Showing posts with label Bro.N.Emil Jebasingh. Show all posts
Showing posts with label Bro.N.Emil Jebasingh. Show all posts

Sunday, July 1, 2012

மறக்க முடியாத மாமனிதர்கள் - Bro.N.Emil Jebasingh (Founder, Vishwavani)

சகோதரர் எமில் ஜெபசிங் 10.01.1941 அன்று, மறைத்திரு Y.C. நவமணி ஐயரவர்களுக்கும்,கிரேஸ் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். தனது வாலிப நாட்களிலே, சகோதரர் P.சாம், மற்றும் சகோதரர் N. ஜீவானந்தம் என்ற தேவ வல்லமை நிறைந்த ஊழியர்களின் வழிநடத்துதலால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில், (Now in Tuticorin District) தனது 17-வது வயதில் ஆண்டவரின் அன்புக்கு அடிமையானார். ஏமி கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற பரிசுத்த தேவ ஊழியர்கள் பணிபுரிந்த அவ்வூரிலே, கிறிஸ்துவின் ரத்தத்தால் இதயக்கறை நீங்கித் தூய்மை பெற்று, மிஷனரி தரிசனத்தையும் பெற்றதால், பண்ணைவிளையைப் பரிசுத்த பூமிஎன, இன்றும் எமில் நன்றியோடு நினைவு கூறுகிறார்.
பண்ணைவிளையில் நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு ஆரம்பிப்பதில் இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பின்னாட்களில் விஷ்வவாணி என்று மிகப்பெரிய சுவிசேஷ வானொலியினையும் இவர்கள் தோற்றுவித்து இன்றளவும் கர்த்தரின் நாமத்தை பறைசாற்றுகின்றது.