Showing posts with label Tamil stories. Show all posts
Showing posts with label Tamil stories. Show all posts

Saturday, August 2, 2014

உணர்வில்லாத இருதயம்

ஒரு சர்க்கஸ் நடைபெற்று கொண்டு இருந்த இடத்தில் கோமாளிகள் நின்று எல்லாரையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தனர். ஜனங்கள் தங்களையே மறந்து அந்த கோமாளிகள் செய்யும் கோமாளிதனத்தை இரசித்து பார்த்து கொண்டிருந்தனர். திடீரென்று அந்த சர்க்கஸ் உரிமையாளர் முன்னே வந்து, அந்த சர்க்கஸ் கூடாரம் தீப்பிடித்து இருப்பதாகவும், உடனே எல்லாரையும் வெளியேறும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் ஜனங்களோ, இதுவும் ஒரு சிரிப்புக்காக சொல்லப்படும் காரியம் என்று நினைத்து இன்னும் சிரிக்க ஆரம்பித்தனர். அந்த முதலாளியோ எல்லாரையும் வெளியேறும்படி கெஞ்ச ஆரம்பித்தார். பின்னர்தான் மக்களுக்கு புரிய வந்தது, அது சிரிப்புக்காக அல்ல, நிஜம்தான் என்று. ஆனால் ஏற்கனவே கொட்டகை முழுவதும் தீப்பிடித்து விட்டபடியால், உயிர் பிழைத்தவர்கள் மிகவும் குறைவானவர்களே.
.
அதைப்போலவே ஒரு ஐசுவரியவான் தான் நரகத்தின் அக்கினியில் எரியும்போது, லாசருவை தன் சகோதரரிடத்தில் அனுப்பும்படிக்கும், அவர்கள் அந்த நரக அக்கினியில் சிக்கி கொள்ளாதபடி லாசரு சென்று எச்சரிக்கும்படியாகவும் அவனை அவனுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்படி ஆபிரகாமிடம் கெஞ்சுகிறான் (லூக்கா 16:27-28). 'ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்' (லூக்கா 16:29-31). எத்தனை சோகமான காட்சி! அத்தனை நாட்கள் பூமியிலிருந்த நாட்களில் தன்னுடைய சகோதரர்கள் மேல் இல்லாத கரிசனை நரகத்தில் எரியும்போது அந்த ஐசுவரியவானுக்கு வருகிறது, ஆனால் ஏற்கனவே காலம் கடந்து விட்டபடியால், ஒன்றுமே செய்யமுடியாத நிலைமை!

அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். - (லூக்கா 16:27-28).

Monday, November 4, 2013

ஆலயத்திற்கு செல்வோம் வாருங்கள்

ஒரு மனிதர் சபைக்கு ஒழுங்காக செல்பவர், ஒரு முறை ஒரு செய்தித்தாளில் எடிட்டர் பக்கத்திற்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபைக்குச் செல்வது பிரயோஜனமில்லை என்றும், தான் கடந்த30 வருடங்களாக சபைக்குச் செல்வதாகவும், அங்கு, ஏறக்குறைய 3000 போதகங்களைக் கேட்டிருப்பதாகவும், ஆனால் இப்போது, போதகர் செய்த பிரசங்கங்களில் ஒன்றுக் கூட தன் நினைவில் இல்லையென்றும், போதகர் தன் நேரத்தையும், அவருடைய நேரத்தையும் வீணடிப்பதாகவும் எழுதியிருந்தார். மற்றவர்களும் அதில் சேர்ந்து விவாதிக்க ஆரம்பித்தார்கள். 

இது சில வாரங்களுக்குச் சென்றது. கடைசியில் ஒரு விசுவாசி எழுதினார், “எனக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகிறது. என் மனைவி ஏறக்குறைய 3200 தடவை உணவுகளை சமைத்து தந்திருக்கிறாள். அவள் என்ன சமைத்தாள் என்று கேட்டால் எனக்கு எதுவும் ஞாபகமில்லை, ஆனால் அவைகள் என் உடலுக்கு ஆரோக்கியத்தையும் நான் வேலை செய்வதற்கு எனக்கு சக்தியையும் கொடுத்து வருகின்றன. என் மனைவி சமைத்துக் கொடுத்திருக்கவில்லை என்றால், நான் இந்நேரம் சரீரபிரகாரமாக மரித்திருப்பேன். அதுப் போல நான் ஆலயத்திற்குச் சென்று கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கவில்லை என்றால் ஆத்தும ரீதியாக எப்போதோ மரித்திருப்பேன். தேவன் எனக்கு கொடுத்த சரீர, ஆத்மீக உணவுகளுக்காக ஸ்தோத்திரம்” என்றார்.

