Showing posts with label Israel. Show all posts
Showing posts with label Israel. Show all posts

Sunday, March 2, 2014

இஸ்ரேல் - பாலஸ்தீனம் - ஏன் இந்த போர்? பகுதி 1

இந்த நாட்களில் மத்திய கிழக்கு பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் அநேகருக்கு தெரியாது. அதைப் பற்றி செய்திகளை கேட்டாலும், எங்கோ நடக்கிறது நமக்கு என்ன என்கிற மனநிலைதான் அநேகரிடம் காணப்படுகிறது. ஆனால் கடைசி கால சம்பவங்களில் மத்திய கிழக்கு நாடுகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது நாம் யாவரும் அறிந்திருக்க வேண்டும். செய்தித்தாள்களை வாசிக்கும்போது அதோடு வேத வசனம் என்ன சொல்கிறது என்று பார்த்து, வேதத்தில் சொல்லப்படுகிற தீர்க்கதரிசன நிறைவேறல் என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.
.
தற்போது இஸ்ரேலுக்கும், இஸ்ரேலின் ஒரு பகுதியாகிய காசாவிற்கும் இடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரத்தின்படி எகிப்தில் போர் நிறுத்தத்தைக் குறித்து பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது.
.
இஸ்ரேலின் மூன்று வாலிபர்களை காசாவிலுள்ள ஹமாஸ் என்னும் தீவிரவாத குழு கடத்திச் சென்று, இஸ்ரேல் அரசாங்கத்தின் வேண்டுகோள் எதையும் கேட்காமல், அவர்களை கொன்று, தூக்கி வீசியது. அதனால் கோபமுற்ற யூதர்களில் சிலர் பாலஸ்தீனாவை சேர்ந்த சிறுவன் ஒருவனை கடத்தி சென்று அவனை கொன்றனர். அதன்பின் ஹமாஸ் இஸ்ரவேலை ராக்கெட்டுகள் வீசி தாக்க, போர் ஆரம்பித்தது. ஜூலை மாதம் 8ம்தேதி ஆரம்பிக்கப்பட்ட போர் இன்றளவும் தொடர்ந்து நடந்து வருகிறது. இடையிடையே போர் நிறுத்தம் இரண்டு நாள், மூன்று நாள் என்று நிறுத்தப்பட்டாலும், ஹமாஸ் அதையும் மீறி தாக்கும்போது, மீண்டும் போர் தொடர்கிறது.
.
இப்படியாக கடந்த முப்பத்து மூன்று நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருந்த போர் தற்போது மூன்று நாட்களாக பேச்சு வார்த்தையின் நிமித்தம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் போரில் இஸ்ரவேல் பக்கத்திலிருந்து, மூன்று பாமரமக்களும், (அதில் ஒருவர் தாய்லாந்தை சேர்ந்தவர்) அறுபத்தி மூன்று போர் வீரர்களும் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். ஆனால் காசாவின் பக்கத்தில் இருந்து, 1964 பேரும், சுமார் 2000 பேருக்கும் மேலாக காயமடைந்திருக்கிறார்கள். அநேகருடைய வீடு தரைமட்டமாகி இருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து யுனைட்டட் நேஷன்ஸின் பாதுகாப்பில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.
.
இத்தனைக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள் விடாமல் 3488 ராக்கெட்டுகளை இஸ்ரவேல் மீது வீசியும் அவர்களில் மனித சாவும், கட்டிடங்கள் இடிபாடும் மிகவும் குறைவே. எப்படி இந்த காரியம் நடந்தது? போர் நடக்கும்போது, அதில் ஈடுபட்டிருந்த வீரர்கள் அநேக அற்புதங்களை கண்டனர். ஏன், ஹமாஸ் தீவிரவாதிகளில் ஒருவனே, 'நாங்கள் அனுப்புகிற ராக்கெட்டுகளை அவர்களின் தேவன் எங்கள் மேலேயோ, கடலிலோ திருப்பி அனுப்புகிறார்' என்று சாட்சி கூறினான்.
