Showing posts with label வினோதம். Show all posts
Showing posts with label வினோதம். Show all posts

Tuesday, July 9, 2013

சோம்பேறி கழுதை

ஒரு ஊரில் ஒரு உப்பு வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தன் கிராமத்தில் உள்ள ஆற்றை கடந்து சந்தைக்கு சென்று உப்பு விட்டரு வியாபாரம் செய்வார். தன்னுடைய வியாபாரத்திற்காக தன்னுடைய செல்லமான கழுதையை பொதி சுமக்கும்படி பழகுவிதிருந்தார்.
அப்படியாக ஒரு நாள் சந்தைக்கு ஆற்றை கடந்து செல்லும் போது கால் இடறி கழுதை ஆற்றில் விழுந்து மூட்டையில் இருந்த உப்பு எல்லாம் கரைந்து விட்டது. அது வியாபாரிக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. அனால் கழுதை எல்ல பாரமும் குறைந்தது என்று எண்ணி சந்தோசப்பட்டது.
மறுநாள் வியாபாரி சந்தைக்கு செல்லும் போது கழுதை தவறி விழுவது போல் நடித்து மீண்டும் உப்பை கரைத்து விட்டது. கழுதைக்கு மட்டற்ற மகிழ்ச்சி வியாபாரிக்கு மிகுந்த வருத்தம்.

மீண்டும் இந்த வழக்கத்தை கழுதை கடைபிடிக்க, வியாபாரி கழுதைக்கு படம் கற்பிக்க நினைத்து, உப்புக்கு பதிலாக பஞ்சை மூடியில் வைத்தார். கழுதை அதை அறியாமல் ஆற்றில் வழக்கம் போல் விழ, மீண்டும் இராமான பஞ்சு மூட்டையை தூக்க முடியாமல் திணறியது. அப்பொழுது தான், தன் தவறை உணர்ந்து தன் கடமைகளை கவனமாய் செய்ய ஆரம்பித்தது.

பொய் நாவு - ஒரு வினோத பழக்கம்

ஆப்பிரிக்காவில் ஒரு இனத்தவரிடம் ஒரு வினோத பழக்கம் உண்டு. யாராவது ஏதாவது தவறு செய்தால் அங்குள்ள வைத்தியர் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரிடம் கேள்விகள் கேட்பார். ஆனால் யாரும் தங்கள் தவறை ஒப்புக் கொள்ளவில்லை என்றால், யாரையெல்லாம் சந்தேகப்படுகிறார்களோ அவர்களை அழைத்து, அவர்கள் முன்பாக ஒரு ஈட்டியின் முனையானது சூடுபடுத்தப்படும். அது நன்கு சூடாகும்போது அதை கொண்டு வந்து சந்தேகப்படுபவர்களின் நாவில் வைக்கப்படும். தவறு செய்தவன் நாவில் வைக்கும்போது அவன் வலியில் துடிப்பான். மற்றவர்கள் நாவில் வைக்கும்போது அது ஒன்றும் செய்யாது என்பது அவர்களின் நம்பிக்கை.
.
அந்த சூடாக்கப்பட்ட ஈட்டி தங்கள் வாயின் அருகில் வர இருக்கும்போது தவறு செய்தவர்கள் காட்டிற்குள் ஓடி ஒளிவார்கள். ஏனெனில் பொய் சொன்னவர்களின் நாவை அந்த சூடு பொசுக்கி விடும் என்று பயந்து. ஆனால் மற்றவர்களின் நாவுக்கு அந்த சூடு ஒன்றும் செய்யாது.
இது ஒரு குருட்டு நம்பிக்கை என்று நாம் நினைக்கலாம், ஆனால் அறிவியற்பூர்வமாக தவறு செய்யாதவர்கள் பதறாதபடியால், அவர்கள் நாவு ஈரமாயிருக்கும். அதனால் அந்த நாவு ஒரளவு சூட்டை தாங்க முடியும். ஆனால் தவறு செய்தவர்களின் நாவு வறண்டு போய் இருக்கும். சூடு வைக்கப்படும்போது அது பொசுங்கி போகும் என்று கூறப்படுகிறது. ஆதலால் அந்த கிராமத்தில் யாரும் தவறு செய்யவோ, பொய் பேசவோ பயப்படுவார்கள்.
.
கர்த்தருக்கு அருவருப்பான ஆறு காரியங்களில் பொய் நாவும் ஒன்று வேதம் கூறுகிறது. 'ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே' (நீதிமொழிகள் 6:16- 19). கர்த்தர் வெறுக்கும் இந்த ஆறு காரியங்களில் பொய் நாவு இரண்டாவதாக வருகிறது.
.
சிலருக்கு பொய் என்பது சரளமாக வரும். ஏன் விசுவாசிகள் என்று சொல்பவர்களுக்கும் பொய் சொல்வது என்பது ஒரு குற்றமாகவோ, பாவமாகவோ தெரிவதில்லை. சும்மா ஒரு சிறிய பொய் தானே சொன்னேன் என்று பொய் சொல்வதை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளுகிறவர்களும் உண்டு. கர்த்தர் பொய் நாவை அருவருக்கிறார் என்று வேதம் சொல்கிறது.