Wednesday, August 21, 2013

இயேசுவை நாம் எங்கே காணலாம்?

கர்த்தருக்கென்று உண்மையாய் ஊழியம் செய்த ஒரு பெண்மணி வெகுநாளாய் 'ஆண்டவரே நான் உம்மை பார்க்க வேண்டும் . தரிசனத்திலோ சொப்பனத்திலோ உம் முகத்தை காண் வேண்டும்' என்று சொல்லி ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது அனுதின ஜெபத்தில் இது ஒரு பகுதியாகவே இருந்தது. ஒருமுறை அவர்கள் வெளி மாநிலத்திற்கு ஊழியத்தினிமித்தம் சென்றிருந்தார்கள். அச்சமயம் தன் குடும்பத்தினரோடு ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சாலையில் வேனில் சென்று கொண்டிருந்தார்கள்.
.
அப்போது வழியருகே ஒருவர் சரியான ஆடையின்றி படுத்திருப்பதை கண்டு அவருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் காரை நிறுத்தும்படி கூறினார்கள். உடனிருந்தோர், 'இம்மனிதன் குடித்துவிட்டு படுத்திருக்கலாம், நமக்கு ஏன் வீண் வம்பு, போகலாம்' என்றனர். இருப்பினும் இவ்வூழியரது வற்புறுத்தலால் காரை நிறுத்தி அவரிடம் விசாரித்தபோது அவர் மிகவும் உடல் நலக்குறைவினால் கவனிப்பாரற்று படுத்திருப்பது தெரிய வந்தது. அவரை கனிவோடு விசாரித்து விட்டு தங்களிடமிருந்த உணவையும், தண்ணீரையும் கொடுத்துவிட்டு சென்றார்.
.
ஒரு சில நாட்களுக்கு பின் தன் ஜெப வேளையிலே ஆண்டவரே, நான் உம்மை எப்படியாவது பார்க்க வேண்டும். அதுவே என் உள்ளத்தின் வாஞ்சை என ஜெபித்தார்கள். அந்த நொடிப் பொழுதில் 'இரண்டு தினங்களுக்கு முன்பு என்னை வெளிப்படுத்தினேனே, என்னை நீ பார்த்தாயே' என்று ஆண்டவர் உணர்த்துவதைக் கண்டார். எப்போது ஆண்டவரே என்ற போது, 'அன்று சாலையோரத்தில் உன்னிடம் உணவு பொட்டலத்தையும் தண்ணீரையும் பெற்றுக் கொண்டது நான்தான்' என உணர்த்தினார். அப்போது மத்தேயு 25-ம் அதிகாரத்தில் எழுதப்பட்ட சம்பவம் அவ்வூழியரின் நினைவிற்கு வந்தது. அந்த வேதப்பகுதியை நாம் தியானிக்கலாம்.

Saturday, July 20, 2013

பாவத்தின் அழைப்பு அழிவு

நரி ஒன்று தாகத்தால் தவித்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

என்ன செய்வது…? தண்ணீரைத் தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது.

கிணற்றின் அருகே சென்றது, கிணற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி ‘விரி’ரெனக் கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. ‘எப்படி வெளியேறுவது’ என்று யோசிக்கத் தொடங்கியது.

‘மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?’ நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.

அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.அங்கு நரி இருப்பதைக் கண்டது.

“அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டது. “நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்” என்றது நரி ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி ‘சரசர’வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.

நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.

“நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்”. என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.

பாவம் ஓநாய்…………….!

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்

Thursday, May 9, 2013

டிக்கெட், டிக்கெட்!

இரவு பத்துமணி திருநெல்வேலியில் எட்டுமணிக்குப் புறப்பட்ட சென்னை ரயில் விருதுநகரை நெருங்கிக் கொண்டிருந்தது. அலுத்துச் சலித்தவர்களும் மனநிம்மதி உடையவர்களும் நிம்மதியாகப் படுத்து ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கத் தொடங்கி விட்டனர்.

