அவர்களோ நிறுத்தாமல், விளையாட்டை ஆரம்பிப்பதை கண்ட அவர், அந்த அரங்கத்திற்குள் குதித்தார். ஒரு சிறு உருவம் கிளாடியேட்டர்களின் முன் ஓடி, இயேசுவின நாமத்தில் நிறுத்துங்கள் என்று கூறுவதை பார்த்த
கூட்டத்தினர், அது ஏதோ ஜோக் (Joke) என்று நினைத்து சிரிக்க ஆரம்பித்தனர்.
ஆனால் அது உண்மை என்று அறிந்த போது, அவர்களுக்கு கோபம் வர ஆரம்பித்தது. டேலிமாகக்ஸ் அவர்களோடு நிறுத்துங்க்ள என்று கெஞ்சுவதை கண்ட ஒருவன், அவரை
தன்னிடம் இருந்த வாளினால் குத்தினான். அவர் அப்படியே அங்கு தரையில்
இரத்தம் பாய சரிந்தார். முற்றவர்கள்
அவர்மேல் கல்லெறிய ஆரம்பித்தனர். அப்போதும் அவர் அவர்களிடம் இயேசுவின்
நாமத்தில் தயவுசெய்து இந்த சண்டையை நிறுத்துங்கள் என்று கூறியபடியே
மரித்தார்.
அப்போது
யாரும் எதிர்பாராத ஒரு வித்தியாசமான காரியம் நடைபெற்றது. அங்கிருந்த
கிளாடியேட்டர்கள் அந்த மரித்த சடலத்தை பார்த்தபடி நின்றிருந்தனர். அந்த
கொலோசியம் முழுவதும் அமைதி நிலவியது. அங்கு முதலாவது இருந்த வரிசையில், ஒரு மனிதன் எழுந்து வெளியேற ஆரம்பித்தான். மற்றவர்களும் அவனை
பின்தொடர்ந்து வெளியேற ஆரம்பித்தனர். மரண அமைதியில் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
கி.பி. 391 ல் நடந்த அந்த சம்பவத்திற்கு பின், அங்கு மீண்டும் அந்த கிளாடியேட்டர்கள் அந்த கொலோசியத்தில் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொல்வது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அல்லேலூயா! இவை எல்லாம்
எப்படி நடந்தது, ஒரு மனிதன் தேவனின் நாமத்தில் பேசியதால்!
No comments:
Post a Comment