுவேன். ஆனால் நீங்கள் என் கையைப் பிடித்தால், என்ன தான் நடந்தாலும் நீங்கள் என் கையை விடமாட்டீர்கள் எனும் நம்பிக்கை எனக்குண்டு” மகள் சொன்னாள்.

தந்தை நெகிழ்ந்தார். மகளை தூக்கி மார்போடணைத்துக் கொண்டு நடந்தார்.

இறைவன் சொல்கிறார்

“நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை. உன்னைக் கை விடுவதும் இல்லை”

இயேசு நமது கைகளை இறுகப் பிடித்து நடக்கிறார். நாமோ அவருடைய கையை உதறிவிட்டு பல வேளைகளில் ஓடி விடுகிறோம்.

எதையும் தனியாய் செய்யும் துணிச்சலும், வீராப்பும் இருக்கும் வரை இறைவனின் கையை விட்டு உதறித் தள்ளுவதையே அனைவரும் விரும்புகிறோம்.

No comments:

Post a Comment