Showing posts with label pray. Show all posts
Showing posts with label pray. Show all posts

Tuesday, July 9, 2013

சாட்சி - பிள்ளைகளின் ஜெபத்தை கேட்டார்

என்னுடைய பெயர் கோயில் துரை. நெல்லை மாவட்டம் நான்குநேரி தாலுக்கா விஜயாச்சம்பாடு என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். அதில் நான் இரண்டாவது மகன். என் சிறுவயதில் தினமும் சர்ச்க்கு செல்வேன். ஆனால் தேவனுக்கு பயப்படும் பயம் என்னில் இல்லாது இருந்தது. நான் +2 வரை படித்து இருக்கிறேன் பள்ளியில் படிக்கும் போது தவறான நண்பர்கள் மூலமாக குடிப்பழக்கம் எனக்கு இருந்தது.

இந்த நிலையிலும் எனக்கு திருமணமு

நல்ல முறைகள் இருந்த இன்ச்டால்மென்ட் பிசினஸ் அடியோடு நாசமாகி போனது. எனக்கு இருந்த எல்லா இடத்தை விற்று மறுபடியும் குடிக்க சென்றேன். இந்த இடைப்பட்ட காலத்தில் என் பிள்ளைகள் உபவாசம் இருந்து எனக்காக ஜெபித்திருகிறார்கள். என் பிள்ளைகளை பார்க்கும்படி வீட்டிற்க்கு சென்ற நான் என் பிள்ளைகளின் நிலைமையை கண்டு மிகவும் வருத்தப்பட்டேன். பின் நாட்களில் தேவன் என் குடிப்பழக்கத்தை முழுவதுமாக மாற்றினார். குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கும் பாக்கியத்தை எனக்கு தந்தார்
ம் நடந்தது. மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். சில நாள் தெரிந்தும் பல தெரியாமலும் குடித்ததால் மிகவும் பெலவீனப்பட்டு 45 நாள்கள் ஆஸ்ப்பத்திரி சேர்க்கப்பட்டேன். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் குடிப்பழக்கம் மிக அதிகம் ஆனதே தவிர குறையவில்லை. இப்படியாக இருக்கும் போது குடும்பத்தில் பிரச்சனை வர ஆரம்பித்தது. சின்ன சின்ன பிரச்சனை வந்து இரண்டரை ஆண்டுகள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தேன். இன்னும் அதிகமாக குடித்து விட்டு சாப்பிடாமல் இருப்பேன். மன அழுத்தம் காரணமாக இன்னும் நிறையே குடிக்க ஆரம்பித்தேன்.

Monday, April 22, 2013

ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன்

ஜெபசீலன் தன் பெயருக்கேற்ப ஒரு ஜெப வீரர். தன் குடும்பத்தோடு மலையடிவார கிராமம் ஒன்றில் குடியிருந்தார். ஞாயிறு தவிர தினமும் மலையில் ஏறி, விறகுகளை வெட்டி, தனது இரட்டை மாட்டு வண்டியில் ஏற்றி வந்து பக்கத்து கிராமங்களில் விற்று வந்து குடும்பத்தை நடத்தி வந்தார். அவர் பக்தி வைராக்கியம் நிறைந்த கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் முழுமையான இரட்சிப்பின் அனுபவத்தில் வாழாதவர்.
.
வழக்கம் போல அன்றும் விறகுகளை வெட்டி தன் வண்டியில் ஏற்றி கொண்டு புறப்பட்டார். பலத்த மழை பெய்தது. சற்று நேரம் மழைக்கு ஒதுங்கி விட்டு வண்டியை ஓட்டி வந்தார். வழியில் சக்கரம் சேறு நிறைந்த ஒரு குழியில் மாட்டி கொண்டது. வண்டியை வெளியே கொண்டு வர மாடுகளை முடுக்கி விட்டார். வண்டி நகரவில்லை. கண்ணீரோடு ஜெபித்தார். ஜெபித்து விட்டு வண்டியை ஓட்டி விடலாம் என்ற நம்பிக்கையில் மாடுகளை அதட்டினார். வண்டி ஒரு அடி கூட நகரவில்லை. மீண்டும் ஒரு முறை ஜெபித்தார். பலனில்லை. மூன்றாவது முறை, 'என்ன ஆண்டவரே, நான் உம் பிள்ளையல்லவா? ஜெபத்தில் எதை கேட்டாலும் செய்வேன் என்று சொல்லியிருக்கிறீரே, நான் இரண்டு முறை ஜெபித்தேன். நீங்கள் வண்டியை வெளியே வர செய்யவில்லையே' என்றார். ஆண்டவர் சொன்னார், ' ஜெபசீலன், நீ ஒரு ஜெபவீரன் என்பது உண்மை. நான் ஜெபத்திற்கு பதில் கொடுக்கும் தேவன் என்பதும் உண்மை. அதே நேரத்தில் உன்னுடைய முயற்சியும் வேண்டும். நீ இப்பொழுதே போய் குழியில் மாட்டியிருக்கும் சக்கரத்தை இழு, நான் உனக்கு உதவியாய் இருப்பேன்' என்றார். அப்படியே ஜெபசீலன் சக்கரத்தை இழுக்க முயற்சித்த போது ஆண்டவருடைய கரமும் இணைந்து செயல்பட்டது. வண்டி குழியை விட்டு வெளியே வந்தது. ஆண்டவருக்கு நன்றி கூறி வண்டியை ஓட்டினார்.