Monday, April 8, 2013

எந்த பொல்லாங்கும் தொட முடியாதபடி

தென் ஆப்பிரிக்க காட்டுப்பகுதியில் இன்றும் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் பிள்ளைகள் காட்டில் தைரியமாக வாழ பழக்கிக் கொள்வதற்காக சில பயிற்சிகளைக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அந்த பிள்ளையை அழைத்துச் சென்று பெரிய மரத்திலுள்ள பொந்தில் உட்கார வைத்து விட்டு வந்து விடுவார் தகப்பன். ஒளி மங்கும் வேளையிலே காட்டு மிருகங்களின் சத்தம் கேட்டு பிள்ளை பயப்படும். சற்று நேரத்திற்கெல்லாம் விலங்குகள் அங்கு வந்து உலாவும். அவற்றில் சில அந்த பிள்ளையை நெருங்கும்போது, பிள்ளை வீறிட்டு அலறி அழும். அம்மிருகம் குழந்தையின் மிக அருகில் வரும் சமயம் அதன் உடலில் விஷ அம்பு பாய்ந்து கீழே விழும். யார் அக்குழந்தையை காப்பாற்றியது? யார் மிருகத்தை கொன்றது? அப்பிள்ளையின் அன்பு தகப்பனே. ஆம், அவர் அப்பிள்ளையை தனியே விடவில்லை. தொலைவில் அமர்ந்து வில் ஏந்தியவராக அவனையே கூர்ந்து கவனித்து கொண்டிருந்தார். ஆபத்து நெருங்குகையில் துரிதமாய் செயல்பட்டு அவனை காப்பாற்றினார்.
.
ஆம், பிரியமானவர்களே, நாம் வாழும் இவ்வுலகம் தேவனால் சபிக்கபட்ட பூமிதான். எங்கும் துஷ்டத்தனமும், பொல்லாங்கும் நிரம்பி காணப்படுவதை காண்கிறோம். பெண்களுக்கெதிரான வன் கொடுமைகளும், தீவிரவாதமும், கொள்ளை நோய்களும், விபத்துகளும், விபரீதங்களும் நடப்பதை காணும்போது மனுபுத்திரரின் இருதயம் நடுங்குகிறது. எப்போது என்ன நேரிடுமோ? என எண்ணி கலங்க வேண்டியதாயுள்ளது.
.
இப்படிப்பட்ட உலக சூழ்நிலையில் தேவன், தம்முடைய பிள்ளைகளுக்காக செய்வதென்ன தெரியுமா? அந்த காட்டிலே தனது பிள்ளையை எந்த பொல்லாங்கும் தொட முடியாதபடி அதன் தகப்பனார் எப்படி பாதுகாத்தோரோ, அப்படியே நம்மை இப்பொல்லாத உலகத்தினின்று பாதுகாப்பதற்கும், நமக்கொரு பரம தகப்பன் உண்டு. அந்த உன்னதமான தேவனின் மறைவில் நாம் இருப்போமென்றால், அவர் நம்மை பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பார். வேடனுடைய கண்ணிக்கும் நாம் தப்பித்துக் கொள்வோம். பொல்லாப்பு நமக்கு நேரிடாது, எந்த வாதையும் நம் வீட்டை தொடாது.
.
இளம் பிள்ளைகளை தனியாக வேலைக்கு அனுப்புவதற்கும், கல்லூரிகளுக்கும் அனுப்புவதற்கு நாம் பயப்பட தேவையில்லை. ஏனெனில் நாம் செல்லும் வழிகளில் நம்மையும் நம் பிள்ளைகளையும் காக்கும்படி தூதர்களை அவர் அனுப்புவார். சிங்கம் போன்ற பயங்கர பிரச்சனைகளையும் வலுசர்ப்பமான பிசாசின் தந்திரங்களையும் நாம் மிதித்துப்போட முடியும். ஆபத்தில் அவரே நம்மோடிருந்து நம்மை தப்புவிப்பார் அல்லேலூயா!

Saturday, March 30, 2013

தாழ்மை - நற்பண்பு

ஒரு பெரிய
கர்வாலி மரமும் சிறிய புல்லும் பற்றிய ஒரு சிறுகதை உண்டு. அக்கர்வாலி மரம் தன்னருகில் வளர்ந்து வந்த சிறிய புல்லை நோக்கி, 'ஓ அற்பப்புல்லே, நீ எவ்வளவு பெலனற்றதும், நிலையற்றதும் சிறியதுமாயிருக்கிறாய்! ஆனால் என்னைப் பார் நான் எவ்வளவு உயர்தோங்கி பெரிய மரமாயிருக்கிறேன்' என்று அடிக்கடி பெருமையடித்துக் கொண்டது. தன்னைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொள்ள அந்த புல்லுக்கு ஒன்றுமில்லாதிருந்தபடியால் அது எப்போதும் அமைதியாகவே இருக்கும். ஒரு நாள் ஒரு பலத்த புயல் காற்று வீசவே, அந்த பலம் வாய்ந்த கர்வாலி மரம் ஆட ஆரம்பித்தது, தன்னால் இயன்ற மட்டும், நேராக நிமிர்ந்து நிற்க முயற்சித்தும் அது வெகு சீக்கிரமாகவே பெருஞ்சத்தத்துடன் தரையில் விழுந்து விட்டது.
.
.புயல் காற்று ஓய்ந்தபோது, கர்வாலி மரம் புல்லுக்கு என்ன நேர்ந்தது என்று
அறியும்படி மெதுவாக அதனை எட்டிப்பார்த்தது. புல் எப்போதும் போல்
தழைத்து நின்று கொண்டிருந்தது. அதை கண்ணுற்று வியப்படைந்த
கர்வாலிமரம், 'ஓ, சிறிய புல்லே, அவ்வளவு உயர்ந்தோங்கிய என்னாலேயே
அப்பலத்த புயற்காற்றில் நிலைநிற்க முடியவில்லையே, நீ இவ்வளவு சிறிய
அற்பப்புல்லாயிருந்தும், உன்னால் எப்படி அப்புயலை சமாளிக்க
முடிந்தது?'என்று கேட்டது. அதற்கு அந்தப்புல் புன்முறுவுலுடன், 'அது
மிகவும் எளிதானது. காற்றும் புயலும் என் மீது வீசும்போது நான் தலை
குனிந்து கொள்வேன். அப்பொழுது அவை எனக்கு எந்த பிரச்சனையையும்
உண்டாக்காமல் எனக்கு மேலாக கடந்து சென்று விடும்' என்று பதிலளித்தது,
.

