Showing posts with label வேதாகமம். Show all posts
Showing posts with label வேதாகமம். Show all posts

Friday, May 23, 2014

பெற்றோரை வெறுக்காதே

ஒரு வயதான மனிதர் தன் மகன், மருமகள் மற்றும் நான்கு வயது பேரனோடு தன் மனைவி மரித்துப்பின் வாழ்வதற்கு போனார். அவர் தள்ளாத வயதின் காரணமாக கண்கள் மங்கியதாகவும், நடை தள்ளாடுவதாகவும், கரங்கள் நடுங்கியபடியும் இருந்தது.
.
அந்தக் குடும்பம், தினமும் ஒரு மேஜையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். இந்த வயதானவர், கண்கள் மங்கியதாகவும், கைகள் நடுங்கியபடியும் இருந்ததால், கையிலிருந்த உணவு கீழே விழுவதும், டம்ளரில் இருந்த பால் மேஜை விரிப்பின் மேல் விழுவதாகவும் இருந்தது. அது மகனுக்கும் மருமகளுக்கும் தொந்தரவாக இருந்தது. மகன் ஒரு நாள் சொன்னான், ''இந்த வயதானவர் பண்ணுகிற காரியஙகள், என்னை பாதிக்கிறது. அவர் உண்ணும்போது வரும் சத்தமும், கீழே போடும் உணவுகளும் இந்த இடத்தை அழுக்குப்படுத்தி விடுகின்றன. இதற்கு ஏதாவது ஒரு காரியம் செய்தே ஆக வேண்டும்'' என்று தன் மனைவியிடம் கூறினான்.
.
அதன்படி, அவர்கள் அந்த அறையில் ஒரு மூலையில் அவருக்கென்று ஒரு மேஜையைப் போட்டு, அதில் அவரை அமர்த்தி சாப்பிடவும், மற்றவர்கள் ஒரு மேஜையில் அமர்ந்து சாப்பிடவும் செய்தார்கள். அவர் பீங்கான் தட்டுகளை உடைத்ததால், அவருக்கு மரத்திலான தட்டு ஒன்றும் சாப்பிட சொடுத்திருந்தார்கள். அவர் அங்கு தனியே சாப்பிடும்போது அவர் கண்களில் கண்ணீர் வருவதைக் குடும்பத்தினர் கண்டனர்.
.
இதையெல்லாம் நான்கு வயது பேரன் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் இரவு சாப்பிடுவதற்கு முன் அவன் அங்கிருந்த மரக்கட்டையை வைத்து ஏதோ பண்ணிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட அவன் தந்தை 'மகனே நீ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் என்றுக் அன்பொழுகக் கேட்டார். அதற்கு அந்த நான்கு வயதுச் சிறுவன், 'அப்பா நீங்களும் அம்மாவும் வயதாகும்போது சாப்பிடுவதற்கு இந்த கட்டையிலிருந்து தட்டுகளை செய்துக் கொண்டிருக்கிறேன்' என்றான். அதைக் கேட்ட அத்தம்பதியினர் அதிர்ச்சியில் உறைந்துப் போயினர். அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த இரவிலிருந்து வயதான தகப்பன் திரும்ப எல்லாரும் சாப்பிடும் மேஜைக்கு அழைத்துவரப்பட்டு அவர் முடிவுகாலம் வரை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டார். இப்போது அவர் சாப்பிடும் சத்தமோ, மேஜையின் மேல் விழும் பாலோ எதுவுமே அவர்களுக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.

Monday, November 4, 2013

அச்சிடப்பட்ட முதல் புத்தகம் வேதாகமம்

அச்சு இயந்திரம் கண்பிடிக்கப்பட்ட பின் முதல் அச்சிடப்பட்ட புத்தகம் வேதாகமம். உலகம் முழுவதும் அச்சிடப்படும் ஒரே புத்தகம் வேதாகமம். இன்றய உலகத்தில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே புத்தகம் வேதாகமம். உலக முழுவதும் அதிகமாக விற்பனையாகும் ஒரே புத்தகம் வேதாகமம். அதிகமான மக்கள் வாசிக்கும் ஒரே புத்தகம் வேதாகமம்.
கி.பி 2012 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி உலகத்தில் 6877 மொழிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 518 மொழிகளில் முழு வேதாகமமும், ஏறக்குறைய 2798 மொழிகளில் வேதாகமத்தின் சில பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்கிறது விக்கிபிடியாவின் கணக்கீடு. 

