.
அந்த வழியாக ஒரு மனிதன் கடந்து போனார். அப்போது சில நாணயங்களை எடுத்து அவன் வைத்திருந்த பாத்திரத்தில் போட்டு விட்டு, அந்த சிறுவனின் பக்கத்தில் இருந்த போர்டில் சில எழுத்துக்களை எழுதினார்.
.
சற்று நேரத்தில் அவனது பாத்திரம் நாணயங்களால் நிரம்ப ஆரம்பித்தது. சிலர் நின்று அவனுக்கு பணத்தை கொடுத்து சென்றார்கள். சாயங்கால வேளையில் அந்த போர்டை மாற்றி எழுதின மனிதர் என்ன நடக்கிறது என்று அறிய வந்தார். அவரது காலடி சத்தத்தை கேட்டு, அவர்தான் என்று அறிந்த சிறுவன், 'ஐயா நீர் யார்? நீர் என்ன எழுதினீர்? எனக்கு பணம் குவிகிறதே' என்று கேட்டான்.
.
அதற்கு அவர், 'நான் உண்மையைதான் எழுதினேன், நீ எழுதினதையே சற்று மாற்றி எழுதினேன்' என்றார். அதற்கு சிறுவன் 'என்னதான் எழுதினீர்கள் சொல்லுங்கள்' என்றான். அதற்கு அவர், 'இந்த நாள் இனிய நாள், அழகு மிகுந்த நாள், என்னால்தான் அதை பார்க்க முடியவில்லை' இதைத்தான் நான் எழுதினேன் என்றார்.
.
முதலாவது எழுதியிருந்த பலகையில் நான் குருடன் எனக்கு உதவுங்கள் என்று மாத்திரம் எழுதியிருந்தது. ஆனால் மற்றதிலோ இதை காணும் மக்களாகிய நீங்கள் எத்தனை கொடுத்து வைத்தவர்கள், எனக்கு அந்த பாக்கியம் இல்லையே என்று மக்களை அவர்களது பாக்கியத்தை உணர வைத்தது.
No comments:
Post a Comment