Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Friday, December 5, 2014

தகப்பனின் அன்பு

ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் அவளை அன்புடன் வளர்த்து வந்தார். அந்த பிள்ளையும் அந்த தகப்பனிடம் அன்புடன் வளர்ந்து வந்தாள். ஒரு நாள் அவர் அந்த பிள்ளையை பார்த்து, 'நீ இன்று வெளியில் விளையாட போக வேண்டாம்' என்று கூறினார். அவள் தினமும் தன் தோழிகளோடு விளையாடுவது வழக்கமாக இருந்தது. அவளும் தன் தகப்பனிடம் சரி என்று கூறிவிட்டு, தன் அறையில் வேறு ஏதாவது செய்யலாம் என்று அமர்ந்தாள். அப்படி அவள் அமர்ந்த போது, அவளுடைய தோழிகள் விளையாடும் சத்தம் கேட்டது. அவளால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. சற்று நேரம் பார்த்தாள். அவளால் தாக்கு பிடிக்க முடியவில்லை, சரி, தகப்பன் வேலைக்கு போயிருப்பார், நான் விளையாடுவது அவருக்கு எங்கே தெரிய போகிறது என்று நினைத்து, விளையாட சென்று, நன்கு விளையாடிவிட்டு, எல்லாருக்கும் பை சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அப்போதுதான் அவளுடைய மனதில் வேதனை ஆரம்பித்தது, தன் தகப்பனின் சொல்லிற்கு கீழ்ப்படியவில்லை என்று, அதையே நினைத்து சென்று கொண்டிருந்தபோது, முன்னால் மாட்டப்பட்டிருந்த படத்தை காணாமல், போய் இடித்து, அது அந்த படம் கீழே விழுந்து, நொறுங்கி போனது, அவளுக்கும் தலையில் நல்ல அடி!
.
அவள் இருதயத்தில் தகப்பனுக்கு கீழ்ப்படியவில்லை என்ற துக்கம், தலையின் வேதனை வேறு, வேகமாக தன் அறைக்குள் சென்று படுக்கையில் படுத்து, விசும்ப ஆரம்பித்தாள். அப்போது அந்த வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண், 'நீ போய் உன் அப்பாவை பார், நடந்ததை சொல்' என்று கூறினாள். ஆனால் அந்த பிள்ளையோ, ஷநான் எப்படி என தகப்பனின் முகத்தில் விழிப்பேன், நான் அவர் சொல்லை கேட்கவில்லையே' என்று அழ ஆரம்பித்தாள். அதற்கு அந்த பணிப்பெண், 'உன் தகப்பனின் அன்பு நீ செய்கிற காரியத்தை பொறுத்தா இருக்கிறது? நீ அவருடைய மகள் அல்லவா?' என்று கூறினாள். அதனால் தைரியமுற்று, அந்த பிள்ளை தன் தகப்பனிடம் சென்று, 'அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்' என்று அவருடைய கரத்தை பற்றி கொண்டு அழ ஆரம்பித்தாள். அப்போது அவளுடைய தந்தை, 'மகளே, நீ என் சொல்லை கேளாமல், விளையாட போனதும் தெரியும், விளையாடிவிட்டு, வரும் வழியில் மாட்டப்பட்டிருந்த படத்தில் மோதி, தலைக்கு அடிபட்டதும் தெரியும், நீ வருவாய் என காத்திருந்தேன், அந்த வலிக்கு தடவி கொடுக்கலாம் என்று, ஆனால் நீ என்னிடம் வரவேயில்லை' என்று கூறினார். 'அது எப்படி உங்களுக்கு தெரியும், நீங்கள் வேலைக்கு போகவில்லையா?' என்று அந்த பிள்ளை கேட்டாள். அதற்கு தந்தை 'இன்று நான் உன்னுடன் நேரத்தை செலவழிப்பதற்காக விடுமுறை போட்டேன், ஆனால், நீ விளையாட போய் விட்டாயே' என்று கூறி, 'மகளே, நீ என்னுடைய மகள், ஆகையால் நீ தவறு செய்தாலும் நீ என்னிடம் வரும்போது, நான் உன்னை மன்னித்து, உன்னை ஏற்று கொள்வேன். ஆனால் நீ தான் நான் ஏற்று கொள்வேனோ மாட்டேனோ என்று தயங்கி என்னிடம் வராமல் போனாய்' என கூறினார். அப்போது மகள், அவருடைய கழுத்தை கட்டிக்கொண்டு, ஷநன்றி அப்பா' என கூறி முத்தமிட்டாள்.
.
நம்முடைய தேவனும் அப்படித்தான், அவர் நம்மேல் அன்புகூருவது நாம் செய்கிற நல்ல காரியங்களுக்காகவோ, அவருக்காக நாம் படுகிற பாடுகளுக்காகவோ அல்ல, நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதினால் மாத்திரமே அவர் நம்மேல் அன்பு கூறுகிறார். 'கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்' - (யோவான் 1:12) என்று வேதம் நமக்கு கூறுகிறது.

