Showing posts with label Facts. Show all posts
Showing posts with label Facts. Show all posts

Tuesday, November 11, 2014

ஏகோவா சாட்சி - எச்சரிக்கை

ஏகோவா சாட்சிகளை
குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்

இவர்கள் ஏகோவா மட்டும் தான் தெய்வம், இயேசு கிறிஸ்து ஓர் மனிதன், பரிசுத்த ஆவியானவரும் தெய்வம் இல்லை என்று கூவிவரும் இவர்கள் குறிபார்ப்பது கிறிஸ்தவர்களை மட்டும் தான். அதுவும் CSI , லுத்தரன், methodist சபைக்கு போகும் கிறிஸ்தவர்களை குறிபார்ப்பது தான் இவர்கள் வேலை. இவர்கள் கிராமபுரங்களில் அதிகமாக பெருகி வருகிறார்கள். குறிப்பாக கோவை மாவட்டம், ஊட்டி, கொடைகானல், மதுரை, சென்னை போன்ற பகுதிகளில் அதிகமாக வளர்ந்துவருகிறார்கள். நான் ஓர் CSI சபையில் தேவனுடைய வார்த்தையை பகிர்ந்து விட்டு கடைசியாக ஏகோவா சாட்சிகளை குறித்து எச்சரிக்கையாய் இருக்க சொன்னேன். ஆலயம் முடிந்ததும் பலர் என்னிடம் வந்து ஏன் அப்படி சொன்னீர்கள் என்று கேட்டார்கள். அதிர்ந்து விட்டேன். பிறகு சபை ஆயரோடு அவர்களின் இல்லங்களுக்கு அன்றே சென்று அவர்களுக்கு விளக்கினோம்.

அன்றில் இருந்து இன்று வரை அவர்கள் ஏகோவா சாட்சிகளை வீட்டில் அனுமதிப்பதில்லை. நீங்கள் எப்படி? 1 யோவான் 4:1. பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.

எப்படி சோதித்தறிவது? இங்கே தான் கிறிஸ்தவர்கள் தவறுகிறார்கள். எங்கே? வேதத்தை படிப்பதோடு மட்டுமல்ல... ஒருவர் கடவுளை பற்றி கூறும்போது அதை மனதில் எடுத்துகொள்ளும் முன்பாக வேதத்தோடு ஒப்பிட்டு பாருங்கள். சிலர் வேதவசங்களை சொல்லமலேயே செய்தியை முடித்துவிடுகிறார்கள். அல்லது ஆரம்பித்தில் ஒன்றை ஆரம்பித்து முடிவில் ஒன்றை சொல்லுவார்கள். சிலர் நம் உணர்வை தூண்டும் விதமாக மனதை பாதிக்கும் விஷயத்தை சொல்லி கவனத்தை ஈர்க்க பார்பார்கள். சிலர் சம்பந்தமில்லாத வேதவசனத்தை கோர்த்துவிடுவார்கள்.

இவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. இவர்கள் யெஹோவா என்கிறார்கள், இஸ்லாமியர்கள் அல்லாஹ் என்கிறார்கள். ஏகோவா சாட்சிகள் இஸ்லாமியர்களின் குரானை நம்ப மறுப்பவர்கள். ஆனால் இவர்கள் புதிய ஏற்பாடு வேதாகமத்தின் பல வசனங்களை மாற்றி அதில் ஏகோவா என்ற பெயரை இணைத்து வேத புரட்டர்களாய் நம்மிடையே வளம் வருகின்றனர்.

நீங்கள் வேதவசனத்தை ஆராய அழைக்கிறேன். அதற்கு உங்கள் சபை போதகரை வேத ஆராய்ச்சி கூடங்களை உங்கள் இல்லத்திலோ, ஆலயத்திலோ நடத்த சொல்லுங்கள். அவரிடம் உங்கள் மனதில் ஏற்படும் சந்தேகங்களை கேளுங்கள். தெளிவடையுங்கள். இல்லையென்றால் இப்படிப்பட்ட கும்பல்களிடம் ஒரு வேலை நீங்கள் தப்பிக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகள் தப்பிபார்களா?

