Showing posts with label death. Show all posts
Showing posts with label death. Show all posts

Friday, March 29, 2013

சாவின் விளிம்பில் தேவன் கொடுத்த பரலோக நிச்சயம் - NEAR DEATH EXPERIENCE - BY CHRISTO SELVAN

வெளிப்படுத்தல்22: 6. பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.




 அன்பு நண்பர்களே,

என் வாழ்வில் நடந்த ஓர் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த சிறு சாட்சியை தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக.

என் தந்தையின் பெயர் திரு.வாசன் தேவராஜ் தாயார் பெயர் திருமதி.கிறிஸ்டி. நான் தேவனை அதிகமாக விசுவாசிக்கிற குடும்பத்தில் பிறந்ததால், சிறுவயதில் இருந்தே கடவுளுகுள்ளாக வளர்க்கப்பட்டேன். அப்பா எனது இரண்டாது அண்ணனுடன் (இம்மானுவேல் பிரைட்) இணைந்து கோவை இரத்தினபுரியில் மாவு மில் நடத்தி வருகிறார். அம்மா ஓர் அரசாங்க பள்ளிகூடத்தில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்தவுடன் கடைக்கு சென்று அண்ணனுக்கும், அப்பாவுக்கும் உதவிசெய்வார்கள். எனக்கு இரண்டு அண்ணன் மற்றும் ஓர் தங்கை உண்டு. மூத்தவர் திரு.சாமுவேல் பாப்டிஸ்ட் (என்னை கடவுளுக்குள் வழிநடத்தியவர்) UESI - TN மூலமாக முழு நேர ஊழியம் செய்து வருகிறார். தங்கை திருச்சியில் தன கணவர் வக்கீல்.திரு தாமஸ் அவர்களோடு வசித்துவருகிறாள்.
எங்கள் இல்லம் கவுண்டம்பாளையம், ஜெயம் நகரில் உள்ளது.

இது எனது திருமணத்திற்கு முன் நடந்த ஓர் நிகழ்வு.

2007ம் வருடம், நவம்பர் 2ம் தேதி, வெள்ளிகிழமை, வழக்கம் போல் என் கல்லூரி வேலைகள் முடிந்த பின்னர்  நான் சார்ந்திருந்த இந்திய நற்செய்தி மாணவர் மன்றத்தின் மூலமாக ஊழியத்தை முடித்துவிட்டு  கடைக்கு சென்றேன். அதன் பிறகு அம்மாவை கடையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம். அன்றும் சுமார் 8 மணி அளவில் அம்மாவை கூட்டி கொண்டு என் வீட்டிற்கு சென்றேன். அதன் பின்னர் என் தங்கையை அழைக்க கவுண்டம்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வர வேண்டும்.

அப்படி வரும் வழியில் கடுமையான மழை பிடித்துக்கொண்டது. தங்கை மழையில் நனைந்துவிடுவாளே என்ற அவசரத்தில் என் வேகத்தை அதிகப்படுத்தினேன். கடுமையான மழையால் ஓர் மின்சார கம்பம் கம்பிகளோடு நடுரோட்டில் சாய்ந்திருந்தது. வேகமாக வந்ததால் நான் அதை கவனிக்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் அதன் மீது வேகமாக மோதியதால் பல அடிகளுக்கு மேல் தூக்கி எறியப்பட்டேன். கீழே விழுந்தது நினைவில்லை, அதற்குள் மயக்கமுற்றிருக்கிறேன்.

