Showing posts with label role model.. Show all posts
Showing posts with label role model.. Show all posts

Monday, October 14, 2013

இன்னும் இடம் இருக்கிறது

ஒரு மனிதர் பெரிய விருந்தொன்றை ஆயத்தப்படுத்தி அநேகரை அழைக்கிறார். விருந்து வேளை வந்தபோது, விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் சாக்கு போக்குசொல்ல தொடங்குகிறார்கள் ஒருவன் வயலுக்கு போக வேண்டுமென்று சொல்கிறான். மற்றொருவன் மாட்டை சேரிக்க வேண்டுமென்று மறுக்கிறான். இன்னொருவன் இப்போதுதான் திருமணம் செய்திருக்கிறேன், நான் வரவில்லை என்கிறான். ஆனால் அந்த எஜமானின் விருப்பம் எப்படியாவது என் வீடு ஜனத்தினால நிறைய வேண்டும் என்பதுதான். ஆகவே சினங்கொண்டு, 'தெருக்கள், வீதிகளில் போய் ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடர்களையும் கொண்டு என் வீட்டை நிரப்பு' என்று ஊழியக்காரனுக்கு கட்டளையிடுகிறார்.
.
இன்றைக்கு நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மனநிலையும் இப்படித்தான் இருக்கிறது. பரலோகத்தை தம்முடைய ஜனங்களால் நிரப்ப வேண்டுமென்று. ஆனால் 2000 வருடத்திற்கு மேலாகியும் இன்னும் இடம் காலியாகவே உள்ளது. ஆவரிடத்தில் வருவதற்கும், விருந்தில் பங்கேற்பதற்கும், இன்னும் பலர் விநோதமான சாக்குபோக்குகளையே சொல்லி கொண்டு, கர்த்தரிடம் வருவதற்கு நிராகரித்து கொண்டு இருக்கிறார்கள். ஆதலால் கிறிஸ்துவை ஏற்று கொண்ட நம் ஒவ்வொருவரிடத்திலும் தயவு செய்து காலியிடத்தை நிரப்புங்கள் என்று வருந்தி கேட்கிறார். நூறில் ஒரு ஆடு காணாமற் போனால் கூட அவரால் திருப்தியாக இருக்க முடியாது. அந்த ஒரு ஆட்டை கண்டுபிடிக்கும் வரை பரிதபித்து கொண்டே இருப்பார்.

Saturday, July 20, 2013

உன்னை வழிநடத்துவது யார்? வேடிக்கையான கதை

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்­கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?
இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும்.  ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது...
நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருவர் ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில்
சேர்த்துவிட்டது.
அடுத்தவன் பார்த்தான்.  நமக்கு ஒரு ‘வால்’  கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.
இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.
இந்த மனிதனை இழுத்துக்  கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை, திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.
விளைவு...! இருவருமே ஆற்று நீர் போகும்  திசையிலேயே மிதந்து போய்க்
கொண்டிருக்கிறார். அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.