இவர்களின் நம்பிக்கைகளை பற்றி சில வரிகள்
1. திரியேக தேவத்துவத்தை அடியோடு மறுப்பவர்கள்
2. இயேசு கிறிஸ்துவை தெய்வமாக கொண்ட ஆலயங்கள் பிசாசின் ஆலயங்களை பார்ப்பவர்கள்
3. பிதாவினால் முதலாவதாக உண்டாக்கப்பட்டது மிகாவேல் தூதனாவான்.
4. இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. மாறாக கூரான ஆயிதத்தால் குத்தி கொலைசெய்யப்பட்டார்.
5. இயேசு கிறிஸ்து மரித்துவிட்டார். அவர் உயிர்த்தெழவில்லை.
6. இவர்கள் சுமார் 144,000 ஏகோவா சாட்சிகள் மட்டுமே பரலோகம் செல்வார்கள் என்று நம்புகிறார்கள்.
7. மனிதன் ரட்சிக்கபடவெண்டிய அவசியம் இல்லை
8. இவர்களின் உபதேசத்தை உறுப்பினர்கள் யாரும் கேள்வி கேட்க முடியாது.
9. உலகத்தின் முடிவு ஐந்து தடவை நடக்கும்
10. மனிதன் ரத்தத்தை மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது. சிறு குழந்தைகள் உட்பட. ((Strasbourg, Monday 2 March – Friday 13 March 1998) http://194.250.50.201/eng/E276INFO.148.html under “II.Reports adopted” )
11. ஒவ்வொரு வாராமும் சபை உறுப்பினர்கள் 10 மணி நேரமாவது இவர்களின் "watchtower" பத்திரிக்கையை கொடுக்க வேண்டும். யாரும் இதை மறுத்து பேச கூடாது.
12. யாராவது இவர்களின் நம்பிக்கையை விட்டு வெளியேறி விட்டால் அவர்கள் முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.
13. மூன்றாவது முக்கியத்துவம் வாய்ந்த (tertiary) எந்த ஓர் காரியத்தையும் கற்க தடை செய்யப்பட்டுள்ளது.
14. ஏகோவா சாட்சிகள் யாரும் ராணுவத்தில் இருக்க கூடாது.
15. கழுத்தில் சிலுவை அணிய கூடாது
16. தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூற மறுப்பவர்கள்.

இப்படி எல்லா விதங்களிலேயும் கிறிஸ்தவத்தை விட்டு பிரிந்து நிற்கிறது. நமக்கு தெரிந்தபடி கிறிஸ்தவத்திற்கும் மற்ற மதங்களுக்கு உள்ள மிகப்பெரிய இடைவெளி இயேசு கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும்.
1. இயேசு கிறிஸ்துவினால் மாத்திரமே நித்திய ஜீவன் உண்டு (ரோமர் 6:23தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்)
2. இயேசு கிறிஸ்து இல்லாமல் யாரும் பரலோகம் போக முடியாது. (மாற்கு 15:38)
3. இயேசு சிலுவையில் அறியப்பட்டது உண்மை - எபிரெயர் 10:10. இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
4. ரோமர் 5:1. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
5. எபேசியர் 2ம் அதிகாரம் ரட்சிப்பின் வழியை தெளிவாக விளக்குகிறது.

ஆனால் இதை மறுக்கும் ஏகோவா சாட்சிகள் ஓர் சாத்தானின் கருவியாகும்.. ரட்சிப்பு இல்லை என்றால் சிலுவை இல்லை, சிலுவை இல்லை என்றால் பரிசுத்த வேதாகமம் இல்லை. பரிசுத்த வேதாகமம் இல்லை என்றால் இயேசு கிறிஸ்து இல்லை. இயேசு கிறிஸ்துவை இல்லை என்றால் கிறிஸ்தவம் இல்லை.

