Thursday, December 20, 2012

அற்பமாய் எண்ணப்பட்டவள் - தேவன் தெரிந்துகொண்டார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாள் வசந்தா. தோற்றத்திலும், பேச்சுத்திறமையிலும் யாருடைய கவனத்தையும் ஈர்க்க இயலாதவள். உலகத்தாரால் ஏன் குடும்பத்தாரால் கூட அற்பமாய் எண்ணப்பட்டவள். ஆனால் ஆண்டவருடைய பார்வையில் விலையேறப் பெற்றவளாய், ரூபவதியாய் இருந்தாள். காரணம் கர்த்தருக்கு பயப்படுவதிலும், வேத வசனங்களுக்கு கீழ்ப்படிவதிலும் அவ்வளவு உண்மையாய் காணப்படுவாள். ஒரு அலுவலகத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது. அவளது அப்பாவித்தனத்தினிமித்தம் அனைவரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானாள். அவர்கள் தங்கள் வேலையையும் அவ்வப்போது வசந்தாவின் தலையில் கட்டிவிடுவர். எதுவுமறியாத வெகுளியாக அதையும் முகமலர்வோடு செய்து முடிப்பாள்.
.
அவளுடைய திருமணக்காரியமும் ஒரு எட்டாக் கனியாகவே இருந்தது. இதனிமித்தம் வீட்டிலுள்ளவர்களுக்கு அவள் பாரமாகவே இருந்தாள். பெண் பார்க்க வந்த மாப்பிளளை; வீட்டாரும் அவளது வெளித்தோற்றத்தை வைத்து விலகிச் சென்றனர். ஆனால் மனிதன் பார்க்கிறபடியல்ல, இருதயத்தை பார்க்கிற தேவன் அவளுக்கு யாரும் எதிர்பாராத, பிரகாசமான வாழ்வை கொடுத்தார். அந்த மணமகன் கர்த்தருக்கு பயப்படுகிறவராய், அவளது உள்ளான அழகில் பிரியப்படுகிறவராய்,வெளித்தோற்றத்தையும் முழு மனதாய் ஏற்றுக் கொள்கிறவருமாய் அமைந்தார். இன்றும் அவர்கள் மனமகிழ்வோடு குடும்பமாய் வாழ்கிறார்கள்.
.
இந்த உலகத்தாரின் பார்வையில் அற்பமயாய் எண்ணப்படுபவர்கள் யாரோ, அவர்களை தூசியிலிருந்தும், குப்பையிலுமிருந்து எடுத்து அவர்ளை உயர்த்துவது தேவனுடைய உன்னத திட்டமாகும். காரணம் ஞானிகளும், பலமுள்ளவர்களும் தேவனுக்கு முன்பாக பெருமை பாராட்டாதபடிக்கு அப்படி செய்தார் (1 கொரிந்தியர் 1:26-31) என்றுவேதம் கூறுகிறது. உலகம் ஞானமுள்ளவர்களை, கல்விமான்களை, பெலமுள்ளவர்களை, திறமையானவர்களை, அழகானவர்களை தெரிந்தெடுத்து பதவிகளையும், பொறுப்புகளையும் கொடுக்கிறது. இது உலகத்தின் தெரிந்தெடுப்பு.

No comments:

Post a Comment