அப்பொழுது தேவன் எனக்கு ஓர் காரியத்தை வெளிப்படுத்தினார். நான் உயரே இருந்து கீழ விழும் போது ஓர் பெரிய கரம் என்னை தாங்கி பிடித்து தரையில் கிடத்துவதுபோல் உணர்தேன். ஓர் தண்ணீர் நிரப்பப்பட்ட மெத்தையில் கிடத்துவதுபோல் இந்நிகழ்வு இருந்தது. அப்பொழுது என் உடம்பில் இருந்து என் ஆவி பிரிவதை தெளிவாக அறியமுடிந்தது. நாம் எப்படி ஓர் மனிதரிடம் முகமுகமாய் பேசுகிறோமோ அதை போல் என் ஆவி பிரிவதை உணர்ந்தேன். நான் என் உடலை திரும்பி பார்த்து இறந்து போய் விட்டதை உணர்ந்தேன். "இறந்து விட்டோம், இனி உலகத்தில் நமக்கு இடமில்லை" என்று எனக்குள் பேசியவாறு என் உடலை விட்டு கடந்து சென்றேன். சில வினாடிகளில் பிரகாசமான ஒருவர் என்னை ஓர் இடத்திற்கு புன்னகையோடு கூட்டி சென்றார். அந்த இடம் அமைதி நிறைந்ததாயும், பிரகாசமுள்ளதாயும், சமாதானம் நிறைந்ததாயும் இருந்தது. பல பரிசுத்தவான்கள் அங்கு நித்திரை செய்து கொண்டிருந்தனர். சிலை என்னை பார்த்து அன்போடு சிரித்தார்கள். அவர்கள் முகங்களில் ஓர் சமாதானம், சந்தோசம் இருப்பதை பார்த்தேன். அப்பொழுது பிரகாசமான ஒருவர் என்னை அணைத்தவாறு "உங்களுடைய இடம் அங்கே உள்ளது" என்று சுட்டி காண்பித்தார். நான் அந்த இடத்திற்கு சென்றேன். செல்லும் போது "இந்த இடம் இயேசுகிறிஸ்து மரித்து மூன்று நாள் பரதிசியில் இருந்த இடம். இங்கு இருந்து தான் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்" என்று தேவ தூதன் என்னிடம் சொன்னதை போல் உணர்ந்தேன்.

மரித்து விட்டோம் என்ற பயம் என்னில் சிறிது கூட இல்லை. சந்தோசமாக என்னுடைய இடத்திற்கு நகர்ந்தேன். அருகில் நெருங்கியவுடன் என் மனதில் ஓர் சிந்தனை "ஊழியத்தை யார் கையிலும் ஒப்படைக்காமல் வந்துவிட்டேனே? யார் இதனை செய்வார்? என் ஊழியத்தை இன்னும் நிறைவேற்றவில்லையே? என்று பதறினேன். சிறிது நேரத்தில் பரிசுத்த தேவன் என்னை மீண்டும் இப்பூமிக்கு அனுப்பி வைத்தார். சிறிது நேரம் கழித்து என் காதினுள் தண்ணீர் போவதை உணர்தேன். நான் உயிரோடு எழும்பினேன். எழும்பி பார்த்த போது நான் ஆவியில் எப்படி என் வாகனத்தை பார்த்தேனோ அதே போல் என் வாகனம் நொறுங்கி கிடந்தது. 
 குறைந்த வீடுகள் மற்றும் காட்டு பகுதியானதால் யாரும் வரவில்லை.  உடனே அங்கிருந்து ஓடி என் அண்ணனையும் தங்கையும் அழைத்து விபரத்தை சொன்னேன். ஊரே திரண்டு விட்டது.

அன்று இரவு தேவனின் பாதத்தில் அமர்ந்து ஜெபித்த போது தேவன் சங்கீதம் 63:3 எனக்கு காண்பித்தார். "ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்." இந்த வசனத்தோடு என்னிடம் பேசினார். "உன் ஆயுள் 30 வருடம் தான். நீ என் ஊழியத்தை பற்றி கேட்டதால் உன்னை மீண்டும் பூமிக்கு அனுப்பினேன். இப்போது நீ உன் ஜீவனுக்குரிய நாட்களில் அல்ல. என் கிருபையின் நாட்களில் இருக்கிறாய்" என்று தேவன் என்னிடம் பேசினார். அவருடைய சத்தத்தை என் காதுகள் கேட்டன. தேவனுக்கே மகிமை...

அதன் பிறகு நான் சார்ந்திருந்த ஊழியத்தில் பெரிய வளர்ச்சியை பார்க்கமுடிந்தது. அகஸ்டின் அண்ணன், ரூபன் அண்ணன், ஜெயக்குமார் அண்ணன், அனந்த குமார் மற்றும் சாம்சன் அண்ணன் மற்றும் என் ஊழியத்தை சார்ந்த கல்லூரி மாணவர்கள் மூலமாக தேவன் பெரிய காரியங்களை செய்தார். தேவனுக்கே மகிமை.