இப்படி கிறிஸ்தவத்தில் ஆணிவேரை அசைத்து பார்க்க சாத்தான் பல மதங்களை உருவாக்கி கிறிஸ்தவர்களை வேட்டையாடி வருகிறான். இந்த மயக்கங்களுக்கு பலியான பல ஆயிரம் உயிர்கள் உண்டு. இவர்கள் பரிசுத்த வேதாகமத்தில் இருந்து கேள்வி எழுப்பி விடையை வேறு ஒரு மத புத்தகத்தோடு ஒப்பிட்டு பேசுவார்கள். இது கணக்கு புத்தகத்தையும், சமூக அறிவியல் புத்தகத்தை ஒப்பிட்டு ஏன் கணக்கு புத்தகத்தில் உள்ளது சமூக அறிவயலில் இல்லை? என்று கேட்க்கும் முட்டாள்களுக்கு ஒப்பாவர். கணக்கு புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு கணக்கு புத்தகத்தில் தான் விடை தேட வேண்டும். அதை போல பரிசுத்த வேதாகமத்தில் இருக்கும் கேள்விகளுக்கு பரிசுத்த வேதாகமத்தில் இருந்து தான் பதில் தேட வேண்டும்.

இப்படிப்பட்டவர்கள் உங்களிடம் கேள்வி கேட்டுகொண்டே இருப்பார்கள். உங்களை தர்க்கம் பேச வைத்து உங்கள் வேத அறிவை தெரிந்து கொள்வார்கள். பிறகு உங்கள் அறிவிற்கேற்ப குழப்ப பார்பார்கள். வேதத்தை முழுவதும் புரிந்து கொள்ளாதவர்கள் இவர்கள் பேச்சில் மயங்கி விடுவர். 1 திமோத்தேயு 6:5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.

1 திமோத்தேயு 6:1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

என்று வேதம் எச்சரிக்கிறது. ஜாக்கிரதையாய் இருங்கள். உங்கள் ஆலயங்களிலோ, போதனைகளிலோ வேதவசனம் சரியாய் கோர்க்கப்படவில்லை என்றால் அதை விட்டு விலகுங்கள். பரிசுத்த வேதாகமத்தில் சொல்லபட்டிருக்கிற எல்லாவற்றிக்கும் பதில் பரிசுத்த வேதாகமத்தில் உண்டு. உங்கள் சபை ஆயரை, போதகரை அணுகி விடை வேதத்தின் அடிப்படையில் விடை தேடுங்கள். அல்லது மிஷனரி ஸ்தாபனங்கள் மூலமாக நடக்கும் முகாமில் கலந்து கொள்ளுங்கள். (நண்பர் சுவிஷேச ஜெபக்குழு, விஸ்வவாணி, IMS , இந்திய நற்செய்தி மாணவர் மன்றம் (UESI TN ), Scripture Union , என்று பல நல்ல ஊழிய ஸ்தாபனங்கள் உண்டு. அணுகவும்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Wednesday, December 18, 2013

எதற்காக 25ம் தேதி கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டும்????


உங்கள் அனைவருக்கும் எங்கள் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஓர் காரியம் "எதற்காக 25ம் தேதி கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டும்?" அதற்கு விடை காணும் வண்ணமாக இதை பதிந்துள்ளேன்.

கிறிஸ்மஸ்... கிறிஸ்தவர்கள் மத்தியில் சந்தோஷம், மகிழ்ச்சி, அன்பு பொங்கும் அழகு நாளாக இன்றும் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சி முதலில் கொண்டாட்டமாக ஆரம்பிக்கப்பட்டு பின் கிறிஸ்மஸ் மரம், அலங்காரங்கள், கிறிஸ்மஸ் தாத்தா, புதிய ஆடை அலங்காரங்கள், ஆனாதை குழந்தைகள் உபசரிப்பு என்று பல விதங்களில் வளர்ந்து விட்டது.

இந்த கிறிஸ்மஸ் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? யாரால்? என்ன தேதியில்? என்ற பல விஷயங்களை ஆராய்ந்து வரும் இந்த காலங்களில் நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை இது.

கிறிஸ்மஸ் எப்படி உருவானது??

