Showing posts with label ministry. Show all posts
Showing posts with label ministry. Show all posts

Saturday, November 1, 2014

பில்லிகிரகாம் - என்னையும் நம்பிடுமே

பில்லிகிரகாம் இளம் வயது வாலிபனாக இருந்தபோது, தேவனுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உடையவராக இருந்தார். ஒரு நாள் தன் நண்பர்களோஈஷடு கால்பந்தாடச் சென்றார். விளையாடிக் கொண்டிருந்த நேரத்திலும் அவர் உள்ளம் தேவனோடு உறவாடிக் கொண்டிருந்தது. கர்த்தர் பில்லிகிரகாமின் உள்ளத்தில் உலகத்திலுள்ள மற்ற வாலிபர், வயோதிபர், சிறியோர், பெரியோரின் ஆத்தும தேவைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
.
விளையாட்டு முடிந்தது. நண்பர்கள் எல்லோரும் அவரவர் தம்தம் வீட்டிற்கு சென்று விட்டார்கள். ஆனால் பில்லிகிரகாமோ, அந்த கால்பந்து மைதானத்திலே முழங்கால்படியிட்டார். கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.
.
'ஆண்டவரே என்னை நம்பும், என்னை நம்பும், உமது பார்வையிலே என்னை நம்பிக்கைக்குரியவனாக்கும்' என்று கதறினார். அந்த வார்த்தைகளே அவரது ஜெபமாக இருந்தது. அவரது உள்ளம் தேவனிடத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தது, ஏறத்தாழ நான்கு மணி நேரம் மிகுந்த சத்தத்தோடு ஜெபித்தார், 'ஆண்டவரே என்னை நம்பும்' என்பதுதான் அவரது ஜெபமாக இருந்தது. கர்;த்தருடைய ஆவியானவர் வல்லமையாக இறங்கி அவரை அபிஷேகித்தார். அன்றிலிருந்து கர்த்தர் ஒரு பெரிய திருப்பத்தை அவர் வாழ்வில் கட்டளையிட்டார். மாபெரும் விளையாட்டு வீரரான அவரை மாபெரும் சுவிசேஷ வீரனாக மாற்றினார். அல்லேலூயா!

Thursday, April 11, 2013

மார்ட்டின் லூத்தர் கடைசி வார்த்தைகள்

1546 பெப்ருவரி 18 காலையில் பரம வீடு ஏகினார்லூத்தர். அவரது கடைசி வார்த்தைகள் இவைகளே:

லூத்தரின் கல்லறையின் அருகில் நின்றுகொண்டுஅவர் ஈல்பன் (Eisleben) நகரில் செலவழித்த கடைசிநாட்களை நினைத்துப்பார்க்கலாம். 1546 ஜனவரி28இல் அந்நகர் வந்தடைந்தார். உடல்நலம் குன்றியிருந்தபோதும் பெப்ருவரி 17 வரையிலும் நடைபெற்றமாநாடுகளில் கலந்துகொண்டார்; நான்கு பிரசங்கங்கள் செய்தார்; மான்ஸ்பீல்ட் பகுதிக்கான சபை ஒழுங்குகளைப் பரிசீலனை செய்தார். 17ஆம் தேதி அவர்உடல்நிலை மிகவும் கெட்டுப்போனதால், அவரதுநண்பர்களான பிரபுக்கள் அவரை வீட்டைவிட்டுவெளியே போக அனுமதிக்கவில்லை. அன்றிரவு உணவுவேளையில், தம்மை நெருங்கிவரும் மரணத்தைப்பற்றிவெகுவாகப் பேசினார். அவ்வேளையில், மறு உலகில்நாம் ஒருவரையொருவர் அடையாளங்கண்டுகொள்ளமுடியுமா? என எழுப்பிய வினாவுக்கு, “முடியும் என்றேநினைக்கிறேன்” எனப் பதிலுரைத்தார். “நான் ஏன்இவ்வளவு களைப்பாய் இருக்கிறேன்?” என ஆச்சரியப்பட்ட அவர், “என் வேதனை முன்பைவிட மிகுதியாயுள்ளது. ஒரு அரைமணி நேரம் தூங்கினால்சரியாகிவிடும்” என்று சொல்லி, தூங்கப்போனார்.ஒன்றரைமணி நேரம் கழித்து பதினொரு மணிக்குஎழுந்த அவர் சுற்றியுள்ளோரைப் பார்த்து, “என்ன!இன்னுமா இங்கிருக்கிறீர்கள்? உங்களுக்கு ஓய்வுவேண்டாமா?” எனக் கேட்டார்.