அப்படி என்ன இருக்கிறது இந்த புத்தகத்தில் என்று கேட்க தோன்றுகிறது அல்லவா? சொல்கிறேன். உலகம் தோன்றிய கதையை சொல்லும், உலகத்தின் முடிவை தெளிவாய் சொல்லும், வந்தவர்கள் கதையை விளக்கி சொல்லும், போனவர்கள் கதையை எடுத்து சொல்லும், வருபவர்கள் கதையையும் குறிப்பால் சொல்லும். இது இறந்த கால வரலாறு. நிகழ்காலத்தின் கண்ணாடி, இது எதிர்காலத்தின் ஜோதிடம். இது தான் ஒட்டுமொத்த உலக கிறிஸ்தவர்களும் மார்தட்டி கொள்ளும் செய்தி.

வேதாகமமானது பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்த மக்களை வழி நடத்த தீர்க்கதரிசிகளால் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டது என்பது இரண்டாயிரம் ஆண்டு கிறிஸ்தவ சாம்ரஜ்ஜியத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. 


இதை எல்லோருக்கும் விளங்கும் படி சொல்வதென்றால் கடவுள் மனிதனுக்கு எழுதிய கடிதம் என்று சொல்லலாம். சற்று யோசித்து பாருங்கள் நீங்கள் உங்கள் வருங்கால தலைமுறைகளுக்கு ஒரு செய்தியை விட்டு செல்ல நினைக்கிறீர்கள். இன்னும் நூறு ஆண்டுகளுக்கு அந்த செய்தி அழியாமல் இருக்க வேண்டும். அப்படி என்றால் அந்த செய்தியை எந்த வகையில் கொண்டு செல்வீர்கள். முதலில் மொழி முக்கியம். அந்த மொழி நூறு ஆண்டுகளுக்கு அழியாமல் இருக்க வேண்டும். அடுத்து கொண்டு செல்லும் ஊடகம் முக்கியம் அதாவது மீடியா. (காகிதம், குருந்தகடு, இணையதளம் போன்றவை) 
வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுபாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 5:18