.தாழ்மை எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நற்பண்பு பார்த்தீர்களா? நாம் மற்றவரை மன்னிக்க பழகும்வரை ஒருக்காலும் மெய்யான மனத்தாழ்மையை கற்றுக் கொள்ள முடியாது. மன்னிக்க முடியாத ஒவ்வொரு ஆவியின் அடித்தளத்திலும் பெருமை நிறைந்திருக்கிறது. நம்மை யாராகிலும் தரக்குறைவாய் பேசி அவமதிக்கும்போது நம் மனம் புண்படுமாயின், உண்மையில் புண்படுத்தப்பட்டிருப்பது நம்முடைய பெருமையே ஆகும்.

Tuesday, February 26, 2013

பாவம் என்னை சுற்றி இருக்கிறது

கோட்டையூர் வீரவர்மன் தன்னுடைய ராஜ்யத்தை கட்டுகோப்பாக வைத்திருந்தான். எல்லையை சுற்றி அலங்கமும் அதன் மத்தியில் மன்னர் தங்கும் கொட்டையும் மிக அழகாக அமைத்திருந்தான். கோட்டையின் பின் புறம் இருந்த குளத்தில் அவ்வப்போது பொழு போக்குவான்.

ஒரு நாள் இரவு ஒரு சத்தத்தை கேட்டான். அது அவனை தூங்கவே விடவில்லை. மிகவும் எரிச்சலோடு காலையில் எழுந்து வேலைகாரர்களிடம் அந்த சத்தத்தை குறித்து விசாரித்தான். அதற்கு வேலைக்காரர்கள் "இது கோட்டைக்கு பின்புறம் உள்ள குளத்திலிருந்து வரும் தவளைகள் சத்தம். இது பனிக் காலம் ஆதலாம் அப்படி தான் சத்தமிடும்" என்றனர்.

இந்த சத்தத்திலிருந்து எப்படி விடுபடுவது என்று தனது மந்திரிகளை நாடினான். மந்திரி ஒருவன் ஒவ்வொன்றாக பிடித்து நெருப்பில் போடலாம் என்றான். அப்படியே செய்ய உத்தரவிட்டான் மனனன். காரியங்கள் நடந்தது. அடுத்த இரவும் வந்தது. மீண்டும் சத்தமும் வந்தது.

மறுபடியும் ஆலோசனை கூட்டத்தை கூட்டினான். அப்போது ஒரு அறிவாளி மந்திரி குளத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் மாற்றிவிடலாம் அப்போது தவளை எல்லாம் ஒழிந்துவிடும் என்றான். அப்படியே செய்யுமாறு உத்தரவிட்டான். ம்ஹும் சத்தம் நின்றபாடில்லை ஆகவே மன்னன் மிகவும் கோபமடைந்தான்.

மன்னன் தனது நாட்டின் குடிகளுக்கு பொதுவான அறிவிப்பு கொடுத்தான். தவளை சத்தத்தை ஒழிப்போருக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும் என்று பிரகடனம் செய்தான்.

ஒரு முதியவர் மன்னனிடம் வந்து, "உங்கள் நிம்மதியான தூக்கத்திற்கும், தவளை சத்தத்திலிருந்து விடுபடவும் என்னிடம் ஒரு வழி உண்டு" என்றார். "தயவு செய்து சொல்லுங்கள்" என்றான் மனனன்.

"நீங்கள் நித்திரை செய்யும் போது உங்கள் இரண்டு காதுகளிலும் பஞ்சு சுருளை வைத்தால் போதும். எந்த சத்தமும் இல்லாமல் நல்ல நித்திரை உங்களுக்கு உடனே கிடைக்கும்" என்றார்.

இந்த கதையை வாசித்துக்கொண்டிருக்கும் எனது அருமையானவர்களே! எங்கு பார்த்தாலும் பாவம் என்னை சுற்றி இருக்கிறது என்கிறீர்களா?

குளம் என்றால் தவளை இருக்க தான் செய்யும். நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.(1 யோவான் 5:19)

நாமோ நம்முடைய கண்களையும், இருதயத்தையும், செவியையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அர்ப்பணித்து தூய ஆவியானவரோடு நாமும் இணைந்து செயல்படும் போது எல்லா பாவத்திற்கும் விலகி பரிசுத்தமாக வாழ முடியும்.

For more Stories:

kadambamtamil.blogspot.com

நன்மைசெய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த  சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும்போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான்.

சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்கவில்லை.

அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னு கத்த
ஆரம்பிச்சுது. சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.

தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. கூறுகெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

ஹி ஹி ஹி என்று சிரித்துக் கொண்டிருக்கும் எனக்கு அருமையானவர்களே! நாமும் பிறருக்கு நன்மையே செய்தாலும் சில பல நேரங்களில் இதுபோல தான் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறோம். இருந்தாலும் பரவாயில்லை மீண்டும் மீண்டும் நன்மை செய்வோம்.

ஏனென்றால் பரிசுத்த வேதாகமம் சொல்கிறது,

கலாத்தியர் 6:9 நன்மைசெய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக

II தெசலோனிக்கேயர் 3:13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்

For More stories, Please Visit

http://kadambamtamil.blogspot.in/

Friday, February 22, 2013

கழுகுக்குச் சமானமாய்

கழுகுகளைப்போல நாமும் வாழப் பழக வேண்டும்.
பறவைகளிலேயே கழுகுகளின் கதை மிகச் சுவாரஸ்யமானது. மிக அதிக நாட்கள் உயிர்வாழும் பறவைகள் இனம் இவைகள் தாம். இவைகளால் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியுமாம். ஆனால் அந்த எழுபது வயதுவரை எட்ட அவை சில மிக கடினமான முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும்.

கழுகுகள் தனது 40 வயதுகளை எட்டும் போது அவைகளால் எளிதில் தனது நீண்ட வளைந்து கொடுக்கும் நகங்களால் இரைகளை கொத்தி எடுத்துச்செல்லமுடியாது.
அவைகளின் நீண்ட கூர்மையான அலகுகளும் வளைந்து போய்விடும். வயதான அதன் கனமான இறகுகள் அதன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு அதை பறக்க இயலாமல் செய்துவிடும். இந்நிலையில் அவைகளுக்கு இரண்டே வழிகள் தான் மிஞ்சும். ஒன்று அப்படியே செத்துப்போவது அல்லது அந்த 150 நாட்கள் நீடிக்கும் மிகக்கடினமான அவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சியை கடந்து போவது. இதற்காக அவை மலை உச்சியில் தாங்கள் கட்டியிருக்கும் கூடுகளில் போய் தங்கி இருக்கும். தனது பழைய அலகை பாறைகளில் கொத்தி கொத்தி அதை பிடிங்கிப்போட்டு அவை தங்களுக்கு புது அலகுகள் வர காத்திருக்கும். அது போலவே அவைகளின் பழைய நகங்களும் பிடுங்கப்பட்டு புது நகங்கள் முளைக்கத் தொடங்கும். புது நகங்கள் வளரத்தொடங்கியவுடன் அவை தனது பழைய இறகுகளையும் பிடிங்கிப்போட்டுவிடும். ஐந்து மாதங்கள் கடந்ததும் அவை மீண்டும் புத்துயிர்பெற்று திரும்பவும் இன்னும் 30 ஆண்டுகள் உயிர்வாழ பூமிக்கு திரும்பி வரும்.

சிலசமயங்களில் மாற்றங்கள் நமக்கும் அவசியம்.பலசமயங்களில் நாம் உயிர்தப்பி வாழ நம்மில் பலமாற்றங்களை செய்யவேண்டியுள்ளது. பழைய நினைவுகள், பழைய பழக்கவழக்கங்கள், பழைய மூடநம்பிக்கைகளை என பலவற்றை விட்டொழிக்கவேண்டியுள்ளது. பழைய சுமைகளிலிருந்து விடுபடுதலே நமக்கு புதிய வாழ்க்கை அமைய எளிய வழியாகும்.

ஏசாயா 40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்

Sunday, January 13, 2013

வேதாகம சங்கம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது?