அங்கேயே இருக்கப்போவதாக அவர்கள் சொன்னபோது, லூத்தர் உணர்ச்சிவசப்பட்டுச் சத்தமிட்டார்:“என்னை மீட்டெடுத்த சத்தியபரனாகிய கர்த்தாவே,உமது கரங்களில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்.அன்பு நண்பர்களே, ஆண்டவரின் நற்செய்திக்காகவும்,அதன் ஆளுகை விரிவாக்கத்திற்காகவும் ஜெபியுங்கள். ஏனெனில், சபைச் சங்கமும் (council of trent), போப்பும் அதனை அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றனர்.” அதன்பின் ஒருமணி நேரம் தூங்கினார்.

எழுந்தபோது, “நான் மிகவும் சுகவீனமாயுள்ளேன்.நான் பிறந்த இடமாகிய இங்கேயே தங்கியிருத்தல்நல்லதென நினைக்கிறேன்” என்றார். வியர்வை வரும்படியாக அறையில் நடந்து பார்த்தார்; பின், படுத்துசுற்றிலும் அநேகத் துணிகளையும் தலையணைகளையும் வைத்துப்பார்த்தார். ஒன்றும் பலனளிக்கவில்லை.பின்னர் ஜெபிக்கத் தொடங்கினார்: “என் பிதாவே,ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே, சகலஆறுதலின் ஊற்றே, நான் விசுவாசிக்கிற உமது பிரியகுமாரனை எனக்கு வெளிப்படுத்தியதற்காக நன்றிசொல்கிறேன். அவரையே அறிந்து, பிரசங்கிக்கிறேன்;அவரையே நேசித்து, அவரிலேயே மகிடிநகிறேன்; அவரையே போப்பும், பக்தியற்றோரும் நிந்திக்கின்றனர்.

எனது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உம்மிடத்தில் என் ஆவியை ஒப்படைக்கிறேன். இம்மைக்குரிய உடலைக் களைய ஆயத்தமாகிறேன். இவ்வாடிநவிலிருந்து நீங்கும் நேரம் நெருங்குகிறது. ஆயினும்,உம்மில் என்றென்றும் நிலைத்து வாடிநவேன் என்றறிவேன். சத்தியபரனாகிய கர்த்தாவே, நீரே என்னைமீட்டுக்கொண்டீர்; உமது கரங்களில் எனது ஆவியைஒப்படைக்கிறேன்.” அவரது கண்கள் மூட, மயக்கநிலைக்குள் ஆடிநந்தார். மறுபடி விழித்த வேளையில்,ஜோனாஸ், “பரிசுத்த தந்தையே, நீங்கள் போதித்தவிசுவாசத்தில் உறுதியோடுதான் மரிக்கிறீர்களா?”என்று கேட்டார். லூத்தர் கண்களைத் திறந்து, கூர்மையாய்ப் பார்த்து “ஆம்!” என்றார். பக்கத்திலிருந்தோர்பார்த்துக்கொண்டிருக்கும்போதே வெளிறிப்போனார்;உடல் குளிர்ந்தது; அவரது மூச்சு வேகமும் குறைந்துகொண்டே வந்தது. இறுதியில், ஓர் ஆழமான பெருமூச்சுடன், மார்ட்டின் லூத்தர் உயிர் நீத்தார். மகாஉயிர்த்தெழுதலின் நாள்வரையிலும், அவரது உடல்ஜெர்மனியின் விட்டன்பர்கில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறது. அந்நாளிலே, அவரோடு நீயும் காணப்படுவாயா???

அன்னை தெரெசா வாழ்க்கை

பல்லாயிரக்கணக்கான புகலிடமில்லாதோரைத் தாயினும் பரிவு காட்டி, அரவணைக்கும் அன்புள்ளம் ஒன்று 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி, தற்போதைய மாசிடோனிய குடியரசில் ஓர் எளிய குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாக ஆக்னஸ் கோன்ஸா போஜாஸியு என்ற பெயரில் அவதரித்தது.