.
இந்த போரைப்பற்றியும், காசாவிற்கு ஏற்படப் போகும் அழிவைக் குறித்தும், 2000 வருடங்களுக்கு முன்பாகவே கர்த்தர் வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார் என்பது எத்தனை ஆச்சரியம்! 'காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்ளூ அஸ்தோத்தைப் பட்டப் பகலிலே பறக்கடிப்பார்கள்ளூ எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும். . சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு ஐயோ! பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறதுளூ இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன். சமுத்திரக்கரை தேசம் மேய்ப்பர் தங்கும் குடில்களும் ஆட்டுத்தோழங்களுமாகும். அந்தத் தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்ளூ அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்ளூ அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார்' (செப்பனியா 2:4-7) என்று வசனம் திட்டவட்டமாக காசாவின் அழிவைக் குறித்து தீர்க்கதரிசனமாய் நமக்கு வெளிப்படுத்துகிறது.
.
அவர்களுக்கு ஏன் இந்த அழிவு? அதே அதிகாரத்தில் 'அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும்' (10ம் வசனத்தில்) கூறப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய ஜனத்திற்கு விரோதமாக பெருமைபாராட்டி, அவர்களை நிந்தித்தபடியினால் அவர்களுக்கு இந்த தண்டனை என்று கர்த்தர் கூறுகிறார்.
.
இஸ்ரவேல் தவறு செய்யவில்லையா? அவர்கள் பாவம் செய்யவில்லையா? வசனம் கூறுகிறது, 'அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லைளூ அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்' (எண்ணாகமம் 23:21) அவர்கள் அக்கிரமம் செய்தாலும், குற்றம் செய்தாலும், ஒரு தகப்பனைப் போல அவர் தம் சொந்த ஜனத்தை சிட்சிப்பார், அவர் அவர்களை தண்டிப்பார். அவர்களை நியாயம் தீர்க்கும் நாள் உண்டு. அப்போது அவர்களை நியாயம் விசாரிப்பார். ஆனால் எதிரிகளிடம் அவர்களை காட்டிக் கொடுத்து, அவர்களை அழிக்கும்படி அனுமதியார். எத்தனை நல்ல தேவன் நம் தேவன்!
.
பிரியமானவர்களே, நாமும் கூட பாவம் செய்தாலும், ஒரு தகப்பனைப் போல அவர் நாம் செய்த அக்கிரமங்களுக்கும், பாவங்களுக்கும் தண்டிப்பார். ஆனால் மற்றவர்களிடம் காட்டிக் கொடுத்து, மற்றவர்கள் முன் நம்மை வெட்கப்படுத்த விடமாட்டார்.
.
கர்த்தர் தமக்கு சொந்தமாக தெரிந்துக் கொண்ட ஜனத்திற்கு எதிராக யார் வந்தாலும், கர்த்தர் தம் ஜனத்தோடு இருந்து அதைக் காப்பார். ஏனெனில் ஆயிரம் வருட அரசாட்சி எருசலேமில் இருந்து கர்த்தர் ஆட்சி செய்யப்போகிறபடியால் அதை யாருக்கும் விட்டுக் கொடார். ஆந்திக்கிறிஸ்துவின் காலத்தில் யூதர்கள் உபத்திரவ காலத்திற்கு கடந்து செல்ல நேரிட்டாலும், பின் கிறிஸ்து அந்திக்கிறிஸ்துவோடு போராடி, வெற்றிப்பெற்று, ஆயிர வருட அரசாட்சியை எருசலேமில் அமைப்பார்.
.
இந்த யுத்த நிகழ்ச்சிகள் தற்போது நடந்துக் கொண்டிருந்தாலும், உடனே முடிவு வராது என்று இயேசுகிறிஸ்து சொன்னாலும், ஆனால் இது வேதனைகளுக்கு ஆரம்பம் என்று நம்மை எச்சரித்திருக்கிறபடியால் நாம் நம் தேவனை பற்றிக் கொள்வோம். எந்த வேளையில் கிறிஸ்து வந்தாலும் அவருடன் செல்ல ஆயத்தப்படுவோம். மற்றவர்களை ஆயத்தப்படுத்துவோம். ஆமென் அல்லேலூயா!