முன் நாட்களில் வேதாகமம் கிடைப்பது என்பது மிகவும் அரிதான காரியமாகும். இந்தியாவில் மட்டுமல்ல, கிறிஸ்தவ நாடுகள் என்று சொல்லி கொள்ளும், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இதே நிலை! வேதாகம தட்டுப்பாட்டினால் பைபிள் சொசைட்டி என்று சொல்லப்படும் வேதாகம சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் வேதாகமம் அனைவருக்கும் கிடைக்கும்படியாக இந்த சங்கம் உதவி செய்தது. இந்த அமைப்பை ஆரம்பிப்பதற்கு ஒரு சிறுமிதான் காரணமாக இருந்தாள். அதை குறித்து பார்ப்போம்.
.
மேரி ஜோன்ஸ் என்னும் சிறுமி 1784ஆம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தாள். அவளுடைய தகப்பன் நெசவு தொழில் செய்பவராயிருந்தார். மேரி தன் 8ஆவது வயதில் கிறிஸ்துவை ஏற்று கொண்டாள்.
.
அவளுடைய கிராமத்திற்கு தாமஸ் சார்லஸ் என்பவர் ஏழை குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு எழுத்துக்களை கற்று கொடுக்க வருவார். அங்கு படிக்க கற்று கொண்ட மேரி, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு பண்ணைக்கு சென்று அங்கிருந்த வேதாகமத்தை எடுத்து படிப்பது வழக்கம். வேதாகமத்தை படிக்க படிக்க, தனக்கென்று சொந்தமாக ஒரு வேதாகமம் வேண்டும் என்கிற ஆவலும் எண்ணமும் மேரிக்கு உருவாக ஆரம்பித்தது.
.
ஆனால் அந்த எண்ணம் ஈடேறாத காலம். ஏனென்றால் பணம் கிடைப்பது என்பது மிகவும் கடினமான காலமது. அப்படி பணம் இருந்தாலும், எந்தவித உதவியுமின்றி, வாகன வசதிகளுமின்றி, 25 மைல் தூரத்தில் இருந்த பாலா என்னுமிடத்தில் மட்டுமே வேதாகமம் கிடைத்தது. அப்படி போனாலும், போகும் நேரத்தில் வேதாகமம் இருக்கும் என்று சொல்ல முடியாது.
.
ஆனால் மேரி மனம் தளரவில்லை, கொஞ்சம் கொஞ்சமாய் பணத்தை சேர்க்க ஆரம்பித்தாள். காய்களை விற்பது, வீடுகளில் சென்று வேலைகளை செய்வது இப்படி சிறுசிறு வேலைகளை செய்து, அதில் வரும் சிறு வருமானத்தை சேர்த்து வைத்து, கடைசியில் அவளுக்கு வேதாகமம் வாங்க தேவையான பணம் ஆறு ஆண்டுகளுக்கு பின் கிடைத்தது.
.
அதை சந்தோஷமாய் எடுத்து கொண்டு, மேரி வெறுங்கால்களோடு, (செருப்பு வாங்க பணம் இல்லை) 25 மைல் தூரத்தில் இருந்த பாலாவிற்கு செல்ல ஆரம்பித்தாள். வழியில் இருந்த கற்களையும் முட்களையும் பொருட்படுத்தாது, ஆறுகளையும், குன்றுகளையும் கடந்து, கடைசியில் பாலாவை நோக்கி சென்றடைந்தாள். பாலாவில் தாமஸ் சார்லஸ் என்பவரிடம் மாத்திரமே வேதாகமம் விற்கும் கடை இருந்தது. ஆனால் என்ன ஒரு கஷ்டம், அங்கிருந்த வேதாகமங்கள் எல்லாம் விற்று போயிருந்தன, அல்லது யாராவது வேதாகமம் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்து போயிருந்தனர். அதை கேட்ட மேரி அழ ஆரம்பித்தாள். தன் இருதயம் வெடித்து விடுவது போல அவள் அழுவதை கண்ட சார்லஸ், வேறு ஒருவர் ஆர்டர் பண்ணியிருந்த வேதாகமத்தை அவளுக்கு கொடுத்தார். அதை பெற்று கொண்ட அவளுடைய ஆனந்தத்திற்கு அளவேயில்லை. சந்தோஷமாய் வீட்டிற்கு திரும்பினாள்.
.
மேரி இப்படி 25 மைல் தூரம் வேதாகமத்தை வேண்டி வந்தது, தாமஸ் சார்லஸின் இருதயத்தை தொட்டது. மேரியை போல எத்தனையோ பேர் வேதாகமம் வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் வாங்க முடியாதவர் உண்டு என்பதை உணர்ந்து, அவர் Council of the Religious Tract Society க்கு கடிதம் எழுதினார். அதன்படி 1804ஆம் ஆண்டு British and Foreign Bible Society ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் இங்கிலாந்து தேசம் முழுவதற்கும் வேதாகமம் கிடைக்கும்படியாக முயற்சிகள் எடுக்கப்பட்டது.
.
அதன்பின் மற்ற நாடுகளுக்கும் வேதாகமம் கிடைக்கும் முயற்சியில் வேதாகம சங்கம் ஈடுபட்டது. அநேக ஆண்டுகளுக்குப்பின் இப்போது எல்லா நாடுகளிலும் வேதாகம சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முழு வேதாகமோ, அல்லது வேதாகமத்தின் பாகங்களோ, மொழி பெயர்ப்பு செய்யும் வேலையை இந்த சங்கம் செய்கிறது. இதுவரை மொத்தம் 2,500க்கும் மேலான மொழிகளில் வேதாகமம் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதிலே நாம் திருப்தி அடைந்து நின்று விடக்கூடாது. கர்த்தரின் வருகைக்குள்ளாக மொழி தெரிந்த ஒவ்வொரு மனிதனின் கைகளிலும், அவனுடைய மொழியில் வேதாகமம் கிடைக்கும் வரைக்கும் நாம் ஜெபிப்பதிலும், அதற்கு ஒத்துழைப்பதிலும் ஓய்ந்திருக்க கூடாது.
.
உலகில் எத்தனையோ மேரி ஜோன்கள் தங்களுக்கென்று ஒரு வேதாகமம் கூட இல்லாத நிலையில் இருக்கலாம். ஒரு வேளை வேதாகமம் இருந்தாலும் அவர்களுக்கு தெரிந்த மொழியில் வேதாகமம் இல்லாதிருக்கலாம்... அவர்களுக்காக ஜெபிப்போமா?

