Wednesday, August 8, 2012

வேதத்தின் புதையல்

ஒரு வயதான மூதாட்டியை அவருடைய சொந்தக்கார மனிதர் ஒருவர் கவனித்து வந்தார். அந்த மூதாட்டி மரிக்கும்போது, உயிலில் அவருக்கு ஒரு வேதாகமத்தையும், அதிலுள்ள அனைத்தும், மற்றும் தான் இருக்கும் எஸ்டேட்டை எல்லா கடன்களும் அடைத்தப்பின் மிச்சம் இருப்பது எல்லாம் அந்த மனிதருக்கு சேரும் என்று எழுதியிருந்தார்கள். ஆனால் அடக்க ஆராதனைக்குப்பின், எல்லா கடன்களும் அடைக்கப்பட்ட பின்பு, அந்த மனிதருக்கு சேர்ந்தது, மிகவும் குறைவான தொகைதான். அந்த மனிதர் அந்த வேதாகமத்தை எடுத்து மேலே ஒரு இடத்தில் வைத்து விட்டு, பின் மறந்து போனார்.
.
முப்பது வருடங்கள் கழித்து, தன் மகனோடு தங்குவதற்காக மேலே இருந்த பொருட்களை எடுத்தபோது, அவர் கண்களில் வேதாகமம் தட்டுப்பட்டது. அதை அப்போதுதான் அவர் திறந்து பார்க்க ஆரம்பித்தார். அதில் அடுக்கடுக்காய் டாலர் நோட்டுகள் ஆயிரக்கணக்காக ஒவ்வொரு பக்கத்திலும் வைக்கப்பட்டிருந்தது. வேதத்தை பிரித்து படிப்பவர்க்கே அந்த பணம் என்று அந்த மூதாட்டி வைத்து போயிருந்தார்கள். அதை அறியாதவராக, ஒரு ஏழையாய், தன்னை வெறுமையாய் விட்டு சென்றதாக அந்த மூதாட்டியின் மேல் கோபம் கொண்டவராக, முப்பது வருடங்களை கழித்திருக்கிறார்.

No comments:

Post a Comment