Thursday, June 20, 2013

இஸ்ரவேல் தேசம் - அதிசயமான உண்மை

இஸ்ரவேல் தேசம் மிகச் சிறியதாக இருந்தாலும், அதனை சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்து, அதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று அந்த தேசம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து எத்தனையோ முறை பிரயத்தனம் பண்ணியும், 'இதோ, இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குகிறதுமில்லை' என்ற வார்த்தையின்படி தேவனே அந்த நாட்டை காக்கின்றபடியால், யாராலும் அந்த தேசத்தை அசைக்க முடியாது என்பதே அதிசயமான உண்மை.
.
ஆறுநாள் யுத்தத்தில் யுத்தக்களத்தில் நடந்த அற்புதங்கள்:
இஸ்ரவேல் வீரர் கூறின சாட்சி: ஆறு நாள் யுத்தத்தில் நாங்கள் விரைவாய் முன்னேறும்போது ஒரு பலத்த காற்று அடித்தது. பாலைவனத்தில் தாங்கள் ஒரு அடிக்கூட நகர முடியாமல் நிறுத்தப்பட்டனரென்றும், சில நிமிடங்கள் சென்று புயல் நின்றவுடன் தங்கள் முன்னே நிலக்கண்ணிகள் நிறைய வைக்கப்பட்டிருந்ததை புயற்காற்று மணலை முழுவதும் அடித்துச் சென்று தங்களுக்கு காட்டி விட்டதையும் அறிந்து, ஆண்டவர் எவ்வளவு ஆச்சரியமான பிரகாரமாக தங்களுக்கு வர இருந்த ஆபத்தைக் காட்டி கொடுத்து தங்களை காப்பாற்றினார் என்று ஆண்டவரை துதித்தோம் என்றார்.
.
இரண்டாவது வீரர்: இரண்டு வீரர் ஏலாத் துறைமுகத்துக்குப் பக்கத்தில் பாராசூட் மூலமாய் ஆகாயத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்கள் இறங்கிய இடத்துக்குப் பக்கத்தில் ஒரு பெரிய எகிப்திய டாங்க் நின்று கொண்டிருந்தது, அதற்குள்ளிருந்து இரண்டு எகிப்திய வீரர் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தனர். இரு இஸ்ரேலிய வீரரும் கவனமாக டாங்கினிடம் முன்னேறிப்போன போது டாங்கிலிருந்து 18 வீரர்கள் கைகளை தலைக்கு மேலே தூக்கி சரணடைந்தனராம். ஏன் இவர்கள் சரணடைந்தனர் என்று விசாரித்தபோது அவர்கள் தங்களால் ஒரு விரலை கூட அசைத்து டாங்கை ஓட்டவோ அல்லது பீரங்கியை இயக்கவோ முடியாமற் போனது என்றும் விவரிக்க முடியாத ஒரு பயம் தங்களை பிடித்தது என்றும், அதனால்தான் தாங்கள் சரணடைந்ததாகவும் கூறினர்.
.
மூன்றாவது வீரர்: இஸ்ரவேலின் டாங்கி படை ஒன்றை சீனாய் பாலைவனத்தில் ஒரு எகிப்திய டாங்க் படை தாக்கியது. அச்சமயம் இஸ்ரேலிய வீரர் கண்ட காட்சியை அவர்கள் பிற்பாடு கூறியது: ஆகாயத்தில் ஒரு வெண் வஸ்திரம் தரித்த உருவம் தன் கைகளை விரித்துப் பறந்ததாகவும், அவ்வுருவம் தன் வலது கையை தாழ்த்தினபோது, அப்பக்கத்திலிருந்த எகிப்திய டாங்குகள் தீப்பற்றி எரிந்ததாகவும், இடது கையை தாழ்த்தினபோது இடது பக்கத்திலிருந்த எகிப்திய டாங்குகள் தீப்பற்றி எரிந்தததாகவும் கூறினர்.
