Monday, December 10, 2012

அதிருப்தி

பிரபல பத்திரிக்கை ஒன்றில் ஒரு காட்டூன் படம் வெளிவந்தது. அதில் இரண்டு புல் வெளிகள். ஒரே மாதிரியான பசுமையான புல்தரை, ஒரே அளவாகவும் இருந்தது. இந்த இரண்டு புல்வெளிகளுக்கும் நடுவே ஒரு வேலி இருந்தது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அந்த கார்ட்டூன் படத்தின் விசேஷம் என்ன தெரியுமா? வலது புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு வேலிக்குள் தன் தலையை விட்டு இடது பக்கத்தில் மேய முயல்கிறது. அதேப்போல இடது பக்க மாடு வலது பக்கம் மேய முயல்கிறது. இந்த இரண்டு மாடுகளுக்கும் தனது புல்வெளியை காட்டிலும் அடுத்த புல்வெளி பசுமையாக தோன்றுகிறது. 'இக்கரைக்கு அக்கரை பச்சை' இரண்டு மாடுகளின் தலைகளும் வேலியில் மாட்டிக்கொண்டது. இந்தபடத்திற்கு கொடுக்கப்பட்ட தலைப்பு 'அதிருப்தி'.
.
இங்கே சித்தரிக்கப்பட்ட மாடுகள் மனிதர்களைத்தான் குறிக்கிறது. மனிதனுடைய கண்களுக்கு அடுத்த வீட்டில் உள்ள பொருடகள் மீது எப்பொழுதும் ஒரு கண் உண்டு. இதோடு தொடர்புடைய உவமை ஒன்றும் வேதத்திலே உண்டு. தோட்டத்தில் வேலை செய்ய எஜமான் அனேகரை அழைக்கிறார். சிலர் காலை 8 மணிக்கே வந்து வேலையை ஆரம்பிக்கின்றனர். இன்னும் சிலர் 10 மணிக்கு, சிலர் 12 மணிக்கு வேலைக்கு வந்தனர். கூலி 100 ரூபாய் பேசிவிட்டார். அவர்கள் மனப்பூர்வமாய் சம்மதித்த பின்புதான் வேலையை ஆரம்பித்தனர். வேலை முடிந்து எல்லாருக்கும் 100 ரூபாய் கூலி கொடுக்கப்பட்டது. அப்பொழுது முந்தி வேலைக்கு வந்தவர்கள், '8மணிக்கு வந்த எங்களுக்கும் 12 மணிக்கு வந்தவர்களுக்கும் ஒரே கூலி எப்படி கொடுக்கலாம்' என புகார் செய்தனர். அதற்கு எஜமான், 'அது என் இஷ்டம், உனக்கு என்ன கூலி கொடுப்பதாக சொன்னேனோ அதை உனக்கு கொடுத்து விட்டேன். மற்றவர்களுக்கு கொடுக்கும கூலியை பார்க்கவோ, அதை உன்னுடைய கூலியோடு ஒப்பிடுவதோ உனக்குரியதல்ல, நான் தாராள மனப்பான்மையுடன் செயல்பட்டால் நீ வண்கண்ணனாக இருக்கலாமா?' என்று பதில் கூறுகிறார்.

No comments:

Post a Comment