இந்த உண்மையை அறிந்து கொள்ளும் முன்னர் நாம் தெரிந்து கொள்ளும் முன்னர் இயேசு கிறிஸ்து பிறந்த கால நாட்களில் உலகம் முழுவதும் வித்தியாசமான காலண்டர்கள் இருந்தன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.. கி.பி 70ல் எருசலேம் தேவாலயம் ரோமர்களால் அழிக்கப்பட்ட பின்னர் கிறிஸ்தவம் முழுமையாக யூதமாரக்கத்திலிருந்து பிரிந்து தனியான ஒரு மார்க்கமாகியது. அதன்பின்னர் இயேசுக்கிறிஸ்துவின் மரணம் சம்பவித்த நாளைக் கிறிஸ்தவர்கள் கணிப்பிடத் தொடங்கினார்கள். அக்காலத்தில் வித்தியாசமான கலண்டர்கள் உபயோகத்தில் இருந்தமையால், கிழகத்திய சபைகள் ஏப்ரல் 6ம் திகதியையும் மேற்க்கத்திய சபைகள் மார்ச் 25ம் திகதியையும் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளாகக் கணித்தனர். பழைய ஏற்பாட்டுத் தீரக்கதரிசிகள், தாங்கள் கருவுற்ற அல்லது பிறந்த தினத்திலேயே மரித்தார்கள் என்னும் நம்பிக்கையின்படி இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளை அடிப்படையாகக் கொண்டு, கிழக்கத்திய சபைகளில் இயேசு கிறிஸ்து ஜனவரி 6ம் திகதி பிறந்தார் என்றும் மேற்கத்திய சபைகளில் அவர் டிசம்பர் 25ம் திகதி பிறந்தார் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதற்க்கு சரித்திர ஆதாரங்களை பாப்போம்.

வேதாகமத்தில் கிறிஸ்து பிறந்த நேரத்தையோ, நாளையோ, வருடத்தையோ குறிப்பிடவில்லை.. ஆனால் வேதாகமம் சில கால உண்மைகளை நமக்காக வைத்துள்ளது. லூக்கா 2:8 8. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

இதன் மூலம் அது ஓர் இளவேனிற்காலம் என்பதையும், குளிர் மாதமான டிசம்பர் அல்லது ஜனவரி என்பதையும் அறியலாம்... முதலாம் இரண்தாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த Irenaeus (c. 130–200) or Tertullian (c. 160–225) என்பவர்கள் கிறிஸ்மஸ் பற்றி எழுதவில்லை. Alexandria (c. 165–264) என்பவர் ரோமர்களில் காலத்தில் இருந்த பிறந்த நாள் பண்டிகைகள், மற்றும் பல விழாக்களை "பேகன்" என்ற கடவுளின் பண்டிகை என்று கூறி அனைத்து ரோம விழாக்களுக்கும் தடை விதித்தார். இதிலும் கிறிஸ்து பிறப்பு இடம் பெறவுல்லை. ஆதலால் இந்த காலத்திலும் கிறிஸ்து பிறந்த நாள் கொண்டாடி இருக்க முடியாது என்பது நிச்சயம். கிறிஸ்மஸ் பேகன் கடவுளின் விழா அல்ல என்பதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இப்போது இன்னொரு கோணத்தில் இருந்து ஆராய்வோம்.. நாம் வைத்திருக்கும் பரிசுத்த வேதாகமத்தில் நான்கு சுவிசேஷ பகுதிகளும் (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) கிறிஸ்துவின் மரித்ததை தெளிவாக எழுதி வைத்துள்ளனர்.. இதில் இருந்து பல உண்மைகளை நாம் உணரலாம்.. சுவிஷேசத்தில் பஸ்கா பண்டிகைக்கு முன் தேவன் சிலுவையில் அறையப்பட்டதை குறித்து எழுதுகிறார்.

மத்தேயு 26:2 இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்
மத்தேயு 26:2 இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்

இதனை அடிப்படையாக வைத்து இருவேறு நாட்கள் தேவன் பூமியில் அவதரித்த நாட்களாக ஏற்று கொள்ளப்பட்டது. நான் ஏற்க்கனவே குறிப்பிட்டுள்ளபடி அந்நாட்களில் இருவேறு நாட்க்காடிகள் இருந்த படியால் கிறிஸ்து பிறந்த நாட்கள் சில நாடுகளில் மாறுபடுகின்றன.. இன்றும் சில மதத்தினரும், நாட்டினரும் தங்கள் சொந்த நாட்க்காடிகளையே பயன்படுத்துகின்றனர்...