இங்கு நான் குறிப்புட்டுள்ளது தேவன் எனக்கு வெளிப்படுத்தின ஓர் மகிமையான காரியம். இதன் மூலம் எனக்கு தேவன் நிச்சயித்தது சொன்னது என்னவென்றால்.... பரதீசி (PARADISE) என்றும், பரலோகம் என்றும், நம் பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டது போல் பரிசுத்த தேவன் நீதிபரராய் வீற்றிருப்பதும் உண்மை. தேவன் என் வாழ்க்கையில் பரலோக நிச்சயத்தை கொடுத்திருக்கிறார். நிச்சயமாக நான் என் மரணத்திற்கு பின்னால் பரலோகம் தான் செல்வேன் என்கிற ஆணித்தரமான நம்பிக்கையை கொடுத்துள்ளார்.

தேவனுக்கு பிரியமானவர்களே, பரலோகம் என்று ஒன்று உண்டு, பரிசுத்த வாழ்க்கை என்பதும், தேவனை உங்களை நேசிக்கிறார் என்பதும் கணக்கிடமுடியாத உண்மை. தேவன் உங்கள் ஆயுசு நாட்களை கூட்டி கொடுத்திருப்பது அவரை அதிகமாக நேசிக்கவும், அவருடைய ஊழியத்தை செய்து பலரை அவருடைய மந்தையில் சேர்க்கவும் தான். இதை உணர்தவர்கலாக தேவனின் நுகத்தை சுமப்போமா?

தேவன் தாமே இந்த சிறு சாட்சியை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
அந்த நம்பிக்கையில் தொடர்ந்து குடும்பமாக ஊழியம் செய்து வருகிறோம். தொடர்ந்து எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.

யோவான் 11:25 இயேசு........... நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

Friday, November 23, 2012

ஆத்துமாவின் மேல் அக்கறை

இந்திராபுரியை ஒரு சிற்றரசன் பல காலமாக ஆண்டு வந்தான். அவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். தனது நான்காவது மனைவியை மற்ற மூவரைக் காட்டிலும் அதிகமாக நேசித்ததால் அவளை பொன் ஆபரணங்களால் அழகுபடுத்தி சிறந்த உணவு வகைகளை அவளுக்கு விருந்தாக்கி மகிழ்ந்தான். எல்லாவற்றிலும் சிறந்ததை மட்டுமே அவளுக்கு கொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியையும் நேசித்தான். ஆனாலும் அவள் மற்ற நாட்டு அரசர்களை கவரும
் வண்ணம் நடந்து கொள்வதால் தன்னை விட்டு என்றாவது ஒருநாள் போய்விடுவாள் என்ற அச்சம் கலந்த நேசம் வைத்திருந்தான்.

அரசனின் இரண்டாவது மனைவி மிகுந்த பொறுமையும், இரக்கமும் கொண்டவள். அரசனின் கடின பாதைகளில் அவனுக்கு ஆறுதலும் ஊக்கமும் சொல்லி ஊன்று கோலாய் திகழ்ந்தாள். ஆகவே அவளையும் அவன் நேசிக்க தவறவில்லை.

அரசனின் முதல் மனைவி அவனது நம்பிக்கைக்குரியவள். அவனது ஆஸ்திகளையும், செல்வத்தையும் உத்தமமாக நிர்வகித்து வந்தாள். அவளை அவன் நேசித்தாலும், அவளோடு அவன் அதிக நேரம் செலவழிக்க விரும்பமாட்டான். அவளுக்கென்று எதுவுமே அவன் தனது வாழ்நாளில் செய்ததே கிடையாது.

திடீரென்று ஒரு நாள், அரசன் கொடிய வியாதியில் சிக்கிக் கொண்டான். தனது மரண படுக்கையில் இருந்து, தனது ஆஸ்தி, பெருமை, புகழ் எல்லாவற்றையும் எண்ணி பார்த்து "எனக்கு இப்போது நான்கு மனைவிகள் உண்டு, ஆனாலும் நான் இறந்த பின் என்னோடு யார் வருவார் நான் தனியாக தானே செல்வேன். ?" என்று புலம்பி வருந்த ஆரம்பித்தான்.