விருதுநகரில் வண்டி வந்து நின்றது. பழம், பிஸ்கட், பத்திரிகைகள் விற்பவர்களின் குரல் காதைப் பிளந்தது. அவசர, அவசரமாக அகப்பட்டதை வாங்கி அரை குறையாக சிலர் மென்று வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தனர்.

வண்டி புறப்பட்டது. டிக்கெட் பரிசோதகர் ஏறாதவண்டியாகப் பார்த்து பிச்சைக்காரர்களும் இப்படியே ரயில்பயணம் செய்து பழக்கப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளும் ஏறிக்கொண்டனர்.

ஒரு கேரேசுக்குள் டிக்கெட் பரிசோதகர் ஏறினார். அவரது வரவறிந்து டிக்கெட் எடுக்காத சிலர் பெஞ்சுக்கடியில் பதுங்கினர். ஒன்றிரண்டு பேர் பாத் ரூமிற்குள் போய் மறைந்தனர். 

டிக்கெட் வைத்திருந்தவர்கள் அதைப் பரிசோதகரிடம் காட்டினர். இல்லாதவர்களில் பலர், என்ன நேருமே என்று பதறினர். சிலர் டி.டி. ஆரிடம் மன்னிப்புக் கேட்டனர். உரிய அபதாரத் தொகையையும் கட்டினர்.

தனபால் ரயிலில் ஓர் ஓரமாக உட்கார்ந்து கொளுந்து வெற்றிலையை எடுத்து காம்பு கிள்ளி, முனை முறித்து, நரம்பு உரித்து சுண்ணாம்பு தடவி, சுருட்டி, மடக்கி வாயில் திமித்து ரசித்து மென்று கொண்டிருந்தான். அவ்வப்போது துண்டின் முனையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். துண்டில் வெற்றிலைக் கறை: வாழைக்காய்க் கறை, வாழைக்காய் வெட்டுவதும் வாழை இலை அறுப்பதும் அவனது பிரதான வேலை!

டிக்கெட் பரிசோதகர் தனபாலிடம் டிக்கெட், டிக்கெட்?” என்று கேட்டார்.

தனபால் மடிக்குள் கையைவிட்டு டிக்கெட்டை எடுத்து நீட்டினான்.

டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டைப் பார்த்துவிட்டு, “இதென்னய்யா, டிக்கெட்? நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டார். தனபால், “திருச்சிக்கு போகிறேன். அங்கே தான் என் மகன் பெல் கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஆள் ரொம்ப நல்லா இருப்பானுங்க. அவனுக்கு பெண் பார்த்துக்கிட்டிருக்கேன். தை மாதம் கலியாணம் வச்சிடலாமுன்னு நினைக்கிறேன்” என்று கதையைத் தொடங்கினான்.

டி.டி.ஆருக்கு எரிச்சல்!” உன் மகனுக்கு நீ கலியாணம் எப்போ வச்சால் எனக்கென்ன? எந்த ஊரில் ஏறினீர்?”
கோவில்பட்டியிலிருந்து திருச்சிக்கு டிக்கெட் எடுக்காமல் வெறுமனே பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துட்டு ரயிலில் ஏறியிருக்கிறீரே, என்ன மனுஷன் நீர்?”
தனபால் நிதானமாக, “ஏன், திருச்சி ஊரிலே பிளாட்பாரம் இல்லீங்களா? என்று கேட்டான். டி.டி.ஆர் பொத்துக்கொண்டு வந்த கோபத்தையும் புறம்பே தள்ளிவிட்டு குபுக்கென்று சிரித்துவிட்டார்

Saturday, March 30, 2013

தேவனின் பதில் தாமதிப்பது ஏன்?

