ஒரு மனிதர் அநேக இடங்களில் வேலை தேடியும்
கிடைக்காமல், பணமோ வசதியோ இல்லாமல், வறுமையினால்
நிறைந்தவராய், ஒரு நாள் கடற்கரையில் நடந்து சென்று
கொண்டிருந்தார். கடலின் ஓரமாய் அவர் நடந்து சென்றபோது,
அவருடைய காலில் ஒரு பாட்டில் இடறியது. அதை அவர்
பார்த்தபோது, அதற்குள் ஒரு கடிதம் மடித்து
வைக்கப்பட்டிருந்தது. அந்த பாட்டிலை உடைத்து
பார்த்தபோது, 'இந்த பாட்டிலை கிடைக்க பெறும்
அதிர்ஷ்டசாலிக்கும், என்னுடைய வக்கீலுக்கும் என் முழு
எஸ்டேட்டையையும் எழுதி வைக்கிறேன். இருவரும் சரிசமமாக
பகிர்ந்து கொள்ளவும்' என்று எழுதப்பட்டிருந்தது. அதை
அப்படி எழுதி அனுப்பியவர் டெய்ஸி சிங்கர் அலெக்ஸாண்டர்
என்னும் சிங்கர் தையல் மிஷன் உரிமையாளர்களில் ஒருவர்.
அவர் 12 வருடங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள தேமஸ் ஆற்றில்
ஒரு பாட்டிலில் இவ்வாறு எழுதி போட்டிருந்தார். அது
பன்னிரண்டு வருடங்கள் கழித்து, கலிபோர்னியாவில் உள்ள
கடலில், ஜேக் உர்ம் (Jack Wurm) என்னும் வறுமையில் வாடிக்
கொண்டிருந்தவரின்; கைகளில் கிடைத்தது. அது அவரை ஒரே
நாளில் மிகவும் பெரிய பணக்காரராக மாற்றியது. எத்தனை
ஆச்சரியம் பாருங்கள்!
டெய்சி சிங்கர் தன் ஐசுவரியத்தை, தன் உயிலை ஒரு
பாட்டிலில் போட்டு வைத்தார், ஏனெனில் அவரால் தான்
செல்லும் இடத்திற்கு எந்த ஐசுவரியத்தையும் கொண்டு போக
முடியாது. அதே போல ஜேக்கும் எதையும் எடுத்துக் கொண்டு போக
முடியாது. இந்த உலக ஐசுவரியம் இந்த உலகத்தோடு முடிந்து
விடுகிறது. எத்தனை பெரிய ஐசுவரியவானாயிருந்தாலும்
ஒன்றையும் தான் மரிக்கும்போது, தனக்காக ஒரு வீட்டை
கட்டவோ, தனக்காக சொத்து சேர்த்து வைக்கவோ ஒரு பைசாவையும்
கூட எடுத்துச் செல்ல முடியாது.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
-
ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்த குறித்து பாதித்து கொண்டிருந்தேபாது, அதில் பங்கெடுத்த சில சேகாதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ள...
No comments:
Post a Comment