.
யுத்தத்தில் தப்பி வந்த எகிப்திய படைவீரன் சொன்னது: தேனீக்கள் போன்ற வண்டுகள் எங்களை துரத்திக் கொண்டே வந்தன. ஆகையால் நாங்கள் முன்னேற முடியாமல் பின்வாங்கி ஓடி வர வேண்டதாயிற்று. யாத்திராகமம் 23:28: 'உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையம் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்' என்ற வார்த்தையின்படி குளவிகளை அனுப்பி, தேவன் தம் ஜனத்தை காத்துக் கொண்டார்.
.
நான்காவது யுத்தம்: 1968க்கும், 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் இஸ்ரவேலின் எலலைப்பகுதி முழுவதிலும், மற்றும் இஸ்ரவேல் நாட்டிற்குள்ளும், இஸ்ரேலியர் சோர்ந்து போகும் வகையிலும் பலஸ்தீன கொரில்லாக்களும், சுற்றியிருக்கும் அரபு நாடுகளும் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தன
.
ஐந்தாம் யுத்தம்: யாம் கிப்பூர் என்பதற்கு பாவ நிவாரண பலி செலுத்தும் நாள் என்று பொருள். கர்த்தருடைய கட்டளைப்படி அந்நா
ளில் அக்டோபர் 6, 1973ம் வருடம் படைவீரர் உட்பட இஸ்ரவேலர் யாவரும் ஒரு வேலையும் செய்யாமல் அனுசரிப்பார்கள் என்று அறிந்து, எகிப்து திடுதிப்பென்று அதிகாலை 4 மணிக்கு 3000 டாங்குகளோடும், 2000 கன பீரங்கிகளோடும், 1000 ஆகாய கப்பல்களோடும், 6,00,000 வீரர்களோடும் சூயஸ் நகர் சமீபத்தில் சூயஸ் கால்வாயையும் அதற்கு வடக்கே ஒரு பகுதியையும் தாண்டி இஸ்ரவேலர் காத்து வந்த பகுதிக்குள் முன்னேறி விட்டனர். அதே சமயத்தில் சீரியாவும் பலத்த ராணுவத்துடன் வந்து கோலன் பகுதியில் தாக்குதல் நடத்தியது.
.
முதலில் இஸ்ரவேல் ராணுவம் நிலைமையை சமாளிக்க அதிக கஷ்டப்பட்டாலும், தேவன் அவர்களுக்கு துணை செய்தததினால், போர்ட்செயிடை தன் வசப்படுத்தி, கெய்ரோவிற்கு 10 மைல் தூரமட்டும் எகிப்திற்குள் முன்னேறி விட்டனர். ஆனால் அதற்கு மேல் முன்னேற அமெரிக்க அனுமதி அளிக்கவில்லை. விட்டிருந்தால் எகிப்தையும் அவர்கள் கைப்பற்றியிருந்திருப்பார்கள்!
.
இந்த சமயத்தில் இஸ்ரவேலர் ஆண்டவருடைய பாதுகாப்பு தங்களுக்கு அதிகமாக் இருந்ததென்று கூறினர். யுத்தத்தின் ஆரம்ப நாளில் எகிப்திய இராணுவம் இஸ்ரவேலை சுற்றிலும் வளைத்துக் கொண்டபோது, இஸ்ரேலிய வீரர் சிறு புதர்களுக்கு பின்னாலும், சாக்கு மண்ல் மூட்டைகளுக்கு பின்னாலும் ஒளிந்தனர். சிறிது நேரத்தில் திடீரென்று வெண் வஸ்திரம் தரித்த ஒருவர் இஸ்ரவேல் படைகளுக்கும், எகிப்திய படைகளுக்கும் இடையில் காணப்பட்டார். அவ்வளவுதான்! எகிப்தியர் பக்கமிருந்து வெடிசத்தம் நின்றது. அப்படியே எல்லாவற்றையும் விட்டுவிட்டு எகிப்தியர் ஓடினர்.