Saturday, March 30, 2013

தேவனின் பதில் தாமதிப்பது ஏன்?

குளத்தில் குளித்து கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அதில் மூழ்கி விட்டான். அனைவரும் பதற்றத்தோடு அதை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே நீச்சலடித்து, மூழ்கி கொண்டிருந்தவனை காப்பாற்ற முடியும். ஆனால் அவரோ அமைதியாக இருக்கிறார். தண்ணீரில் மூழ்கினவன் ஒரு தடவை, இரண்டு தடவை மூழ்கி, மூன்றாம் முறையாக மூழ்க ஆரம்பிக்கிறான். அப்போது நீச்சல் தெரிந்த இவர் குளத்திற்குள் பாய்ந்து சென்று நீரில் மூழ்கினவனை தூக்கி கொண்டு வந்து சேர்த்தார். ஏன் அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்து விட்டு மூன்றாம் முறை மூழ்க ஆரம்பித்தவுடன் பாய்ந்து சென்று காப்பாற்றினார்? பதிலை நீங்களே யூகித்திருப்பீர்கள்! தண்ணீரில் மூழ்கினவனை உடனே நாம் காப்பாற்ற முயற்சித்தால் காப்பாற்றுபனை மூழ்குகிறவன் கட்டி பிடித்து இருவரும் மூழ்க நேரிடும். மூழ்கினவன் தன் சொந்த பெலனை எல்லாம் இழந்தால்தான் அவனை காப்பாற்றுவது எளிது. இதுபோல தான் நமது சில தேவையிலும் தேவன் உதவி செய்ய கடைசி மணித்துளிவரை பொறுத்திருப்பதுண்டு.
 
வேதத்திலே நாம் பார்ப்போமென்றால், சாறிபாத் விதவையின் வாழ்விலும் கடைசி வேளையில் இதே மாதிரியான ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கடும் பஞ்ச வேளையில் அவளிடமிருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து விட்டது. கடைசியாக பானையை வழித்தெடுத்தால் ஒரு படி மாவும், ஒரு கரண்டி எண்ணையும் தேறும். அதில் அடை செய்து சாப்பிட்டு விட்டு உயிரை விட எண்ணினாள். அந்த கடைசி கட்டத்தில் ஆண்டவர் எலியாவை அவளிடத்தில் அனுப்புகிறார். சில வேளைகளில் நம்முடைய வாழ்வில் நமது தேவை உச்சக்கட்டத்தை அடையும்போதுதான் தேவன் நமது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். காரணம் என்ன? நமது சொந்த முயற்சிகளினால் பல இடங்களுக்கு உதவி நாடி சென்று பலரை சந்தித்து, பல கதவுகளை தட்டி எங்கும் உதவிக்கான வாசல் அடைபடும் போது இறுதியில் ஆண்டவரிடத்தில் வந்து 'ஆண்டவரே நீரே என் தஞ்சம், வேறு கதி இல்லை' என்று நாம் சொல்லும் நிலைக்கு வரும்வரை தேவன் நமது வாழ்வில் குறுக்கிட மாட்டார். நாம் அவரிடம் சரணடைந்து அவர் பாதத்திற்கு வரும்வரை அவர் அமர்ந்திருப்பார்.