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்

உங்களுக்கு சொந்தமாக ஒரு வேதாகமம் இருந்தால் நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் உலகத்திலுள்ள மூன்றில் ஒரு பங்கு மக்களிடம் வேதாகமம் கிடையாது.
.
நீங்கள் காலையில் எழுந்தரிக்கும்போது, முழு சுகத்தோடும் பெலத்தோடும் எழுந்திருந்தால் நீங்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் மில்லியன் மக்கள் இந்த வார இறுதி வரைகூட ஜீவிக்க மாட்டார்கள்.
.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் போரில் ஈடுபடாதிருந்தால், சிறைச்சாலையின் தனிமையை அனுபவிக்காதிருந்தால், பசியின் கொடூரத்தை அனுபவியாதிருந்தால் நீங்கள் 500 மில்லியன் மக்களை காட்டிலும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
.
நீங்கள் சபை ஆராதனைக்கு விடுதலையோடு எந்தவித பயமுமில்லாமல், எந்தவித பயமுறுத்தலும் இல்லாமல் கர்த்தரை தொழுது கொள்ள செல்வீர்கள் என்றால், மூன்று பில்லியன் மக்களைவிட நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
.
உங்களுக்கென்று ஒரு பிரிஜ் இருந்து, நீங்கள் தலை சாய்க்க ஒரு வீடு இருந்து, நீங்கள் அணிந்து கொள்ள நல்ல உடை இருந்தால் நீங்கள் உலகத்திலுள்ள 75 சதவிகித மக்களை விட பணக்காரர்.
.
உங்கள் மணி பர்சிலும், உங்கள் பேங்கிலும் உங்களுக்கென்று பணம் இருந்தால், நீங்கள் எட்டு சதவிகித பணக்காரர்களில் ஒருவர்.
.
உங்கள் பெற்றோர் உயிரோடும், இன்னும் இணைந்து இருந்தால், நீங்கள் மிகவும் அபூர்வமானவர்.
.
நீங்கள் உங்கள் தலையை உயர்த்தி, புன்னகைத்து தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருந்தால் நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர். அநேகர் அந்த நன்றியுணர்வு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
.
நீங்கள் ஒருவரின் கரத்தை பிடித்தோ, அணைத்தோ அல்லது அவர்களது தோள்களை தொட்டு ஆறுதல் படுத்துவீர்களானால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் நீங்கள் கர்த்தரின் அன்பை வெளிப்படுத்துகிறீர்கள்.
.
நீங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொண்ட விசுவாசியாக இருந்தால் உலகத்திலுள்ள சிறுபான்மை மக்களை சேர்ந்தவராவீர்கள்.
.
நீங்கள் இதை வாசிப்பீர்களானால், உலகில் உள்ள 3 பில்லியன் மக்களை விட ஆசீர்வதிக்கப்பட்டவர். ஏனெனில் அவர்களுக்கு வாசிக்கவே தெரியாது.
.
உலகில் எத்தனையோ பில்லியன் மக்கள் இருந்தும் தேவன் நம்மை அவருக்கு சொந்தமாக தெரிந்து கொண்டாரே, நாம் எத்தனை பாக்கியவான்கள்! வானத்தையும் பூமியையும் படைத்த சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நாம் பிள்ளைகளாகும் பாக்கியத்தை கொடுத்திருக்கிறாரே நாம் எத்தனை பாக்கியமுள்ளவர்கள்! நீங்கள் என்னை தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களை தெரிந்து கொண்டேன் என்று நம்மை தெரிந்து கொண்டாரே அவர் எத்தனை நல்லவர்!

Monday, December 10, 2012

கடித்துப்பட்சித்தீர்களானால் அழிவீர்கள்

ஒரு சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தான். அவன் முகம் மிகவும் கோபமாக இருந்தது. அதை கண்ட அவனுடைய தாத்தா அவனை அழைத்து 'என்ன நடந்தது? ஏன் கோபமாய் இருக்கிறாய்' என்று கேட்டார். அதற்கு அவன், 'பின்ன என்ன தாத்தா? நானும் அப்பாவும் கடைக்கு போயிருந்தோம். அப்பா எனக்கு ஒரு ஏரோபிளேனை விளையாட வாங்கி தந்தார். நான் அதை வெளியில் எடுத்து கொண்டு போய் பார்த்து கொண்டிருந்தபோது, சில பொறுக்கி பசங்க என்னோடு சண்டையிட்டு, நான் அப்பாவை கூப்பிடுவதற்குள் அதை பறித்து கொண்டு போய் விட்டார்கள். அவன்கள் மட்டும் என் கையில் கிடைத்திருந்தால்...' என்று கோபமுடன் கூறினான். அதை கேட்டு கொண்டிருந்த தாத்தா, ' நீ கோபப்பட்டு இப்போது என்ன ஆகப் போகிறது? உன்னுடைய ஏரோப்ளேன் போனது போனதுதான். அது கிடைக்க போகிறது இல்லை, உனக்கு தெரியுமா, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு நரிகள் எப்போதும் இருக்கின்றன. ஓன்று வெள்ளை நரி, மற்றொன்று கறுப்பு நரி. இந்த இரண்டு நரிகளும் எப்போதும் சண்டையிட்டு கொண்டிருக்கின்றன. வெள்ளை நரி, போனால் போகட்டும் என்று கூறும், அன்போடு நடந்து கொள்ளும்படி கூறும். ஆனால் கறுப்பு நரி, அது எப்படி, அதை சும்மா விடுவது என்று அதிகமாக வம்பை வளர்த்து கொண்டிருக்கும்' என்று கூறினார். அப்போது அந்த சிறுவன், 'எந்த நரி ஜெயிக்கும்' என்று கேட்டான். அதற்கு தாத்தா, 'எதற்கு நாம் அதிகமாய் தீனி போடுகிறோமோ அதுதான்' என்றார்.