Egypt, Ethiopia, Eriteria, Russia, Georgia, Ukraine, Serbia, the Republic of Macedonia, and the Republic of Moldova போன்ற நாடுகள் Gregorian calendar நாட்க்காட்டி வழியில் January 7 ஐ கிறிஸ்து பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர். . கிழக்கு Orthodox Churches in Bulgaria, Greece, Romania, Antioch, Alexandria, Albania, Finland, and the Orthodox Church in America போன்றவைகள் டிசம்பர் 25ம் தேதியை ஜூலியன் நாட்க்காட்டி வழியில் ஏற்று கொண்டனர்.. இதற்கு காரணம் இருவேறு வித்தியாசமான நாட்க்காட்டிகளை பின்பற்றி தேதியை முடிவு செய்தனர். (http://en.wikipedia.org/wiki/Christmas)

கி.பி. 360களின் ஆதாரமொன்று அக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உரோமில் நிலைபெற்றிருந்ததைக் காட்டுகின்றன. ஆனால் கிழக்குத் திருச்சபை கிறிஸ்தவர்கள் குழந்தை இயேசுவைக் காண கிழக்கில் இருந்து ஞானிகள் வந்ததை கொண்டாடும் திருநாளின் (சனவரி 6) ஒரு அங்கமாக இருக்கிறது.

200 C.E. வாக்கில் Tertullian of Carthage என்பவர் நிசான் மாதம் 14ம் நாள் (பரிசுத்த பவுல் கூற்றுப்படி) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார். இது ரோம நாட்டு சோலார் நாட்க்காட்டி படி மார்ச் மாதம் 25ம் தேதி. அக்காலங்களில் மனிதன் கருவில் உருவாவதும் மரிப்பதும் ஒரே நாள் என்று நம்பப்பட்டது. அதனால் மார்ச் 25 (கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட நாள்) இயேசு கிறிஸ்து கருவில் ஜெனிபித்த நாளாக கருதப்பட்டது. அன்றில் இருந்து ஒன்பது மாதங்கள் கழித்து பார்த்தால் டிசம்பர் 25ம் தேதி வரும். இதுவும் ஓர் சாந்து.. நாம் கிறிஸ்மஸ் 25ம் தேதி கொண்டாடுவதற்கு.(Trinity (c. 399–419))

நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி இரண்டு வித்தியாசமான கால நாட்க்காடிகளை வைத்து இயேசு பிறப்பை குறித்தனர். கிரேக்க கால அட்டவணை படி ஏப்ரல் 6ம் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக நம்புகின்றனர். அதனால் பல நாடுகளில் ஜனவரி 6ம் நாள் கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் அக்காலங்களில் ஒரே விதமான நம்பிக்கை உலகம் முழுவதும் இருந்ததை அறியலாம்.

டிசம்பர் 25 பேகன் சூரிய கடவுள் பிறந்த நாளாக அனுசரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அது பிறகு கிறிஸ்துமஸ் ஆகா மாற்றப்பட்டது என சொல்லப்படுகிறது. இதில் உண்மை இருக்க முடியாது. ஏன் என்றால் இக்கால அட்டவணையின் படி பேகன் சொறிய கடவுள் பிறந்த நாள் டிசம்பர் 21 அல்லது 22 ஆகத்தான் இருக்க முடியும். 25ந்து அல்ல.

இயேசு பிறந்த வருடமோ, நாளோ வேதாகமத்தில் குறிப்பிடவில்லை. ஆனால் மரபு வழியாக இதை நாம் நினைவு கூர்ந்து வருகிறோம். இதற்க்கு மூன்றாம் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ ஆராச்சியாளர்கள் இதனை தெளிவு படுத்தி உள்ளனர்.

இன்றும் பல கிறிஸ்தவ பிரிவுகள், சபைகள், விசுவாசிகள் கிறிஸ்மஸ் ஐ கொண்டாடுவதில்லை. அவர்களை குறை சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. கிறிஸ்து இந்த பூமியில் பிறந்தது உண்மை. நம்மோடு வாழ்வது உண்மை. இயேசு கிறிஸ்து நமக்காக வராவிட்டால் நாம் பரலோகவாசிகளை இருந்திருக்க முடியாது. இதன்று நமகொரு நம்பிக்கை கொடுத்ததே இயேசு கிறிஸ்துதான். அவரே தெய்வம். அவரை அல்லாமல் வேறு தெய்வம் இல்லை.