தன் 18ஆம் வயதில் லொரேட்டோ சகோதரிகளின் சபையில் இணைந்து துறவை ஏற்ற ஆக்னஸ், இந்திய மண்ணில் ஏழைகளுக்கு இறைப்பணி ஆற்ற விரும்பி பாடம் கற்பிக்க ஆங்கில மொழியைக் கற்றார். 1929ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்து, 24மே 1931இல் மத பிரமாணம் எடுக்கும் வேளையில் தெரேசா என்னும் பெயரைப் பூண்டார். 10செப்டம்பர் 1946இல், ஒரு இரயில் பயணத்தின் போது, ‘‘சேரிகளுக்குச் செல் - சேவைகளைச் செய்’’ என்ற இறைவனின் குரல் இதயத்தைத் தட்டுவதை உணர்ந்தார்.

அவ்வேளையில், இந்தியாவுக்கு இணையற்ற இலக்கியவாதிகளையும் , அறிஞர்களையும் அளித்த வங்க நிலம் ஏழைகள், அகதிகள், ஊனமுற்றோர், தொழுநோயாளிகள் என அநாதைகளின் இருப்பிடமாக இருந்தது. நெருக்கடியால் தெருவோரங்களிலும், இரயில் நிலையங்களிலும், தரிசு நிலங்களிலும் மக்கள் அவதியுற்றனர். நோய் பரவி, ஆங்காங்கே பிணங்கள் கேட்பாரின்றிக் கிடந்தன.

17ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய லொரேட்டோ மடத்தை விட்டு, போப் ஆண்டவரின் பிரத்தியேக அனுமதியின் பேரில் வெளியேறி, கல்கத்தாவின் மிக ஏழ்மையான மோட்டிஜில் சேரிக்கு மனம் நிறைந்த அன்புடனும், கையில் வெறும் ஐந்து ரூபாயுடனும் சென்றார். பல தரப்பட்ட அவமதிப்புகளினூடே தன் சேவையைத் தொடங்கித் தொடர்ந்தார்.

1950ஆம் ஆண்டு மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி என்ற அமைப்பைத் தோற்றுவித்து, தோட்டியா என்ற தாழ்த்தப்பட்ட இனத்தவர் அணியும் ஆடையை, அதற்கு அங்கீகரிக்கப்பட்ட உடையாக்கினார். 45வருடங்களுக்கு மேல் தொண்டாற்றிய அவர் முதலில் இந்தியாவின் பல இடங்களிலும், பின்னர் சர்வதேச அளவிலும் இத்தூய பணியை விரிவாக்கினார். 1952இல் ‘‘நிர்மல் இருதய்’’ என்ற இல்லத்தைத் திறந்தார். உயிர் பிரியும் தருணம் வரை கனிவுடனும், அன்புடனும் பராமரிக்கும் கருணை இல்லமாக அது செயல்பட்டது. இறைவனின் சாயலான மனிதனிடம் ஏசுவைக் கண்ட அன்னை தெரேசாவால் எந்தவொரு நோயாளியையும் அனாதையாக விட்டுவிட இயலவில்லை. பின்னர் 1957இல் தொழுநோயாளிகளுக்கான இல்லத்தைத் தொடங்கினார்.

தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரேசாவுக்குக் குடியுரிமையும், பத்மஸ்ரீ விருதையும் 1962ஆம் ஆண்டில் வழங்கி இந்தியா அவரைக் கௌரவித்தது. 1972இல் ‘‘பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் விருது’’, 1980இல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான ‘‘பாரத ரத்னா’’ வழங்கப்பட்டன. சமாதானத்தின் அச்சுறுத்தல்களாக விளங்கும் ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக, 1979ஆம் ஆண்டில், ‘‘சமாதானத்துக்கான நோபல் பரிசு’’ பெற்றார். நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விழா விருந்தை மறுத்த அவர், அதற்காகும் நிதியை இந்தியாவின் ஏழைகளுக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் ‘‘சுதந்தரத்துக்கான அதிபரின் பதக்கத்தை’’ 1985ஆம் ஆண்டு, வெள்ளை மாளிகையில் அன்னைக்கு வழங்கி கௌரவித்தார்.

தெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக, 1962இல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்சின் ‘‘ரமோன் மேக்சேசே’’ விருதைப் பெற்றார்.

அவரது அதிகாரபூர்வமான வாழ்க்கை சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு, 1992இல் வெளியிடப்பட்டது.

அன்னையின் சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும், ஒரு சிலுவையும், ஒரு ஜெபமாலையுமே. ஆனால், விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர்  அமுத சுரபியாக அள்ளியள்ளி வழங்கினார். அன்பென்ற மழையில், இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள், அவரது 87வது வயதில், நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன.

உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை 19அக்டோபர் 2003இல், அன்னை தெரேசாவிற்கு ‘‘ஆசீர்வதிக்கப்பட்டவர்’’ என்ற பட்டம் அளித்து

Saturday, March 30, 2013

ஊழியத்தின் மேல் உள்ள வைராக்கியம் - Damien

பசிபிக் மகா சமுத்திரத்தில் மொலாக்காய் (

Molokai Island) என்பது சிறு தீவு. தென் பசிபிக் தீவில் குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் பரவிய நாட்கள். தொழு நோயால் தாக்கப்பட்டோர் மொலாக்காய் என்னும் இத்தீவில்தான் தனிமைப்படுத்தப்பட்ட கவனிப்பாரற்று தங்கள் வாழ்வை இழந்தனர். மக்களால் மட்டுமல்ல, கடவுளாலும் கைவிப்பட்டுவிட்டோம் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்களுக்கு உதவி செய்யவும், நோயின் கொடுமையிலிருந்து அவர்களை காப்பற்றவும் யாரும் முன்வரவில்லை. காரணம் அத்தீவிற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வரக்கூடாது என்பது அரசாங்கத்தின் உத்தரவு.
.
1873-ம் ஆண்டு துன்பத்தில் துவண்ட அம்மக்களுக்கு துணைவனாக அம்மக்களை தேடி புறப்பட்டான் ஒரு இளைஞன். அவர்தான் டாமியன் (Damien) ஆவார். பலர் அவரை தடுத்தனர். ஆனால் டாமியனோ தன் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். மொலாக்காய் தீவில் இறங்கிய உடன் அங்கு அவர் கண்ட காட்சிகளோ, கொடுமையாய் இருந்தன. வியாதியின் கொடுமையால் நடை பிணங்களாக, உடலெல்லாம் புண்களாக, சீழ் வடிந்த நிலையில் மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் வாழ்வில் நம்பிக்கை கொடுக்க ஆரம்பித்தார் டாமியன். அவர் அங்கு வந்த பிறகு அநேக மாற்றங்களை அந்த தீவில் அவர் கொண்டு வந்தார். ஏதோ குடிசையில் வாழ்ந்த மக்கள் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, வீடுகளில் வாழ ஆரம்பித்தனர். பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. அநேக நன்மைகளை அந்த தீவு மக்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். அவர்களின் புண்களை காயம் கட்டினார். மருந்துகளை கொடுத்து, ஜனங்களை ஆறுதல் படுத்தினார்.
.
ஒரு நாள் அவர் குளிக்க செல்லும்போது, தற்செயலாக கொதிக்கும் தண்ணீர் அவருடைய கால்களில் பட்டது. ஆனால் அவர் அதை உணரவில்லை. அதிர்ச்சியடைந்தார். ஓ, அவருக்கும் தொழுநோய் பற்றி கொண்டது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த டாமியன், அத்தீவு மக்களிடம், 'நான் இப்போது உங்களில் ஒருவனாகி விட்டேன்' என்று கூறினார். அவ்வார ஞாயிறு ஆராதனையில் 'தொழுநோயாளிகளாகிய நம்மேல் தேவன் அன்பாயிருக்கிறார்' என்று ஆண்டவரை புகழ்ந்தார். நோயின் கொடூரம் அவரை முற்றிலும் தாக்கவே தான் அளவு கடந்த அன்பு வைத்த மக்களை விட்டு தனது 49 ஆவது வயதில் மரித்தார். தனது அர்ப்பணிப்பில் இருந்து பின்னிட்டு பாராமல், தன் உடலையும், உயிரையும் தொழு நோயாளிகளுக்காய் கொடுத்த வாலிபன் டாமியனின் அர்ப்பணிப்பும், கர்த்தர் மேல் இருந்த அன்பை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, தேவனின் அன்பை வெளிப்படுத்திய விதமும், தங்களை கவனித்து பராமரிக்க யாருமே இல்லை என்று தவித்த மொலாக்காய் தீவின் மக்களுக்கு அவர்களையும் தேவன் நேசிக்கிறார் என்பதை எடுத்து காட்டின அந்த வாலிபனின் அர்ப்பணிப்பும் நிச்சயமாகவே மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துகாட்டாகும்.