கிறிஸ்துவுடனேகூட நாம்

ஒரு மனிதர் அநேக இடங்களில் வேலை தேடியும் கிடைக்காமல், பணமோ வசதியோ இல்லாமல், வறுமையினால் நிறைந்தவராய், ஒரு நாள் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். கடலின் ஓரமாய் அவர் நடந்து சென்றபோது, அவருடைய காலில் ஒரு பாட்டில் இடறியது. அதை அவர் பார்த்தபோது, அதற்குள் ஒரு கடிதம் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பாட்டிலை உடைத்து பார்த்தபோது, 'இந்த பாட்டிலை கிடைக்க பெறும் அதிர்ஷ்டசாலிக்கும், என்னுடைய வக்கீலுக்கும் என் முழு எஸ்டேட்டையையும் எழுதி வைக்கிறேன். இருவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளவும்' என்று எழுதப்பட்டிருந்தது. அதை அப்படி எழுதி அனுப்பியவர் டெய்ஸி சிங்கர் அலெக்ஸாண்டர் என்னும் சிங்கர் தையல் மிஷன் உரிமையாளர்களில் ஒருவர். அவர் 12 வருடங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள தேமஸ் ஆற்றில் ஒரு பாட்டிலில் இவ்வாறு எழுதி போட்டிருந்தார். அது பன்னிரண்டு வருடங்கள் கழித்து, கலிபோர்னியாவில் உள்ள கடலில், ஜேக் உர்ம் (Jack Wurm) என்னும் வறுமையில் வாடிக் கொண்டிருந்தவரின்; கைகளில் கிடைத்தது. அது அவரை ஒரே நாளில் மிகவும் பெரிய பணக்காரராக மாற்றியது. எத்தனை ஆச்சரியம் பாருங்கள்!

டெய்சி சிங்கர் தன் ஐசுவரியத்தை, தன் உயிலை ஒரு பாட்டிலில் போட்டு வைத்தார், ஏனெனில் அவரால் தான் செல்லும் இடத்திற்கு எந்த ஐசுவரியத்தையும் கொண்டு போக முடியாது. அதே போல ஜேக்கும் எதையும் எடுத்துக் கொண்டு போக முடியாது. இந்த உலக ஐசுவரியம் இந்த உலகத்தோடு முடிந்து விடுகிறது. எத்தனை பெரிய ஐசுவரியவானாயிருந்தாலும் ஒன்றையும் தான் மரிக்கும்போது, தனக்காக ஒரு வீட்டை கட்டவோ, தனக்காக சொத்து சேர்த்து வைக்கவோ ஒரு பைசாவையும் கூட எடுத்துச் செல்ல முடியாது.

Thursday, October 18, 2012

பரலோகம் போக ஆசை

ஒரு வயதான கணவனும் மனைவியும் திருமணமாகி 55 வருடங்கள் கழிந்து ஒரு நாள் ஒரு காரில் செல்லும்போதுவிபத்தில் சிக்கி அந்த இடத்திலேயே மரித்து போனார்கள். கடைசி பத்து வருடங்கள் மனைவி இருவருடைய உடல்நிலை குறித்து மிகுந்த சிரத்தை எடுத்தபடியினால் இருவரும் நல்ல சுகத்துடன் இருந்தனர்.

அவர்கள் மரித்து பரலோகம் சென்றவுடன்பரிசுத்த பேதுரு அவர்களை அவர்களுடைய வாசஸ்தலத்திற்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கு ஒரு பெரிய சமையலறைபெரிய புதிய மாடலில் கட்டப்பட்ட அறைகள் எல்லாவற்றையும் காட்டியவுடன் கணவர் மிகுந்த ஆச்சரியப்பட்டு அது எவ்வளவு விலையாகும் என்று கேட்டார். அப்போது பரி.பேதுரு,  'இது பரலோகம்எல்லாமே இலவசம் என்றார். பின்னர்அவர் அவர்களை சாப்பிடும்  இடத்திற்க்கு கூட்டி சென்றபோது அந்த கணவர் அங்கிருந்த உணவு வகைகளை பார்த்துவிட்டு 'நான் எவ்வளவு சாப்பிடலாம்என்று கேட்டார்அப்போது பரி.பேதுரு 'நான் தான் சொன்னேனேஇது பரலோகம்எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்கணக்கே இல்லை என்று கூறினார். அப்போது அந்த கணவர், 'கொலஸ்ட்ரால் மாத்திரை சர்க்கரை மாத்திரை இங்கு உண்டா?'  என்று கேட்டார். அப்போது பரி.பேதுரு  'இங்கு சாப்பிட்டால் உடலும் பெருக்காது,  கொலஸ்ட்ராலும் பெருகாது எந்த வியாதியும வராதுஎன்று கூறினார்.

அதை கேட்ட கணவர் மிகவும் கோபமுற்றவராக தன் தலையில் இருந்த தொப்பியை கீழே போட்டு மிதித்து காலை தரையில் ஓங்கி அடித்தார். அப்போது பரி.பேதுருவும் மனைவியும் அவரை சாந்தப்படுத்தி  'என்ன என்னவாயிற்று என்று கேட்டபோது அவர் கோபமாக தன் மனைவியை பார்த்து,  'எல்லாம் உன்னால் வந்தது,  நீ மட்டும் அந்த சாலட்டையும்,  கொழுப்பு சக்தியில்லாத (Fat Free Food) உணவையும் கொடுக்காதிருந்தால் பத்து வருடத்திற்க்கு முன்பே நான் இங்கு வந்து எல்லாவற்றையும் அனுபவித்திருப்பேன்  என்று கூறினார்.