கிறிஸ்மஸ் பற்றி யாராவது கேள்வி கேட்டால் தைரியமாக சொல்லுங்கள். இது இயேசு இந்த பூமியில் பிறந்ததை நினைவு கூறத்தான் என்று. இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடவேண்டிய ஓர் உன்னதமான நாள். நாம் இயேசுவை தெய்வமாக கொண்டாடுவோம்.

http://www.gty.org/resources/questions/QA68/why-do-we-celebrate-christmas-on-december-25
http://christianity.about.com/od/christmas/f/christmashistor.htm
http://www.whychristmas.com/customs/25th.shtml
http://www.biblicalarchaeology.org/daily/biblical-topics/new-testament/how-december-25-became-christmas/
http://billygraham.org/answer/why-do-we-celebrate-christmas-on-december-25-when-the-bible-doesnt-mention-the-date-of-christs-birth/
 
Many thanks to
 தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Saturday, March 30, 2013

Black Hole - தவறான ஒரு சிக்னல்

1962-ம் வருடம் பிப்ரவரி மாதம் 20ம் தேதி சரியாக காலை 9:47 மணியளவில் விண்வெளி ஊர்தி கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் நடுவில் புகையை கக்கி கொண்டு, ஜான் கிலன் (John Glenn) என்ற விண்வெளி ஆராய்ச்சியாளரை ஏந்தி கொண்டு கிளம்பியது. அந்த ஊர்தியில் அவர் மட்டும் தனித்து பயணம் செய்தார்.
.
அந்த விண்வெளிகலம் பூமியை மூன்று முறை சுற்றி, நான்கு மணி நேரத்தில் 80,000 மைல்களை கடந்து வந்து படங்களை எடுத்துவிட்டு, பூமிக்கு திரும்ப ஆரம்பித்தது. அந்த ஊர்தி கீழே வந்து கொண்டிருந்தபோது, அதை கன்ட்ரோல் செய்து கொண்டிருந்த ஹுஸ்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அந்த ஊர்தியிலிருந்து கிடைத்தது. அதன்படி, அந்த ஊர்தியில் இருந்த அக்கினி கேடகம் அதை விட்டு தனியே கழன்றுகொண்டு இருக்கிறது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்படி அது கழன்று வந்தால், முழு ஊர்தியும் எரிந்து போய் விடும். அதிலிருந்த ஜானும் எரிந்து போய் விடுவார்.
.
இதை விண்வெளியிலிருந்து சரி செய்ய இப்போது முடியாது. ஆனால் அந்த கலம் பூமியை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்தது. என்ன செய்வது என்று விஞ்ஞானிகள் யோசித்து கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென்று அந்த விண்வெளிகலத்திற்கும் கீழே அதை இயக்கி கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடர்பு அற்று போனது. அதை Black Hole என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எந்தவித தொடர்பும் என்ன நடக்கிறது என்று அறியாமலும் இருக்கும்போது இந்த நிலைமை ஏற்படும்.
.
நிமிடங்கள் வேகமாக கடந்து சென்று கொண்டிருந்தது. நாசா விஞ்ஞானிகள் இயக்குகிற அறையிலிருந்து என்ன செய்வது என்று தவித்து கொண்டிருந்தனர். ஐந்து நிமிடங்கள் கழித்து, ஜானின் குரல் அவர்களுடைய ரேடியோவில் கேட்டது 'இது ஜான்' என்று. ஜான் பூமியை நோக்கி பத்திரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்களின் மத்தியில் ஏற்பட்ட சந்தோஷம் அளவில்லாதது!
.
பின்னர் தான் தெரிந்தது, அது தவறான ஒரு சிக்னல் என்று! ஜான் பத்திரமாக வந்து தரையிறங்கினார். அவர் அந்த Black Hole லில் இருந்த அந்த நிமிடங்கள் மிகவும் அதிர வைக்கத்தக்கதாக இருந்தது.
.
வேதத்தில் யோசேப்பும் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தார். அவருடைய சகோதரர்கள் அவரை தூக்கி ஒரு குழிக்குள் போட்டு விட்டார்கள். யாருடனும் அவருக்கு தொடாபில்லாமல் போய் விட்டது. அவர் போட்ட சத்தங்கள் யார் காதிலும் கேட்கவில்லை. பின்னர் அவரை முன்பின் தெரியாத வியாபாரிகளிடம் விற்று போட்டார்கள். அவர் அநேக பாடுகளினூடே சென்றார். ஆனால் ஒரு நாள் வந்தது. கர்த்தர் அவரை எல்லாருக்கும் மேலாக உயர்த்தினார். யோசேப்பு எதிர்பாராத உயர்வு அவருடைய வாழ்க்கையில் வந்தது.
.
ஒருவேளை நீங்களும் Black Hole என்று சொல்லப்படும் கடும் பாடுகளுக்கு நடுவில் சென்று கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் படும் பாடுகளை அறிவார் யாரும் இல்லையோ? நீங்கள் கூப்பிடும் சத்தம் கர்த்தருக்கும் கேட்கவில்லை என்று நினைக்கிறீர்களோ? உங்கள் வாழ்க்கை உங்களையும் மீறி போய் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களோ? தேவன் என்னை கைவிட்டார் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்களோ? Black Hole அனுபவம் உங்களை தனிமையாக்கிற்றோ?
.
நம்முடைய தனிமை மற்றும் துன்பமான நேரங்களில் நம்மை விட்டு தேவன் தூர போனார் என்று நாம் நினைத்தாலும், நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை என்று சொன்ன தேவன் நம்மை விட்டு விலகாமல் நம் கூடவேதான் இருக்கிறார்.