குளத்தில் குளித்து கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அதில் மூழ்கி விட்டான். அனைவரும் பதற்றத்தோடு அதை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே நீச்சலடித்து, மூழ்கி கொண்டிருந்தவனை காப்பாற்ற முடியும். ஆனால் அவரோ அமைதியாக இருக்கிறார். தண்ணீரில் மூழ்கினவன் ஒரு தடவை, இரண்டு தடவை மூழ்கி, மூன்றாம் முறையாக மூழ்க ஆரம்பிக்கிறான். அப்போது நீச்சல் தெரிந்த இவர் குளத்திற்குள் பாய்ந்து சென்று நீரில் மூழ்கினவனை தூக்கி கொண்டு வந்து சேர்த்தார். ஏன் அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்து விட்டு மூன்றாம் முறை மூழ்க ஆரம்பித்தவுடன் பாய்ந்து சென்று காப்பாற்றினார்? பதிலை நீங்களே யூகித்திருப்பீர்கள்! தண்ணீரில் மூழ்கினவனை உடனே நாம் காப்பாற்ற முயற்சித்தால் காப்பாற்றுபனை மூழ்குகிறவன் கட்டி பிடித்து இருவரும் மூழ்க நேரிடும். மூழ்கினவன் தன் சொந்த பெலனை எல்லாம் இழந்தால்தான் அவனை காப்பாற்றுவது எளிது. இதுபோல தான் நமது சில தேவையிலும் தேவன் உதவி செய்ய கடைசி மணித்துளிவரை பொறுத்திருப்பதுண்டு.
 
வேதத்திலே நாம் பார்ப்போமென்றால், சாறிபாத் விதவையின் வாழ்விலும் கடைசி வேளையில் இதே மாதிரியான ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கடும் பஞ்ச வேளையில் அவளிடமிருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து விட்டது. கடைசியாக பானையை வழித்தெடுத்தால் ஒரு படி மாவும், ஒரு கரண்டி எண்ணையும் தேறும். அதில் அடை செய்து சாப்பிட்டு விட்டு உயிரை விட எண்ணினாள். அந்த கடைசி கட்டத்தில் ஆண்டவர் எலியாவை அவளிடத்தில் அனுப்புகிறார். சில வேளைகளில் நம்முடைய வாழ்வில் நமது தேவை உச்சக்கட்டத்தை அடையும்போதுதான் தேவன் நமது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். காரணம் என்ன? நமது சொந்த முயற்சிகளினால் பல இடங்களுக்கு உதவி நாடி சென்று பலரை சந்தித்து, பல கதவுகளை தட்டி எங்கும் உதவிக்கான வாசல் அடைபடும் போது இறுதியில் ஆண்டவரிடத்தில் வந்து 'ஆண்டவரே நீரே என் தஞ்சம், வேறு கதி இல்லை' என்று நாம் சொல்லும் நிலைக்கு வரும்வரை தேவன் நமது வாழ்வில் குறுக்கிட மாட்டார். நாம் அவரிடம் சரணடைந்து அவர் பாதத்திற்கு வரும்வரை அவர் அமர்ந்திருப்பார்.

Tuesday, February 26, 2013

நன்மைசெய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த  சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும்போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான்.

சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்கவில்லை.

அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னு கத்த
ஆரம்பிச்சுது. சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.

தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. கூறுகெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

ஹி ஹி ஹி என்று சிரித்துக் கொண்டிருக்கும் எனக்கு அருமையானவர்களே! நாமும் பிறருக்கு நன்மையே செய்தாலும் சில பல நேரங்களில் இதுபோல தான் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறோம். இருந்தாலும் பரவாயில்லை மீண்டும் மீண்டும் நன்மை செய்வோம்.

ஏனென்றால் பரிசுத்த வேதாகமம் சொல்கிறது,

கலாத்தியர் 6:9 நன்மைசெய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக

II தெசலோனிக்கேயர் 3:13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்

For More stories, Please Visit

http://kadambamtamil.blogspot.in/

அன்பை பகிர்ந்தளிப்போம்

ஒரு எறும்பிற்கு தாங்க முடியாத தாகம். தண்ணீர் குடிக்க ஒரு நதிக்கு சென்றது. அப்போது திடீரென வந்த வெள்ளம் எறும்பை அடித்துக்கொண்டு போயிற்று.தண்ணீரில் மூழ்கும் தறுவாயில் இருந்த எறும்பை அருகாமையில் மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.

உடனே அது மரத்திலிருந்த ஒரு இலையை பறித்து எறும்புக்கு அருகே தண்ணீரில் போட்டது. இலையின் மேல் எறும்பு மெதுவாக ஏறி கரையை சேர்ந்தது. தனக்கு உதவிய புறாவின் நல்ல குணத்தை மெச்சிக் கொண்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு வேடன் ஒருவன் மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறாவைப் பிடிக்க எண்ணி, அதை நோக்கி வில்லில் அம்பைப் பொருத்தி குறி பார்த்தான்.