நாம் மாத்திரம் பின்னால் வரப் போகும் சுதந்திரத்தை அறிந்திருந்தால் இப்போது நடக்கும் எந்த காரியத்தை குறித்தும் கவலைப்பட மாட்டோம். ஆனால் நாம் காண்கின்ற காரியங்கள்தான் நிரந்தரம் என்று நினைத்து அவைகளையே உறுதியாய் பற்றி கொண்டிருப்பதால்கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் பல அரிய காரியங்களை அறியாமல் இருக்கிறோம்.

மாமியார் பிரச்சனை


புதிதாய் திருமணமான தன் மகளை பார்க்க ஒரு தாய் அவர்கள் தங்கியிருந்த பண்ணைக்கு சென்றிருந்தார்கள். போனவுடனே, அந்த இடம் முழுவதையும் தான் பார்வையிடவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அந்த விவசாய கணவர் தன்னால் இயன்ற மட்டும் அந்த மாமியாரோடு தோழமையோடு இருக்க பார்த்தார். ஆனால் அவர்களோ, முரண்டு பண்ணி,  எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து கேள்விகள் கேட்டு கொண்டிருந்தார்கள். தேவையில்லாத ஆலோசனைகளையும்  சொல்லி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அப்படியே பார்த்து கொண்டு வந்து கொண்டிருந்தபோது, குதிரைகள் கட்டியிருந்த லாயத்திற்கு வந்தார்கள். அப்போது ஒரு குதிரை அந்த மாமியாரின் தலையில் ஓங்கி எட்டி உதைத்ததால் அவர்கள் தலை உடைபட்டு, அந்த இடத்திலேயே மரணமடைந்தார்கள்.

சிலநாட்கள் கழித்து,  நடந்த அடக்க ஆராதனையில் வந்த ஒவ்வொருவரிடமும் அந்த தம்பதியினர் பேசி கொண்டிருந்தனர், அப்போது,  அந்த அடக்க ஆராதனையை நடத்திய போதகர்,  அந்த கணவரிடம் யாராவது பெண் வந்து பேசினால்,  அவர் ஆம் என்பது போல தலையை ஆட்டி பேசுவதையும்,  யாராவது ஆண் வந்த பேசினால்,  இல்லை என்று தலையை ஆட்டி ஏதோ பேசுவதையும் வெகு நேரமாக கவனித்து கொண்டிருந்துவிட்டு,  மெதுவாக அந்த கணவரிடம் சென்று 'என்ன விஷயம்?' என்று கேட்டார். அப்போது அந்த கணவர், 'என்னிடம் பெண்கள், பாவம், என்ன ஒரு வருத்தமான செய்தி என்று சொல்லும்போது நான் ஆம் என்று சொன்னேன். ஆனால் ஆண்கள் வந்து என்னிடம் அந்த குதிரையை வாடகைக்கு கொடுக்க முடியுமா?  என்று கேட்டபோது,  அவர்களுக்கு இல்லை, ஒரு வருடத்திற்கு அந்த குதிரையை தொடர்ந்து வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னேன்'  என்று சொன்னார்.

கிறிஸ்தவ மாமியார் மருமகள் இடையே எந்த பிரச்சனையும் வர நாம் அனுமதிக்கக் கூடாது. எந்த நாத்தனார் பிரச்சனையும் வர நாம் அனுமதிக்க கூடாது. முடிந்தவரை சமாதானமாயிருக்க முயற்சிக்க வேண்டும். மாமியாருக்கு ஏற்ற கடமைகளை செய்யும்போது அவர்கள் மனம் குளிர்ந்து ஆசீர்வதிப்பது குடும்பத்திற்கு நல்லது. நிச்சயமாக நகோமி தன்னைவிட்டு பிரியாத அந்த மருமகளான ரூத்தை ஆசீர்வதித்திருப்பார்கள். அதனால் உலகமே புகழும் வணங்கும் தெய்வமாகிய இயேசுகிறிஸ்துவை தன் சந்ததியில் பெற்று பெரிய பாக்கியத்தை ரூத் பெற்றார்கள்.

Thursday, October 11, 2012

ஐயோ சாரி!!!

மென்சா என்னும் குழுவில் அதிக அறிவுள்ளவர்களே சேர்த்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய I.Q. 140 க்கு மேல் இருக்கும். சமீபத்தில் அந்த குழுவை சேர்ந்தவர்கள் ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அவர்களில் சிலர் கூட்டம் முடிந்தபிறகு சாப்பிடுவதற்கு பக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். அங்கு அவர்கள்உப்பு இருந்த பாட்டிலில் மிளகு பொடியும்மிளகுபொடி  இருந்த பாட்டிலில் உப்பும் இருந்ததை கண்டார்கள். இவர்கள்தான் அறிவாளிகளாச்சே என்ன செய்வது என்று யோசித்து யோசித்து கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி ஒரு பேப்பர் டவலில் உப்பை கொட்டிஅதை மாற்றுவது என்று முடிவெடுத்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த பணிப்பெண்ணிடம்இப்;படி பாட்டில்கள் மாறி இருக்கிறது என்று கூறினார்கள். அப்போது அந்த பணிப்பெண் 'ஐயோ சாரி! மன்னியுங்கள்என்று சொல்லி விட்டுமிளகு பொடியில் இருந்த மூடியை எடுத்துஉப்பு பாட்டிலிலும்உப்பில் இருந்த மூடியை எடுத்து மிளகு பொடி பாட்டிலிலும் மாற்றி வைத்து விட்டு போனாள். அங்கிருந்த அறிவாளிகள் அசடு வழிந்தார்கள்.