Thursday, November 20, 2014

நம் பரம தகப்பனின் அன்பு

ஒரு சபையின் ஆராதனையில் போதகர் ஆராதனையை முடித்து விட்டு, அன்று பேச வந்திருந்த விசேஷித்த போதகரை குறித்து அறிமுகம் செய்து விட்டு போய் உட்கார்ந்தார். அந்த வயதான போதகரும் ஒரு உதாரணத்தின் மூலம் செய்தியை சொல்ல ஆரம்பித்தார்.
.
'ஒரு தகப்பனும், அவருடைய மகனும், மகனுடைய நண்பனும், என்று மூவருமாக பசிபிக் கடலில் ஒரு படகில் உல்லாச பயணமாக சென்றிருந்தார்கள். நடுக்கடலில் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென்று புயல் உருவாக ஆரம்பித்தது. படகு நடுக்கடலில் மாட்டி கொண்டது. தகப்பன் படகை ஓட்ட நன்கு அறிந்திருந்தவரானாலும், படகு புயலில் சிக்கி கொண்டதால் என்ன செய்வது என்று திகைத்த நேரத்தில் படகு கவிழ்ந்து மூன்று பேரும் கடலில் விழுந்தார்கள்' அவர் சொல்லி கொண்டிருந்த சம்பவத்தை இரு வாலிபர்கள் உன்னிப்பாக கேட்டு கொண்டிருந்ததை அந்த போதகர் கவனித்தவாறே அந்த சம்பவத்தை தொடர்ந்தார்.
.
அந்த தகப்பன், தன் கையில் கிடைத்த கயிற்றை ஒரு பக்கத்தை தன் இடுப்பில் கட்டிக்கொண்டு, மற்ற நுனியை இரண்டு பிள்ளைகளில் யாருக்கு கொடுப்பது என்று மனதில் போராடியவாறு பொங்கி எழும் அலைகளின் மத்தியில் போராடும் தன் மனதை கட்டுப்படுத்தியவாறு, தன் மகன் இரட்சிக்கப்பட்டவன் என்பதையும், மற்றவனோ இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்பதையும் அறிந்திருந்த தகப்பன், தன் மகனிடம் 'மகனே, நான் உன்னை நேசிக்கிறேன்' என்று கதறியவாறே, அந்த கயிற்றின் மற்றொரு நுனியை எடுத்து, மற்ற பையனிடம் வீசினார். அதை பிடித்தவாறே இருவரும் படகை பிடித்து கொண்டு கரை வந்து சேர்ந்தனர். மகனோ, கொந்தளிக்கும் கடலில் கண்களின் முன்பாக மூழ்கி போவதை கண்டவாறே தகப்பன் கரையில் போய் விழுந்தார். அவனது சரீரம் திரும்ப கிடைக்கவே இல்லை.
.
இதை சொல்லிவிட்டு போதகர் சற்று நிறுத்தியபோது, அந்த இரண்டு வாலிபர்களும், அவர் என்ன சொல்ல போகிறார் என்று ஆவலோடு அவர் முகத்தை பார்த்து கொண்டிருந்தார்கள்.
.
போதகர் தொடர்ந்தார், அந்த தகப்பன் தன் மகன் மரித்தாலும், இயேசுவோடு கூட என்றும் ஜீவித்திருப்பான் என்றும், மற்ற வாலிபனோ, ஒருவேளை மரித்திருந்தால், நித்திய நரகத்திற்கு சென்றிருப்பான் என்பதை அறிந்திருந்ததால், நண்பனை காப்பாற்ற வேண்டி தன் சொந்த மகனை அவர் தத்தம் செய்தார்.
.
நம் பரம தகப்பனும், தம்முடைய ஒரே பேறான குமாரனை நாம் இரட்சிப்படைய வேண்டி, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தாரே, இன்றே அவர் அளிக்கும் பாதுகாக்கும் கயிற்றை பிடித்து கொண்டு அவரிடம் வந்து விடுங்கள், இன்றே இரட்சிப்பை பெற்று கொள்ளுங்கள்' என்று கூறி, தன்னிடத்தில் வந்து அமர்ந்தார். அவருக்குப்பின் போதகர் வந்து, சபையை முடித்தபோது, அந்த இரண்டு வாலிபர்களும், அந்த வயதான போதகரின் முன் வந்து, 'நீர் எங்களுக்கு சொன்ன கதை அற்புதமாக இருந்தது, நீங்கள் சொன்ன மாதிரி எந்த தகப்பன், தன் சொந்த மகனை விட்டு விட்டு மற்றவனை காப்பாற்ற முடியும்?' என்று கேட்டார்கள். அப்போது அந்த வயதான போதகர், தன் கண்களை துடைத்து கொண்டு, 'உங்களால் நம்ப முடியவில்லை இல்லையா? உங்களுக்கு தெரியுமா? அந்த தகப்பன் நான் தான் என்றும், என் மகனின் அந்த நண்பன் உங்கள் போதகர் என்றும் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?' என்று கேட்டார்.
.
ஒரு உலகப்பிரகாரமான தகப்பன் தன் பிள்ளையை மற்ற பிள்ளை இரட்சிக்கப்படும்படியாக பலியாக கொடுக்கும்போது, நமது பரம தகப்பன் தமது சொந்த குமாரனை நாம் இரட்சிக்கப்படும்படியாக அனுப்பியது அதிக நிச்சயமல்லவா?