அவன் தனது அருகில் இருந்த நான்காவது மனைவியிடம் "என் வாழ்நாள் முழுவதும் உன்னை அதிகமாக நேசித்திருக்கிறேன், ஆனால் இப்போது தனியாக மரிக்க போகிறேன். என்னோடு நீயும் வருவாயா?" என்றான். "வாய்ப்பே இல்லை" என்று வெடுக்கென சொல்லி அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினாள். அந்த வார்த்தை அவன் இருதயத்தை கத்தியினால் குத்தியது போல ஊடுறுவியது.

இந்த வருத்தத்தோடு மூன்றாவது மனைவியிடம் "என் வாழ்நாள் முழுவதும் உன்னை அதிகமாக நேசித்திருக்கிறேன், ஆனால் இப்போது தனியாக மரிக்க போகிறேன். என்னோடு நீயும் வருவாயா?" என்றான். "இல்லை, வாழ்க்கை அற்புதமானது. நீங்கள் இறந்த பின் நான் வேறொருவரை மறுமணம் புரிந்து சந்தோஷமாக வாழ்வை தொடர்வேன்" என்று சொல்லி திரும்பி பார்க்காமல் வெளியேறினாள்.

இன்னொரு புறம் இருந்த மூன்றாம் மனைவியை நோக்கி, "என் வாழ்நாள் முழுவதும் உன்னை அதிகமாக நேசித்திருக்கிறேன், ஆனால் இப்போது தனியாக மரிக்க போகிறேன். என்னோடு நீயும் வருவாயா?" என்றான். "அன்பரே என்னை மன்னிக்க வேண்டும். நானும் உங்களை நேசிக்கிறேன் ஆனால் உங்கள் கல்லறை வரை மட்டுமே என்னால் வர முடியும்" என்று சொல்லி விலகி நின்றாள். இந்த பதில் அரசனுக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது. அவன் வேதனையில் தலையணை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

அப்போது அங்கொரு குரல், "நான் உங்கோடு வருவேன். எந்த சூழலிலும் நீங்கள் எங்கு சென்றாலும் நான் உங்களோடு வருவேன்" என்ற கேட்டது. சட்டென நிமிர்ந்து பார்தான். அங்கு அவனது முதல் மனைவி மெலிந்து, பொலிவிழந்து, அழகிழந்து நின்று கொண்டிருந்தாள்.

அரசன் அவளது தோற்றத்தை கண்டு மிக வேதனையோடு " எனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் உன்னை நான் நன்கு கவனிக்கவில்லை. ஆனால் என்னை விட்டு விலகிய இந்த மூன்று மனைவிகளையும் அதிகம் கவனித்துவிட்டேனே.இப்போது வருந்தியும் ஒரு பிரயோஜனமும் இல்லையே!" என்று அவளை கட்டி அணைத்து அழுதான்.

நண்பர்களே! ஒரு மனிதனின் சரீரமே! முதல் மனைவி. ஆடம்பர உடைகளால் , பொன் ஆபரணகளால் அலங்கரித்தாலும் அது நமது மரணத்தின் போது நம்மை விட்டு போய்விடும்.

ஒரு மனிதனின் ஆஸ்தி, செல்வம் எனபதே இரண்டாம் மனைவி. ஒருவன் மரித்த பின் அது வேறொரு மனிதனிடம் சென்றுவிடுகிறது.

ஒரு மனிதனின் உறவினர்களும், நண்பர்களும் அவனது மூன்றாம் மனைவி. அவன் மரிக்கும் போது இவர்கள் கல்லறை வரை மட்டுமே அவனோடு வர இயலும்.

