Monday, December 10, 2012

பாய்ச்சினால் பாய்ச்சப்படும்

ஒரு விவசாயியின் நிலம் ஒவ்வொரு வருடமும் நன்கு விளைந்த நிலமாகவும், அவருடைய கதிர்கள் சிறந்ததாகவும் தெரிந்தெடுக்கப்பட்டு அவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன. அதை கண்ட ஒரு பத்திரிக்கை நிருபர், அவரிடம் சென்று, 'எப்படி உம்முடைய நிலம் மாத்திரம் எப்போதும் சிறந்த கதிரை கொடுக்கிறது? அதன் இரகசியம் என்ன?' என்று கேட்டார்.
.
அதற்கு அவர், 'நான் என்னுடைய பயிரின் விதையை என்னுடைய நிலத்தின் பக்கத்தில் விதைப்பவர்களுக்கும் கொடுக்கிறேன்' என்றார். அதற்கு அந்த நிருபர், 'உம்முடைய சிறந்த விதையை கொடுப்பதினால் அவர்களும் உம்மோடு போட்டியிடுவார்களே அதனால் உமக்கு நஷ்டமில்லையா? என்று கேட்டார். அதற்கு விவசாயி, 'அதில்தான் இரகசியம் இருக்கிறது. நான் கொடுக்கும் விதையை அவர்கள் விதைத்து அவை கதிராக வரும்போது, காற்றானது அதிலிருந்து மகரந்தத்தை எடுத்து ஒவ்வொரு வயல் நிலத்திலும் வீசுகிறது. இப்போது என் அயலக நிலத்துக்காரர்களின் விதைகள் மோசமானதாக இருந்தால் அதிலிருந்து வரும் மகரந்தமும் மோசமானதாக இருக்கும். அப்போது மகரந்த சேர்க்கை நிகழும்போது என் கதிர்களும் மோசமானதாக இருக்கும். நான் என் நிலத்திற்கு நல்ல கதிரை எதிர்ப்பார்த்தால் என் பக்கத்து நிலத்துக்காரர்களுக்கும் நல்ல விதையை கொடுக்க வேண்டும். அப்போது நல்ல மகரந்த சேர்க்கையால் என் கதிர்களும் நன்றாக இருக்கின்றன' என்றார். அவர் வாழ்க்கையின் தத்துவத்தை நன்கு அறிந்தவராக இருந்தார். அவருக்கு நல்ல கதிர் கிடைக்க வேண்டும் என்றால் அவரது பக்கத்து நிலத்துக்காரருக்கும் நல்ல விதை கிடைக்கவேண்டும் என்ற நல்ல எண்ணம் அவருக்கு இருந்தது.

No comments:

Post a Comment