.
இரவில்
சாப்பிட போகுமுன், அந்த வால்நட்டை எடுத்து வந்து தன்
தகப்பனிடம் கொடுத்து, ‘அப்பா இந்தாருங்கள், இதை நான்
இந்த நாள் முழுவதும் உங்களுக்கென்று வைத்திருந்தேன்’
என்று அன்புடன் கொடுத்தார். ஆனால் அவரது தகப்பன் அதை
உடைக்கவும் இல்லை சாப்பிடவும் இல்லை.
.
ஆனால்
முப்பது வருடங்கள் கழித்து, அவரது தகப்பன் மரித்த பின்பு
அவருடைய மேஜையில் ஒரு சிறிய பெட்டியில் அந்த வால்நட்
பத்திரமாக வைக்கப்பட்டிருப்பதை அவர் கண்டார். அவரது
தாயார் ‘என் மகனிடமிருந்து கிடைத்த இநத அன்பின் பரிசை
நான் சாகும்வரை பத்திரமாக வைத்திருப்பேன்’ என்று
தகப்பன் கூறினார் என்று கூறினார்களாம்.
.
இன்று நாம்
எந்த அளவு நமது தாயையோ, தகப்பனையோ மனைவியையோ, கணவரையோ,
பிள்ளைகளையோ நேசிக்கிறோம்? ‘ ஷாஜகானைப் போல ஒரு
தாஜ்மகாலை கட்டினால்தான் அன்பு அதிகம் என்று
அர்த்தமில்லை. நாம் நமது அன்பை சிறிய காரியங்களில்
வெளிப்படுத்தினாலும், அது நிச்சயமாக கிரியை செய்யும்.
வெளிநாடுகளில், கணவன் தன் மனைவியை தினமும், உன்னை
நேசிக்கிறேன், நீதான் எனக்கு இனியவள் எனறு
கூறுவார்களாம். அந்த அன்பு எவ்வளவு உண்மை என்று நமக்கு
தெரியாது. ஆனால் அதை அவர்கள் வெளிப்படுத்தும்போது, அந்த
மனைவி சந்தோஷப்படுகிறாள். அந்த பழக்கங்கள் நமது
இந்தியாவின் கலாச்சாரத்தில் இல்லை. ஆனால் வேறு விதத்தில்
கணவன் அதை வெளிப்படுத்தலாம். மனைவியும் அப்படி
வெளிப்படுத்தலாம்.