Wednesday, August 15, 2012

என்னங்க, குடும்பத்துல பிரட்சனை கண்டிப்பா வரும்

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து
உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய
ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்.
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள்
இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து
இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். - (பிலிப்பியர் 4:6-7).

ஒரு முறை ஒரு இராஜா தன் நாட்டில் உள்ள ஓவியர்களுக்கு ஒரு போட்டியை வைத்தார். அதன்படி, ஒரு அமைதியான, அந்த படத்தை பார்த்தவுடன் சமாதானம் வரத்தக்கதாக அவர்கள் ஒரு ஓவியத்தை வரைந்து காட்ட வேண்டும். அநேகர் அந்த போட்டியில் கலந்து கொண்டார்கள். இறுதியில் இரண்டு ஓவியங்கள் மாத்திரம் தெரிந்தெடுக்கப்பட்டது.
.
அதில் ஒரு ஓவியத்தில் அமைதியான ஒரு ஏரி, அதை சுற்றிலும் அழகான மரங்கள், அதற்கு பின்னால் நீல நிற மலைகள், அவை கண்ணாடியை போல அந்த ஏரியில் பிரதிபலித்தன. மேலே நீல நிற வானில் தவழ்ந்து செல்லும் மேகங்கள் என மிகவும் அருமையாக, அழகாக அந்த சித்திரம் தீட்டப்பட்டிருந்தது. யார் அதை பார்த்தாலும், இதற்கு தான் முதல் பரிசு கிடைக்கும் என்று சொல்லும்படியாக இருந்தது.
.
மற்ற ஓவியம், இதிலும் மலைகள் இருந்தன, ஆனால் அவை கரடுமுரடாக,
ஒழுங்காக இல்லாமல் இருந்தது. வானத்திலிருந்து மழை கொட்டி கொண்டிருந்தது. மின்னல்கள் வானத்தை கிழித்து கொண்டிருந்தன.
மலையின் நடுவில் ஒரு நீர்வீழ்ச்சி, அதில் நீர் ஆக்ரோஷமாக பாய்ந்து
கொண்டிருந்தது. இந்த படத்தில் அமைதி என்று சொல்வதற்கு இடமே
இல்லை. அதை ராஜா பார்த்து கொண்டிருந்தபோது, அந்த நீர்வீழ்ச்சியின்
பக்கத்தில் ஒரு பாறையின் இடுக்கில் ஒரு பறவை தன் கூட்டை
கட்டியிருந்தது. அந்த நீர்வீழ்ச்சியின் ஓசைகளுக்கும், பாய்ச்சலுக்கும் நடுவில்
அந்த கூட்டை கட்டியிருந்த பறவை தன் குஞ்சுகளுடன் அமைதியாக
அமர்ந்திருந்தது.
.
இராஜா இரண்டாவது படத்தையே முதல் பரிசுக்கு தேர்ந்தெடுத்தார். ஏன்
தெரியுமா, அத்தனை இரைச்சல்களுக்கும் மத்தியில் அந்த பறவை தன்
கூட்டை கட்டி, அங்கு அமைதியாக அமர்ந்திருக்கிறதே அதுவே
உண்மையான அமைதியாகும் என முடிவெடுத்து அந்த படத்திற்கே முதல்
பரிசை கொடுத்தார்.

No comments:

Post a Comment