Thursday, August 2, 2012

பாக்கஸ் - முழங்காலில் நிற்க ஆரம்பிப்போம்

ஹேமில்ட்டர் என்ற வேத கலாசாலையிலிருந்த மூத்த ஊழியரான பாக்கஸ் என்பவர் மரிக்கும் தருவாயில் இருந்தார். மருத்துவர் பாக்கஸை சோதித்து விட்டு, அறையின் வாசலில் நின்று கொண்டிருந்த அவரது நண்பர்களிடத்தில் ஏதோவொன்றை மிக அமைதியாக சொல்லி விட்டு சென்றார். டாக்டர் சென்றவுடன் படுக்கையிலிருந்து பாக்கஸ், தன்னுடைய நண்பர்களை கையசைத்து கூப்பிட்டு, 'டாக்டர் சொன்னதை என்னிடம் மறைக்காமல் கூறுங்கள்' என்றார். இன்னும் அரைமணி நேரத்திற்கு மேல் உயிருடன் இருக்க முடியாது என்று டாக்டர் சொன்னதை கண்ணீர் மல்க கூறினர். உடனே பாக்கஸ், 'அப்படியானால் என்னை படுக்கையிலிருந்து எடுத்து முழங்காலில் நிறுத்துங்கள். என் வாழ்வின் கடைசி நிமிடங்களில இந்த உலகிற்காக ஜெபிப்பதில் செலவிட விரும்புகிறேன்' என்றார். ஒரு சில நிமிடங்களில் முழங்காலில் நின்றபடியே அவரது உயிர் பிரிந்தது. பல வருடங்களாக தான கடைபிடித்து வந்த ஜெப பழக்கத்தை உயிர் பிரிகிற கடைசி மணித்துளிகளிலும் தவறாமல் கடைபிடித்தார்.

No comments:

Post a Comment