அதை கவனித்துக் கொண்டிருந்த எறும்பு வேடனின் காலில் கடித்தது.அதனால் ஏற்பட்ட வலியில் வேடனின் குறி தப்பியது. புறாவும் அங்கிருந்து "சட்" என பறந்தோடி தப்பியது.

ஒருவர் நமக்கு செய்த உதவிக்காக அவரிடம் நன்றியுள்ளவனாக இருப்பதோடு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நம் சுற்றத்தவருக்கு உதவ வேண்டும்.

வெறுமென பக்தியாக இருக்கிறேன் சொல்லிக் கொண்டு, பிறர் மீது அன்பு செலுத்தாது, மற்றவர் துயர் துடைக்காது இருப்பவரை கடவுள் ஏற்றுக் கொள்ளமாட்டார். அதனால் தான் வேதம் சொல்கிறது,

ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.( யாக் 2: 15-17)

ஆகவே! நம் சுற்றத்தாரின் துயர் துடைப்போம், அன்பை பகிர்ந்தளிப்போம், மனித நேயத்தால் தேவ நேயத்தை உலகிற்கு பறை சாற்றுவோம்.

_-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-__-_-

See more at கதம்பம் [இ-இதழ்]

Saturday, February 16, 2013

ஆவிக்குரிய முன்னேற வேண்டும்

ஒரு பெரிய கடை ஒன்று இருந்தது. அதில் ஒரு மனிதன் தன் வாழ்நாளுக்கு தேவையானதெல்லாம் வாங்கி கொள்ளும் வண்ணம், ஒரே கூரையின் கீழ் கிடைக்கத்தக்கதாக பெரியதாக இருந்தது. அதில் வேலைக்கு சேருவதற்காக ஒரு வாலிபன் விண்ணப்பித்திருந்தான். அவனை வேலைக்கு சேர்த்த முதலாளி இன்னும் இரண்டு நாளில் அவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்க்க போவதாக கூறினார். அதன்படி, இரண்டு நாள் கழித்து அவனால் ஏதாவது லாபம் வந்ததா என்று பார்க்க வேண்டி, அவனை அழைத்தார். 'இந்த நாளில் நீ எவ்வளவு லாபம் சம்பாதித்தாய்? எத்தனை வாடிக்கையாளர்களை சந்தித்தாய்?' என்று கேட்டார். அந்த வாலிபன், ஒரே ஒருவரைதான் என்று கூறினான். அதற்கு முதலாளி, 'என்னது? ஒரே ஒரு வாடிக்கையாளர்தானா? மற்றவர்கள் எல்லாம் ஒரு நாளில் 30 40 வாடிக்கையாளர்களை சந்தித்து, நமது கடைக்கு லாபம் கொண்டு வருகிறார்கள், நீ என்னடா என்றால் ஒரே ஒரு வாடிக்கையாளருக்கு மட்டும் வியாபாரம் செய்திருக்கிறாய்? எவ்வளவு சம்பாதித்தாய்?' என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபன், '15,00,000 ரூபாய்கள'; என்றதும், ஆ! அது எப்படி? என்று வியப்புடன் முதலாளி கேட்டார்.
அந்த வாலிபன் விவரிக்க ஆரம்பித்தான், 'இந்த நாள் காலையில் அந்த மனிதருக்கு நான் ஒரு சிறிய மீன் பிடிக்கும் தூண்டிலை விற்றேன். அதன்பிறகு அவர் வந்து இதைவிட பெரிய தூண்டில் வேண்டும் என்றார், அதன்பிறகு அதைவிட பெரிய தூண்டில் என்று மூன்றை அவரிடமே விற்றேன். அதன்பிறகு, மீன் பிடிப்பதற்கு தேவையான எல்லா சாதனங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக அவரிடம் விற்றேன். அதன்பிறகு அவரிடம், இவை எல்லாவற்றையும் கொண்டு போக ஒரு படகு வேண்டுமே என்று சொல்ல, அவர் அதையும் வாங்கினார். இந்த படகை தன்னுடைய பழைய கார் இழுத்து கொண்டு போக முடியாதென்று சொல்ல, அவருக்கு தற்போதுள்ள புதிய மாடலில் ஒரு காரையும் வாங்க வைத்தேன். இப்படியாக ஒரே வாடிக்கையாளரிடம் இத்தனையும் சம்பாதித்தேன்' என்று கூறினான். அப்போது முதலாளி, 'ஒரு சிறிய மீன் தூண்டிலை வாங்க வந்த நபரிடம் இத்தனை காரியத்தையும் நீ விற்றாயா?' என்று கேட்க, அவன், ' இல்லை, அவர் என்னிடம் தன் மனைவியிடம் சண்டையிட்டு, வேறு அறையில் உறங்குவதற்காக ஒரு கம்பளி வாங்க வந்தார். நான் அவரிடம், உமக்கு இந்த வார கடைசி வீணாக வேண்டாம், போய் மீன் பிடிப்பீர்களானால் உமது பொழுது போகும்' என்று கூறினேன்' என்றான். அந்த முதலாளி அந்த வாலிபனின் வியாபார நுணுக்கத்தை மெச்சி கொண்டார்.

