Monday, December 10, 2012

இடுக்கமான வழி - பரிதாபமான முடிவு

ஒரு புகழ்பெற்ற ஊழியர் தெருவில் நடந்து சென்று கொண்ருந்தபோது, ஒரு கூட்டமான பன்றிகள் ஒரு மனிதனை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தன. அவருக்கு ஆச்சரியம், எப்படி இந்த பன்றிகள் அந்த மனிதனை பின் தொடர்கின்றன என்று. என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காக அவரும் அந்த பன்றிகளின் பின்சென்றார். அவருடைய மிகப்பெரிய ஆச்சரியமாக அந்த பன்றிகள் அந்த மனிதனை பின்தொடர்ந்து, தங்களை கொல்லும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அவர் அந்த மனிதனை பார்த்து, 'எப்படி இந்த பன்றிகளை எந்த பிரச்சனையும் இல்லாமல் இந்த கொல்லும் இடத்திற்கு கொண்டு வந்தீர்கள்' என்று கேட்டார். அதற்கு அந்த மனிதன், 'இதோ என் கையிடுக்கில் அவரை கொட்டைகள் இருக்கின்றன. அவைகளை அவ்வப்போது கொஞ்சம் கீழே போடுவேன். அதை சாப்பிட தொடர்ந்து வந்த பன்றி கூட்டம் தாங்கள் எங்கு கொண்டு போகப்படுகிறோம் என்று அறியாமலேயே என் பின்னே வந்து விட்டது' என்றார்.

பிசாசானவனும் தன் கையில் வைத்திருக்கும் சிற்றின்பங்களை அவ்வப்போது கீழே போடுகிறான். அவன் எதற்கு போடுகிறான் என்று அறியாதபடி பாவத்தில விழும் ஜனக்கூட்டம் அவன் கொடுக்கும் சிற்றின்பத்திற்கு அடிமையாகி, நரகத்திற்கு நேராக சென்று கொண்டிருக்கிறார்கள். எத்தனை பரிதாபம்?

No comments:

Post a Comment