Monday, October 14, 2013

இன்னும் இடம் இருக்கிறது

ஒரு மனிதர் பெரிய விருந்தொன்றை ஆயத்தப்படுத்தி அநேகரை அழைக்கிறார். விருந்து வேளை வந்தபோது, விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் சாக்கு போக்குசொல்ல தொடங்குகிறார்கள் ஒருவன் வயலுக்கு போக வேண்டுமென்று சொல்கிறான். மற்றொருவன் மாட்டை சேரிக்க வேண்டுமென்று மறுக்கிறான். இன்னொருவன் இப்போதுதான் திருமணம் செய்திருக்கிறேன், நான் வரவில்லை என்கிறான். ஆனால் அந்த எஜமானின் விருப்பம் எப்படியாவது என் வீடு ஜனத்தினால நிறைய வேண்டும் என்பதுதான். ஆகவே சினங்கொண்டு, 'தெருக்கள், வீதிகளில் போய் ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடர்களையும் கொண்டு என் வீட்டை நிரப்பு' என்று ஊழியக்காரனுக்கு கட்டளையிடுகிறார்.
.
இன்றைக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மனநிலையும் இப்படித்தான் இருக்கிறது. பரலோகத்தை தம்முடைய ஜனங்களால் நிரப்ப வேண்டுமென்று. ஆனால் 2000 வருடத்திற்கு மேலாகியும் இன்னும் இடம் காலியாகவே உள்ளது. ஆவரிடத்தில் வருவதற்கும், விருந்தில் பங்கேற்பதற்கும், இன்னும் பலர் விநோதமான சாக்குபோக்குகளையே சொல்லி கொண்டு, கர்த்தரிடம் வருவதற்கு நிராகரித்து கொண்டு இருக்கிறார்கள். ஆதலால் கிறிஸ்துவை ஏற்று கொண்ட நம் ஒவ்வொருவரிடத்திலும் தயவு செய்து காலியிடத்தை நிரப்புங்கள் என்று வருந்தி கேட்கிறார். நூறில் ஒரு ஆடு காணாமற் போனால் கூட அவரால் திருப்தியாக இருக்க முடியாது. அந்த ஒரு ஆட்டை கண்டுபிடிக்கும் வரை பரிதபித்து கொண்டே இருப்பார்.