Friday, February 8, 2013

காதலர் தினம் - இது வாலிபர்களுக்கு மட்டும்

அன்பு தேவனின் பிள்ளைகளே, இந்த வலைப்பகுதியில்
காதலர் தினம் குறித்து பகிர்ந்து கொள்கிறேன். இந்த நாள் பல வாலிபர்களின் மனதில் சில மின்சார மின்னலை தட்டி செல்கிற நாள். பல கிறிஸ்தவ வாலிபர்கள் இந்த காதல் வலையில் விழ வைக்க சாத்தான் பயன்படுத்தும் ஓர் கூர்வாள். உங்களோடு சில வேத வசனங்களை பகிர்ந்து கொள்கிறேன். திருமணத்திற்கு முன்னால் காதலிப்பது தவறல்ல என்று பல சபைகளும், கிறிஸ்தவ ஊழியகாரர்களும் உளற ஆரம்பித்து விட்டார்கள். நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் என்று வேதத்தில் கூறப்பட்டு உள்ளது. நீதிமொழிகளில் சாலலோன் உன் இளவயது மனைவியோடு மகிழ்ந்திரு என்கிறார். என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன? என்றும் கேள்வி எழுப்புகிறார். கல்லூரியில் படிக்கும் போது காதல் வயப்படும் அன்பு வாலிபர்களே, நீங்கள் காதலிப்பவர்கள் தான் தேவன் உங்களுக்கு ஏறப்படுதினார் என்று எதை வைத்து முடிவு பண்ணினீர்கள்? ஒரு வேளை அவர்கள் உங்களுக்கு என்று இல்லை என்றால்? வேதம் சொல்கிறது "பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்." ஜாக்கிரதை. காதலிக்கும் வாலிபர்கள் எப்படி ஜெபிப்பார்கள் என்றால்: 1. தேவனே இந்த பெண்ணை / பையனை எனக்கு எப்படியாவது தந்து விடுங்கள். என்னால் அவரை மறக்க முடியவில்லை. 2. தேவனே, இந்த பெண்ணை / பையன் என் மனதை பாதித்து விட்டான். எங்களை சேர்த்து வைத்து விடுங்கள். 3. தேவனே இந்த பெண்ணை / பையனை நான் காதலிப்பது உம் சித்தமா? (இதையே ஆயிரம் முறை கேட்பது) அதாவது, கையில் முடிவை வைத்து கொண்டு, தேவனின் சித்தை அதில் திணிக்க வைக்க துடிப்பது. சிலர் பல ஊழிகாரர்களிடமும் தங்கள் சந்தேகத்தை கேட்க துடிப்பார்கள். அதாவது, தங்கள் முடிவை யாரவது ஆதரிக்க மாட்டார்களா என்று அலைவது. "நீங்கள் செய்வது சரி" என்று யாரவது சொல்லிவிட மாட்டார்களா என்று எல்லா வாலிப கூட்டங்களிலும் கேள்வி கேட்பது. உங்கள் வாலிபத்தை விற்று விடாதீர்கள். தேவன் அழைத்தது போல "உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து..." நீ காதலிக்கும் பொது உன் முழு பலத்தையும், இருதயத்தையும், உன் சிந்தையையும் இழந்து விடுவாய். இரண்டு எஜமானுக்கு உன்னால் ஊழியம் செய்யவும் முடியாது. எட்டு கால் பூச்சி வலையில் மாட்டின "ஈ" யின் ஓடு மட்டும் தான் நம் கண்களுக்கு தெரியும். அதன் உடம்பின் உள்ளே உள்ள அனைத்தையும் பூச்சி உறிஞ்சி எடுத்து விடும். அதை போல தான், சாத்தான் உன்னை ஊழியத்தில் வைத்திருப்பான், பெரிய காரியத்தை செய்வதை போல செய்வான், அனால் முடிவில் உன் இருதயம், உன் பலம், உன் ஆத்துமா என்று எல்லாவற்றையும் உறிஞ்சி விடுவான். வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. பிரசங்கி 11 - 10,11, நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே. நீங்கள் தேவனிடத்தில் நெருங்கி வாழ ஒப்புகொடுங்கள். ஆத்துமாக்களை கொள்ளைஇடுங்கள். ஊழியம் செய்யுங்கள். உங்கள் வாலிபத்தில் மகிமையான காரியங்களை செய்ய முடியும். அதை தேவனுக்கு வல்லமையாய் பயன்படுத்துகள் என்று பிரசங்கி கதறுகிறான். கடைசியாக ஒரு கருத்து உன் வாழ்க்கையில் என்றும் தேவ அன்பை பிடித்து கொள் . வாலிபத்தில் பெற்றோரை மதித்து கொள். திருமண வாழ்க்கையில் காதலை வளர்த்துக் கொள். லூக்கா 10: 16. நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். 17. ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். 25. புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; 31. தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். 32. இந்த இரகசியம் பெரியது வாழ்த்துக்களுடன் கிறிஸ்டோ செல்வன்

