Showing posts with label இயேசுவையே துதிசெய். Show all posts
Showing posts with label இயேசுவையே துதிசெய். Show all posts

Monday, April 8, 2013

இயேசுவையே துதிசெய் - நீ மனமே இயேசுவையே துதிசெய் - பாடல் பிறந்த கதை

வேதநாயம் சாஸ்திரியார்
தஞ்சாவூரின் மன்னராக சரபோஜி அவர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம். அவருடைய பள்ளித்தோழனாகிய வேதநாயம் சாஸ்திரியார் அவர்கள் கிறிஸ்தவராக இருந்தபோதிலும், சபையின் கவியாக இருந்தார். அவர் எப்போதும் கிறிஸ்துவை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தபடியால், அவர் மேல் பொறாமை கொண்ட அந்த அவையின் மற்ற கவிஞர்கள் மன்னரிடம் ஒரு நாள், தங்கள் இஷ்ட தெய்வத்தை பாடும்படி சாஸ்திரியாருக்கு பணிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அடுத்த நாள் அந்த தெய்வத்தின் நாளாக இருந்தபடியால் அந்த நாளன்று அவர் அவையில் அந்த தெய்வத்தை புகழ்ந்து பாட வேண்டும் என்று இராஜாவின் மூலமாக கட்டளை பிறந்தது.
.
அதைக் கேட்ட சாஸ்திரியார் திடுக்கிட்டுப் போனார். இதுவரை இந்த மாதிரியான சந்தர்ப்பம் நேரிட்டதில்லையே, காத்தரை துதிக்கும் வாயால் நான் எப்படி மற்ற கடவுளை புகழ முடியும் என்று வருத்தத்தோடே தன் வீட்டிற்கு சென்றார். அவர் வருத்தமாய் இருந்ததை கவனித்த அவருடைய மனைவி, என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். அதற்கு அவர் நடந்ததை சொன்னார். ஆதற்கு அவர்கள், நம்முடைய உயிரே எடுத்துக் கொள்ளப்பட்டாலும், இந்த இடத்தை விட்டு நம்மை வெளியே போகச்சொல்லி தள்ளிவிட்டாலும் என்ன நடந்தாலும், கர்த்தரை பாடின இந்த வாயால் நீங்கள் ஒருபோதும் மற்ற தெய்வத்தை புகழக்கூடாது என்று அவரிடம் கூறினார்கள். இருவரும் ஒன்றாக இணைந்து ஜெபித்து விட்டு, அவர் படுக்க சென்றார்
.
அடுத்த நாள் அவையில் மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்தது. சாஸ்திரியார் என்ன பாட்டுப்பாட போகிறார் என்று கேட்பதற்காக.
ல்லாரும் சூழ நின்று பார்த்திருக்க, மன்னர் அவரையே நோக்கி கொண்டிருக்க, எல்லாரும் வியக்கும்வண்ணம், இன்றும் காலத்தால் அழியாத சுவையான, இனிமையான அந்த பாடலை தைரியமாய் தன்னுடைய கணீர் குரலால் கிறிஸ்துவை உயர்த்தி பாட ஆரம்பித்தார்:
.
இயேசுவையே துதிசெய் - நீ மனமே
இயேசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே துதிசெய்
நீ மனமே இயேசுவையே துதிசெய்
.
மாசணுகாத பராபர வஸ்து
நேசக்குமாரன் மெய்யான கிறிஸ்து
இயேசுவையே துதிசெய் நீ மனமே
இயேசுவையே துதி செய்

என்று தொடர்ந்து மூன்று அடிகளை மனமுருக பாடி முடித்தார். உன்னிப்பாக
கேட்டுக் கொண்டிருந்த மன்னரிடமிருந்து, முதலாவது கைத்தட்டல்
ஆரம்பித்தது. மன்னரே கைத்தட்டினப்பின் அந்த பொறாமை கொண்ட மற்ற
கவிஞர்கள் என்ன செய்ய முடியும்? அவர்கள் அமைதியாக தங்கள்
தோல்வியை உணர்ந்து ஒப்புக் கொண்டார்கள்.
.

.
இன்றளவும் சபைகளில் இந்த பாடல் பாடப்பட்டு, தேவனுடைய நாமம்

மகிமைப்பட்டு வருகிறது. நான் ஈரோட்டில் இருக்கும்போது, அங்குள்ள பிரப்
ஆலயத்தில் வருஷத்திற்கு ஒருமுறை அவருடைய மகனாகிய சாஸ்திரியார்
அவர்கள் வந்து பாடல்களை பாடி எங்களை மகிழ்விப்பார்கள். கர்த்தருடைய
நாமம் அவர் மூலமாய் மகிமைப்படும். இன்றளவும் அவர்களுடைய குடும்பம்
கர்த்தரைப் பாடி மகிமைப்படுத்தி வருகிறார்கள். சகோதரன் கிளமெண்ட்
சாஸ்திரியார் அவர்கள் வயலினில் பாடல்களை வாசித்து, கர்த்தருடைய
நாமத்தை மகிமைப்படுத்தி வருகிறார்கள். கர்த்தர் தொடர்ந்து அவர்கள்
மூலமாய் தம் நாமத்தை மகிமைப்படுத்தி, அந்த குடும்பத்தை
ஆசீர்வதிப்பாராக!