Wednesday, March 20, 2013

மூலைக்கு தலைக்கல்

1968-ம் வருடத்தில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக சுவிஸ்சர்லாந்து நாட்டின் கைகெடிகாரங்கள் (Wrist Watches) மிகவும் புகழ் பெற்றவையாயிருந்தன. உலக பங்கு சந்தையில், 68 சதவீதமும் பங்கு விற்பனையிலும் 80 சதவீதம் லாபத்திலும் போய் கொண்டிருந்தது. ஆனால் பத்து வருடத்திற்கு பின், பங்கு விற்பனையில் 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அடுத்த மூன்று வருடங்களில் அந்நாட்டின் 65,000 கடிகாரம் செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் வேலைகளை இழந்தனர்.
.
இன்று கைகடிகாரம் செய்வதிலும், விற்பனையிலும் முதலிடம் வகிப்பவர்கள் ஜப்பானியர்களாவர்கள். 1968-ம் வருடம் வரைக்கும் அவர்களுடைய கடிகாரங்கள் அத்தனை புகழ் பெறவில்லை. பின் எப்படி அவர்கள், கடிகாரங்கள் புகழ்பெற்றன? அவர்கள் தாங்கள் செய்த கடிகாரங்களில் மின்னணுக்களால், படிகத்தை (Electronic Quartz) வைத்து உருவாக்க ஆரம்பித்தனர். அவை மற்ற கடிகாரங்களைவிட துல்லியமானதாக, ஒரு சிறிய பாட்டரி மூலம் வருடக்கணக்கில் ஓடும் கடிகாரங்களை உற்பத்தி செய்தனர்.
.
இந்த மின்னணுக்களால் படிகத்தை வைத்து, கடிகாரங்களை முதலில் உருவாக்கினவர்கள் யார் தெரியுமா? சுவிஸ் மக்களே! அதை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் சுவிஸ் கம்பெனியிடம் முதலில் காண்பித்து விளக்கியபோது, அது ஒரு போதும் வேலை செய்யாது என்று கடிகார உற்பத்தியாளர்கள் அதை ஏற்க மறுத்தனர். ஆகவே சோர்வடைந்த ஆராய்ச்சியாளர்கள், அதை உலக அளவில் நடைபெற்ற கடிகாரங்களின் கருத்தரங்கில் அதை வைத்த போது, ஜப்பானியர்கள் அதை உடனே ஏற்றுக் கொண்டு அதன்படி செய்ய ஆரம்பித்தனர். அதனால், இன்று வரை அவர்களுடைய கடிகாரங்கள் உலக பிரசித்த பெற்று விளங்குகின்றன.