Saturday, January 19, 2013

ட்ரோஜான் குதிரை (Trojan Horse)

நம்மில் அநேகர் ட்ரோஜான் குதிரையை (Trojan Horse) குறித்து கேள்விப்பட்டிருப்போம். ட்ரோஜான் நாட்டிற்கும் கிரேக்க நாட்டிற்கும் இடையில் பத்து வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பிலும் யாரும் ஜெயிப்பது போல இல்லை. ஆதலால் கிரேக்கர்கள் ஒரு தந்திரமான யோசனை செய்தார்கள். அதன்படி அவர்கள் போரில் போரிட்டு களைத்து போனவர்கள் போலவும், அதனால் அவர்கள் போரை கைவிட்டு, தங்கள் இடத்திற்கு திரும்பி போவது போலவும் ட்ரோஜானியர் நினைக்கும்படியாகவும், அதற்கு அப்படி போவதற்குமுன் ஒரு பெரிய குதிரை ஒன்றை மரத்தால் செய்து, யாரும் அறியாதபடி அந்த குதிரைக்குள் கிரேக்க போர் வீரர்கள் 30 பேர் ஒளிந்து கொள்ளத்தக்கதாக உருவாக்கினார்கள். அந்த மரக்குதிரையில் அந்த முப்பது வீரர்களும் ஒளிந்து கொண்டார்கள். அதை அந்த இடத்தில் விட்டுவிட்டு, மற்றவர்கள் படகில் ஏறி திரும்ப செல்வது போல காட்சியளித்தார்கள்.
.
இந்த பெரிய குதிரையை கண்ட ட்ரோஜர்கள், இது என்ன என்று ஒருவரையொருவர் கேட்டு கொண்டார்கள். யாருக்கும் என்னவென்று தெரியவில்லை. அப்போது அங்கு ஒளிந்து கொண்டிருந்த ஒரு கிரேக்கனை கண்டார்கள். அவனை பிடித்து வந்து கேட்டபோது, அவன், 'மற்ற கிரேக்கர்கள் என்னை வெறுத்தபடியால் என்னை இங்கு விட்டு விட்டு போய் விட்டார்கள்' என்று கூறினான். (இதுவும் தந்திரத்தில் சேர்ந்ததுதான்). ஆகவே அவனிடம் 'இந்த குதிரை என்னவென்று கேட்டபோது, இது அத்தேனே கடவுளுக்கு காணிக்கையாக கிரேக்கர்கள் விட்டு சென்றது' என்று கூறினான். கடவுளுக்கு என்று கூறின உடனே அவர்கள் அந்த குதிரையை (மிகவும் கனமானது, அதன் கால்களில் சக்கரம் கட்டியிருந்தது) மிகவும் கஷ்டப்பட்டு இழுத்து கொண்டு தங்கள் நகரமாகிய ட்ராயின் உள்ளே கொண்டு சென்றார்கள். அது உள்ளே நுழைய அதன் வாசலை உடைக்க வேண்டிதாய் இருந்தது. அந்த குதிரையை அத்தேனே கடவுளின் கோவிலருகே விட்டுவிட்டு, இவர்கள் தங்கள் வெற்றியை கொண்டாட குடித்து வெறித்து, கடைசியில் உறங்க ஆரம்பித்த போது, குதிரையின் உள்ளே இருந்த 30 வீரர்களும், வெளியே குதித்து, நகரத்தை காப்பவர்களை கொன்றுவிட்டு, நகரத்தின் வாசலை திறந்து விடவும், வெளியே அதற்கென்றே காத்திருந்த கிரேக்க வீரர்கள் உள்ளே நுழைந்து, ஒரு ஆண் விடாமல் எல்லா ட்ரோஜரையும் கொன்று விட்டு, பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக கொண்டு சென்றார்கள் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக நிகழ்ந்ததோ, இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் இதிலிருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய சத்தியம் உண்டு.
.
இந்த உலகம் என்ன கொடுக்கிறதோ அதை கண்டு ஏமாற்றப்பட்டு போகக்கூடாது. 'உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்' - (1யோவான் 2:15:16) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. உலகத்தில் உள்ளவைகள் கவர்ச்சியாக தோற்றமளிக்கலாம், எல்லாமே மிகவும் அருமையாக தோன்றலாம், மிகவும் சிறந்ததாக எண்ணப்படலாம். ஆனால் அவைகளில் அன்பு கூராதிருங்கள் என்று வேதம் நமக்கு கூறுகிறது.