Friday, October 4, 2013

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு

ஒரு கிறிஸ்தவ சகோதரி கணவரை இழந்தவர்கள், அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் தன் வேலைக்கு செல்லுமுன்பு பிள்ளைகளை அழைத்து, அவர்களோடு ஜெபித்து, அவர்களை பள்ளிக்கு அனுப்புவது வழக்கம். அவர்கள் வளர்ந்து வருகிற போது, ஒரு மகன் கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் பாவ வழிகளில் செல்ல ஆரம்பித்தான்.

அதை கண்ட சில குடும்ப நண்பர்கள், அவனுடைய தாயிடம் வந்து, இந்த
மாதிரி 'உங்கள் மகன் பாவ காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்'
என்று கூறினார்கள். அதற்கு அந்த தாய், 'நான் அவனிடம் தன் வழியை
விட்டு நல் வழிக்கு வா என்று சொன்னாலும், அவன் வருவானா என்பது
சந்தேகம். ஆனால் என் பிள்ளைகளை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்
கொடுத்திருக்கிறபடியால் தேவன் அவர்களை காத்துக் கொள்வார் என்கிற
நம்பிக்கை எனக்கு உண்டு' என்று கூறி, அதற்காக முறுமுறுக்காமல்,
கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து. ஜெபத்தோடு காத்திருந்தார்கள். அவர்கள்
அப்படி முறுமுறுப்பில்லாமல், நம்பிக்கையோடும், கர்த்தரிடத்தில்
மனமகிழ்ச்சியோடும் இருப்பதைக் கண்டு அநேகருக்கு ஆச்சரியமாக
இருந்தது.
.

.
ஒரு நாள் வந்தது, அந்த மகன் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டு, அது

அவனுடைய தவறு இல்லை என்றாலும், போலீஸிடம் மாட்டிக்
கொண்டான். அவனது நண்பர்கள் அவனை விட்டு ஓடிப் போனார்கள்.
அப்போதுதான் அவனுக்கு தன் நண்பர்களின் குணநலன்கள் தெரிய
ஆரம்பித்தது. தன் தாய் தனக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிப்பதை உணர
ஆரம்பித்தான். அவனது வாழ்க்கை மாற ஆரம்பித்தது. அவன் மேல் தவறு
இல்லை என்று நிரூபிக்கப்பட்டு, அவன் சிறையிலிருந்து வெளியே வந்தான்.
.

.
அவனது தாயார் கர்த்தருக்கு நன்றி சொன்னார்கள். 'எனக்கு தெரியும்,

கர்த்தரிடம் நான் ஒப்புக்கொடுத்ததை அவர் கடைசி வரைக்கும் காத்துக்
கொள்வார் என்று. ஆகவே உன்னிடம் நான் நம்பிக்கை இழக்கவில்லை,
விசுவாசத்தோடு கர்த்தர் உன்னை தொடுவார் என்று காத்திருந்தேன்,
கர்த்தர் என்னை வெட்கப்படவிடவில்லை' என்று கூறினார்கள்.
ர்த்தருடைய வசனம் சொல்கிறது, 'கர்த்தரிடத்தில் மன
மகிழ்ச்சியாயிரு;
அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்

Saturday, July 20, 2013

நாம் எதை நேசிக்கிறோம்? - சிந்திக்க வேண்டிய கதை

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது...

கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்
" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம்,பொருட்களை நேசிக்கிறோம்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..