.
கோலன் குன்றுகள் மத்தியில் சீரியா 1200 டாங்கிகளை இஸ்ரவேலுக்கு எதிராக நிறுத்தியிருந்தது. அப்பகுதியை காக்க, இஸ்ரவேல் இரண்டு டாங்கிகளை மாத்திரமே நிறுத்தியிருந்தது, பாவ நிவாரண பலி செலுத்தும் அந்நாளில் இஸ்ரவேலை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சீரிய இராணுவம் என்ன காரணத்தாலோ முன்னேறாமல் அப்படியே நின்று விட்டது. அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஒரு இஸ்ரவேல் யூதர், அங்கு மிகப்பெரிய பழுப்பு நிறக் கை எதையோ தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பது போன்ற ஒரு காட்சி தனக்கு தோன்றியதாகவும், ஆண்டவர்தான் சீரிய துருப்புகள் முன்னேறாதபடி தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அவர்களையும் வெற்றிக் கொள்ள தேவன் இஸ்ரவேலருக்கு கிருபை பாராட்டினார்.
.
ஈராக் - குவைத் யுத்தம்.
.
1991அம் ஆண்டு மார்ச் மாதம் சில அமெரிக்கர்கள் இஸ்ரவேல் தேசத்தை சுற்றி பார்க்க சென்றிருந்தபோது, யூதர்கள் தங்களுடைய பாதுகாப்புக்கென்று கொடுக்கப்பட்டிருந்த காஸ் மாஸ்க்குகளை உபயோகிக்காமல் உறையில் போட்டுக் கொண்டிருந்தார்களாம். ஏன் உபயோகிக்காமல் கட்டுகிறீர்கள் என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில், ஆச்சரியத்தை உண்டு பண்ணினது. இராக்கியர் 39 ஸ்கட் ஏவுகணைகளை இஸ்ரவேலுக்கு எதிராக ஏவி விட்டனர்.
பாகமம் 25:2-3 வசனங்களின்படி, 'குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழே கிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத் தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன். அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாய் அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான்; ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம்' இந்த வசனங்களின்படி யெகோவா நாற்பதாவது ஏவுகணையை இஸ்ரவேல் தேசத்தின் மேல் அனுப்பமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையில் கட்டி வைக்கிறோம் என்பதே.
.
நாற்பது அடிகள் வரை அடிக்கலாம் என்ற விதி இருந்தாலும், தவறுதலாக நாற்பது அடிகளுக்கு மேல் அடித்து விட்டால் நீசன் என்று எண்ணப்படுவானேன் என்று காலக்கிரமத்தில் 39 அடிகளோடு நிறுத்திக் கொள்வது பழக்கமாகி விட்டது, அதன்படி 2 கொரிந்தியர் 11:24ம் வசனத்தில் பரி.பவுல் யூதர்களால் ஒன்று குறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன் என்று கூறியிருக்கிறார்.
.
பிரியமானவர்களே, இஸ்ரவேல் தேசத்தை தேவன் இத்தனை உறுதியாக காத்து தம்முடைய வாக்குதத்தங்களை ஆம் என்றும் ஆமென் என்றும் நிறைவேற்றி இருப்பதைக் காணும்போது, நம் தேவன் எத்தனை அருமையானவர் என்று அவரை துதிக்காமல் இருக்க முடியுமா? நான் இந்த கட்டுரைகளை அநேக நாட்களாய் எழுத வேண்டும் என்று தீர்மானித்து இருந்தேன். அதை எழுதும்படியாக தேவன் கிருபை செய்ததை நினைத்து அவரை துதிக்கிறேன். இதற்கு உதவியாக இருந்த எ
ஸ்.டி அம்புரோஸ் அவர்களின் இஸ்ரவேல் என் புத்தகத்திற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.