போஷிப்பவர் - உண்மை சம்பவம்

மதுரையில் வசிக்கும் ஒரு குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தது. காரணம் வாடகை ஆட்டோ ஓட்டி, குடும்பத்தை நடத்தி வந்த கணவருக்கு வீட்டு செலவுக்கு கொடுக்கக் கூட அவரிடம் பணமிருப்பதில்லை. இதில் வீட்டில் தவழ்ந்து விளையாடி வந்த இரட்டை பெண் பிள்ளைகளும் அவ்வப்போது பசியினால் அழுவது பெற்றவர்களின் மனதை கசக்கி பிழிந்தது.
.
இந்த குடும்ப போராட்டத்தில் இயேசுகிறிஸ்துவை இறுக பிடித்து கொண்ட மனைவி ஞாயிறு தோறும் ஒரு சபைக்கு சென்று ஆண்டவரை ஆராதித்து வந்தாள். ஆண்டவரை நம்பும்படியும், ஜெபிக்கும்படியும் கணவரிடம் அடிக்கடி கூறுவாள். ஆனாலும் அவளது வார்த்தைகளுக்கு அவர் சற்றும் செவிசாய்க்கவில்லை. ஒரு நாள் காலை பிள்ளைகள் இருவரும் பசியால் அழுதனர். அடுப்பில் உணவோ. கையில் காசோ இல்லை. பக்கத்து வீட்டில் போய் உணவோ கடனோ கேட்கவும் தன்மானம் ஒத்து வரவில்லை.
.
ஆகவே இடுப்பில் ஒரு பிள்ளையையும் கையிலொரு பிள்ளையையும் பிடித்து கொண்டு இருதயம் கனத்தவளாக கலங்கிய கண்களோடு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்று, ஒரு டம்ளர் பாலும், இரண்டு பன்னும் வாங்கி விட்டு, தயங்கியவளாக, 'அண்ணா காசு நாளைக்கு கொடுக்கிறேன்' என்று கூறினாள். டீக்கடைக்காரரோ 'என்னம்மா, இப்போதுதானே உன்கிட்ட நின்ற பெரியவர் காசு கொடுத்து விட்டு போனார்' என்றார். இவளால் நம்பி முடியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள். அப்படி யாருமில்லை. யாராக இருக்கும்? என்று குழம்பி கொண்டிருக்கையில் உன்னை போஷிக்கிற தேவன் நானல்லவா? என்று உள்ளத்தில் அழுத்தமாய் கர்த்தர் நினைவுப்படுத்தினார். அவளடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பாலில் பன்னை தொட்டு சாப்பிட்டு விட்டு திருப்தியாய் தூங்கினர் இரட்டையர்கள்.