ஆத்துமாவே! முதல் மனைவி. பணத்தாலும், புகழாலும், இன்பத்தாலும் வாழ்நாள் முழுவதும் புறக்கணிக்கப்படும் அத்துமாவே ஒரு மனிதனின் மரணத்திற்கு பின்பும் அவனோடு கூட பயணிக்கக் கூடியது. ஆகவே நமது ஆத்துமாவை தேவ வார்த்தையாலும், பிரசனத்தாலும் இப்போதே பெலப்படுதுவோம். ஆத்துமா ஒன்று தான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க கூடியதும் , நித்திய காலம் வாழக் கூடியதுமாகும்.

உங்கள் ஆத்துமாவின் மேல் அதிக அக்கறை கொண்டு தன்னையே தத்தம் செய்த ஆத்தும நேசராம் இயேசு கிறிஸ்துவை அதிகமாய் நேசியுங்கள்.

[மத்தேயு 16:26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?]

Thursday, October 18, 2012

பரலோகம் போக ஆசை

ஒரு வயதான கணவனும் மனைவியும் திருமணமாகி 55 வருடங்கள் கழிந்து ஒரு நாள் ஒரு காரில் செல்லும்போதுவிபத்தில் சிக்கி அந்த இடத்திலேயே மரித்து போனார்கள். கடைசி பத்து வருடங்கள் மனைவி இருவருடைய உடல்நிலை குறித்து மிகுந்த சிரத்தை எடுத்தபடியினால் இருவரும் நல்ல சுகத்துடன் இருந்தனர்.

அவர்கள் மரித்து பரலோகம் சென்றவுடன்பரிசுத்த பேதுரு அவர்களை அவர்களுடைய வாசஸ்தலத்திற்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கு ஒரு பெரிய சமையலறைபெரிய புதிய மாடலில் கட்டப்பட்ட அறைகள் எல்லாவற்றையும் காட்டியவுடன் கணவர் மிகுந்த ஆச்சரியப்பட்டு அது எவ்வளவு விலையாகும் என்று கேட்டார். அப்போது பரி.பேதுரு,  'இது பரலோகம்எல்லாமே இலவசம் என்றார். பின்னர்அவர் அவர்களை சாப்பிடும்  இடத்திற்க்கு கூட்டி சென்றபோது அந்த கணவர் அங்கிருந்த உணவு வகைகளை பார்த்துவிட்டு 'நான் எவ்வளவு சாப்பிடலாம்என்று கேட்டார்அப்போது பரி.பேதுரு 'நான் தான் சொன்னேனேஇது பரலோகம்எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்கணக்கே இல்லை என்று கூறினார். அப்போது அந்த கணவர், 'கொலஸ்ட்ரால் மாத்திரை சர்க்கரை மாத்திரை இங்கு உண்டா?'  என்று கேட்டார். அப்போது பரி.பேதுரு  'இங்கு சாப்பிட்டால் உடலும் பெருக்காது,  கொலஸ்ட்ராலும் பெருகாது எந்த வியாதியும வராதுஎன்று கூறினார்.

அதை கேட்ட கணவர் மிகவும் கோபமுற்றவராக தன் தலையில் இருந்த தொப்பியை கீழே போட்டு மிதித்து காலை தரையில் ஓங்கி அடித்தார். அப்போது பரி.பேதுருவும் மனைவியும் அவரை சாந்தப்படுத்தி  'என்ன என்னவாயிற்று என்று கேட்டபோது அவர் கோபமாக தன் மனைவியை பார்த்து,  'எல்லாம் உன்னால் வந்தது,  நீ மட்டும் அந்த சாலட்டையும்,  கொழுப்பு சக்தியில்லாத (Fat Free Food) உணவையும் கொடுக்காதிருந்தால் பத்து வருடத்திற்க்கு முன்பே நான் இங்கு வந்து எல்லாவற்றையும் அனுபவித்திருப்பேன்  என்று கூறினார்.

நாம் மாத்திரம் பின்னால் வரப் போகும் சுதந்திரத்தை அறிந்திருந்தால் இப்போது நடக்கும் எந்த காரியத்தை குறித்தும் கவலைப்பட மாட்டோம். ஆனால் நாம் காண்கின்ற காரியங்கள்தான் நிரந்தரம் என்று நினைத்து அவைகளையே உறுதியாய் பற்றி கொண்டிருப்பதால்கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் பல அரிய காரியங்களை அறியாமல் இருக்கிறோம்.