ஈராக் தேசம்... வேதத்தின் உண்மை சரித்திரம்

வேதத்தில் அதிகமாக சொல்லப்பட்டிருக்கும் நாடு எது தெரியுமா? ஆம், இஸ்ரவேல் தேசத்தை குறித்து தான். அதற்கு அடுத்தபடி சொல்லப்பட்டிருக்கிற நாடு எது என்றால் அது ஈராக் தேசம் தான். ஈராக் தேசத்தை குறித்து, அநேக இடங்களில் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஈராக் தேசம் ஈரான் தேசத்தோடு ஒன்பது வருடங்கள் போரிட்டு, தாக்குபிடிக்க முடிந்தது. அதை ஆண்ட சதாம் ஹூசைன் அந்த ஒன்பது ஆண்டுகளும் விடாமல் போரிட்டு, கடைசி வரை யார் ஜெயித்தார்கள் என்றே சொல்ல முடியாதபடி அந்த போர் முடிந்தது. அது முடிந்த உடனே, ஈராக் தேசம் மிகவும் சிறிய அண்டை நாடான குவைத்தை பிடித்து ஆக்கிரமித்தது, அதன்பின் குவைத் தேசததின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, அமெரிக்க படைகள் வந்து, அதை மீட்டு கொடுத்தது. இன்னும் அமெரிக்க படைகள் குவைத்தை பாதுகாத்து வருகின்றது. அதன்பின் சதாம் ஹூசைன் நீதி விசாரிக்கப்பட்டு, தூக்கில் போடப்பட்டது நாம் யாவரும் அறிந்ததே. இந்த நாளில் இந்த ஈராக் தேசத்தை குறித்து, அதன் விசேஷங்களை குறித்து நாம் பார்க்க போகிறோம். வேதத்தில் காணப்படும் அசீரியர்கள், கல்தேயர்கள், மெசபொடோமியா, பாபிலோன் இவை யாவும் பண்டைய ஈராக் நாட்டினையே குறிக்கின்றன.
.
  • ஏதேன் தோட்டம் ஈராக்கிலே இருந்தது.
  • மெசபொடோமியா என்று அழைக்கப்பட்ட ஈராக் தேசத்திலே தான் நாகரீகம் தோன்றியது.
  • நோவா பேழையை ஈராக்கிலேதான் கட்டினார். நோவா எந்த இடத்தில் பேழையை கட்டினார் என்பது வேதத்தில் குறிப்பிடாவிட்டாலும், சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஈராக்கில் தான் கட்டியிருக்க கூடும் என்று நம்புகின்றனர்.
  • பாபேல் கோபுரம் ஈராக் தேசத்தில் தான் கட்டப்பட்டது.
  • ஆபிரகாம் இருந்த கல்தேயரின் ஊரான ஊர் ஈராக்கில் தான் இருந்தது.
  • ஈசாக்கின் மனைவி ரெபேக்காளின் ஊராகிய நாகோர் ஈராக்கில்தான் இருந்தது.
  • யாக்கோபு ராகேலை சந்தித்தது ஈராக்கில்தான்.
  • யோனா பிரசங்கம் செய்த நினிவே ஈராக்கில்தான் இருந்தது.
  • இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களை ஜெயித்த அசீரியா ஈராக்கில் தான் இருந்தது.
  • ஆமோஸ் தீர்க்கதரிசி ஈராக்கில் தான் தீர்க்கதரிசனம் கூறினார்.
  • ஈராக்கில் இருந்த பாபிலோன் எருசலேமை அழித்தது.
  • பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார் யூத வாலிபர்களை அடிமைகளாக கொண்டு சென்றது இந்த ஈராக்கில்தான்.
  • தானியேல் தீர்க்கதரிசி இருந்த சிங்க கெபி ஈராக்கில்தான் இருந்தது.
  • சாத்ராக் மேஷாக் ஆபெத்நேகோ என்னும் எபிரேய வாலிபர்கள் ஏழு மடங்கு சூடாக்கப்பட்ட சூளையில் தூக்கி வீசப்பட்டதும் இந்த ஈராக்கில் தான். அதில் நான்காவது நபராக இயேசுகிறிஸ்து வந்து உலாவினதும் இந்த ஈராக்கில்தான்.
  • எசேக்கியேல் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொன்னது இந்த ஈராக்கில்தான்.
  • பேதுரு சுவிசேஷத்தை ஈராக்கில் பிரசங்கித்தார்.
  • ஏதேன் தோட்டம் ஈராக்கில் இருந்தது –ஆதியாகமம் 2:10-14
  • ஆதாமும்ஏவாளும் உருவாக்கப்பட்டது ஈராக்கில்--ஆதியாகமம்2:7-8
  • சாத்தான் தன்னை முதலில் வெளிப்படுத்தினது ஈராக்கில் ஆதியாகமம் 3:1-6
  • நிம்ரோத் பாபேல் கோபுரத்தை கட்டியது ஈராக்கில் - ஆதியாகமம் 10:8-911:1-4
  • பாஷைகள் தாறுமாறாக்கப்பட்டது ஈராக்கில் ஆதியாகமம் 11:5-11
  • யாக்கோபு 20 வருடங்களை ராகேலுக்காக கழித்தது ஈராக்கில் ஆதியாகமம் 27:42-45
  • முதன்முதல் ராஜாங்கம் ஈராக்கிலே அமைக்கப்பட்டது தானியேல் 1:1-2, 2:36-38
  • எஸ்தர் புத்தகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஈராக் தேசத்திலே நடந்தது
  • நாகூம் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தது ஈராக் தேசத்தை குறித்து தான்
  • வெளிப்படுத்தின விசேஷத்தின் பாபிலோனிய தேசம் இப்போதிருக்கும் ஈராக் ஆகும்.
.
இப்படி சரித்திர புகழ் பெற்ற ஈராக் தேசம் வேதத்தில் இஸ்ரவேல் தேசத்திற்கு அடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஈராக் தேசத்தில் சதாம் ஹூசைனின் மறைவுக்குப்பின் எப்போது பார்த்தாலும் குண்டு வெடிப்புகளும், தீவிர வாத செய்கைகளும் அதிகமாக காணப்படுகிறது. இந்த தேசத்தின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போமா? இந்த தேசத்தில் சமாதானம் நிலவும்படியாக ஜெபிப்போமா? இங்குள்ள கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போமா?

Saturday, August 31, 2013

இதயத்தை மாற்றின வேதாகமம்


கையால் எழுதப்பட்ட மிகப்பெரிய வேதாகமம்,


உலகின் மிகச்சிறிய வேதாகமம்


நீரில் நனையாத வேதாகமம்


ஒவ்வொரு வேத வசனமும் ஒவ்வொரு பகுதியில்


உலகின் மிகபெரிய வேதாகமம்