Sunday, August 19, 2012

தேவனை நம்புங்கள், பிரட்சணை சிறியதாகிவிடும்.

ஒருமுன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் தன் நாட்டு மக்களிடம் சிக்கலான கேள்விகளை கேட்டு, அதற்கு பதிலளிக்கும் திறமைசாலிகளுக்கு பொன்னும், பொருளும் பரிசளித்து வந்தார். ஒருமுறை தன் சிங்காசனத்திற்கு முன் ஒரு கோடு ஒன்றை வரைந்து அதை தொடவோ, அழிக்கவோ செய்யாமல் அக்கோட்டை சிறியதாக்க வேண்டும் என்றார். கேட்டவர்கள் மிகவும் குழப்பமடைந்தனர்.
.
அவ்வரசனிடம் ஒரு மதிநுட்பம் நிறைந்த ஒரு மந்திரி இருந்தார். அவர்
அரசனிடம் வந்து, 'என்னால் இக்கோட்டை அழிக்காமல் சிறியதாக்க முடியும்' என்றார். எல்லோரும் மிக ஆச்சரியமாய் இவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்த்து கொண்டிருந்தார்கள்.
.
அவர் ஒரு எழுதுகோலை எடுத்து அந்த கோட்டிற்கு அருகே ஒரு பெரிய கோட்டை வரைந்தார். பின்பு அரசனை நோக்கி, 'அரசே, நான் வரைந்த பெரிய கோட்டினால் உங்கள் கோடு சிறியதாகி விட்டது பார்த்தீர்களா?' என்றார். அரசர் அவரது மதிநுட்பத்தை பார்த்து வியந்து பரிசுப் பொருட்களை வாரி வழங்கினார்.

No comments:

Post a Comment