Wednesday, February 13, 2013

திறந்த வாசல் - விசுவாசத்தோடு திறவுங்கள்

ஒரு அரசன் தன்னுடைய அரண்மனைக்கு ஒரு பிரதம மந்திரி தேவையாயிருந்தபடியால், அதற்கான சரியான ஒரு மனிதனை தேடினார். தேடி தேடி கடைசியில் மூன்று பேரை கண்டுபிடித்து, அவர்களில் யார் மிகவும் புத்திசாலியாக இருக்கிறார்களோ, அந்த மனிதனை பிரதம மந்திரியாக்க தீர்மானித்தார். அதன்படி, ஒரு கதவில் ஒரு பெரிய பூட்டை உண்டு பண்ணி அதை மாட்டி, யார் முதலில் கதவை திறக்கிறார்களோ, அவர் பிரதம மந்திரியாவார் என்று அறிவித்தார். 

அதன்படி, மூவரும் அதை திறப்பதற்கு முயற்சித்தார்கள். அவர்களில் இருவர், தங்களுக்கு தெரிந்த கணக்கு எல்லாம் போட்டு பார்த்து, எப்படி திறப்பது என்ற மண்டையை உடைத்து கொண்டிருந்தார்கள். மூன்றாவது மனிதனோ, ஒன்றும் செய்யாமல், ஒரு நாற்காலியில் அமர்ந்து, எதையோ யோசித்து கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து மற்ற இருவரும் இன்னும் எப்படி திறப்பது என்று மண்டையை உடைத்து கொண்டிருந்தபடியால், இவர் போய், அந்த கதவின் கைப்பிடியை தொட்டார். உடனே கதவு திறந்துகொண்டது. இந்த கதவு பூட்டப்படவேயில்லை!
.
இந்நாளிலும் தேவன் நமக்கு முன்பாக திறந்த வாசலை வைத்திருக்கிறார். ஆனால் நாம் அதை திறக்கக்கூடாதபடிக்கு, பயம், அவிசுவாசம், அறியாமை, பெருமை போன்ற அநேக பூட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் அது பூட்டப்படாமல் இருக்கிறது என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம். விசுவாசத்தோடு நாம் அதைப் போய் திறந்தால், வெற்றி, நல்ல நிலைமை, நல்ல சந்தர்ப்பங்கள் என்று அநேக காரியங்கள் காத்திருக்கின்றன. உங்கள் வாழ்க்கையிலும், பூட்டப்பட்ட கதவுகள் இருக்கின்றனவா? விசுவாசத்தோடு திறவுங்கள்.

No comments:

Post a Comment