Saturday, December 20, 2014

உயிருள்ள ஜீவ வேதாகம வசனங்கள்



பரிசுத்த வேதாகமம் முற்றிலும் உண்மை என்பதை நிருபிக்கும் பதிவு

பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவம். பல ஆயிர வருடங்களாக மாறாமல் இருக்கும் பரிசுத்த வேதாகம வசனங்கள். உயிருள்ள ஜீவ வேதாகம வசனங்கள்.

எபிரேய மொழியில் உள்ள தேவ வசனம்
כד יְבָרֶכְךָ יְהוָה וְיִשְׁמְרֶךָ׃
כה יָאֵר יְהוָה פָּנָיו אֵלֶיךָ וִיחֻנֶּךָּ׃
כו יִשָּׂא יְהוָה פָּנָיו אֵלֶיךָ וְיָשֵׂם לְךָ שָׁלוֹם׃

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட போது

(6:24) May YHVH bless you and protect you!
(6:25) May YHVH shine his face upon you and be gracious towards you!
(6:26) May YHVH lift his face up to you, and give you peace!

இப்பொழுது நமது கைகளில் உள்ள வேதாகம வசனங்கள் - சாதாரண மனிதனும் புரிந்து கொள்ள கூடிய வகையில் மொழிபெயர்க்கப்பட்ட வசனங்கள் ஆங்கிலத்திலும் - தமிழிலும்
எண்ணாகமம் 6:24-26
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
The LORD bless thee, and keep thee:
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
The LORD make his face shine upon thee, and be gracious unto thee:
கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
The LORD lift up his countenance upon thee, and give thee peace.

இந்த படத்தில் உள்ள வேதாகம வசனங்களின் நேரடி மொழிபெயர்ப்பு.

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்
கர்த்தர் (யாவெஹ்) நிமித்தமாக
காப்பவர்/உதவி செய்பவர் மற்றும்
உடைப்பவர்/கண்டிப்பவர்
தீயதை; கர்த்தர் (யாவெஹ்) ஆசீர்வதிப்பார்
உன் மேல்
பிரகாசிப்பிக்கக்கடவர்; யாவெஹ்
முகத்தை உன் மீது
கட்டளையிடகடவர்
சாமாதானம்
பின் வரும் பகுதிகள் தெளிவாய் இல்லை
இந்த வார்த்தைகளை எண்ணாகமம் 6:24-26 வரை காணலாம்

இந்த வசனங்கள் 1979 ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் உள்ள St. Andrew’s Church, பகுதியில் இருக்கும் Menachem Begin Heritage Center நிலத்தில் இரண்டு துண்டுகளாக எடுக்கப்பட்டது. இது இயேசு கிறிஸ்து இந்த பூமியில் அவதரிக்கும் முன் சுமார் 600 நூற்றாண்டுகள் பழமையானது ஆகும்.

இந்த silver scrolls ஏந்தியுள்ள வசனங்கள் இன்றைக்கும் பாரம்பரியம் மிக்க ஆங்கிலிக்கன் திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை, ஒர்தொடக்ஸ் திருச்சபைகளில் ஆசீர்வாதமாக கூறுவார். இது இன்று நேற்று அல்லது இயேசு பிறந்தபின் தோன்றியது அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது நமக்கு கிடைத்திருக்கும் ஆதாரத்திபடி 3000 ஆண்டுகளுக்கு முன் பழக்கத்தில் இருந்துள்ளது.

சிலர் வேதாகமத்தை இயேசு பிறந்ததற்கு பின் மாற்றி தவறாக எழுதிவிட்டதாக எழுதுவதை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இப்படிப்பட்ட ஆதாரங்கள் பதிலாக இருக்கும் என நம்புகிறேன்.

மிக முக்கியமாக நம் தேவனின் நாமத்தை இந்த படிவமும் ஏந்தியுள்ளதை காணலாம். "யாவெஹ்" "YHWH" என்பது நம் தேவனின் நாமம் ஆகும். புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவாக நாம் காண்கிறோம்.

ஏசாயா 42:8 நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

இந்த வசனத்தில் வரும் கர்த்தர் என்பது எபிரேய வார்த்தையில் யாவெஹ் என்று வரும். இதை குறித்து நான் ஏற்க்கனவே ஓர் பதிவை கொடுத்திருக்கிறேன். https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836254./470342299737126/?type=3&theater

நாம் பல நாமங்களில் இயேசுவை அழைக்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டின் காலத்தில் தன்னை மனிதனுக்கு அறிமுகப்படுத்தினது "யாவெஹ்" என்ற நாமத்தில் தான். நீங்கள் தயவு செய்து இந்த வார்த்தையை விளையாட்டாய் பரிகாச சிந்தனையோடு பயன்படுத்தி விடாதீர்கள். உங்கள் பாவம் சாபமாய் மாறும்.

இந்த சுருள்கள் அக்கால கட்டத்தில் யாரோ ஒருவர் கழுத்தில் அணிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில்வர் சுருள்களாக உள்ளதால் பொருளாதார பலம் படைத்த பணக்கார குடும்பத்தில் யாராவது ஒருவர் பயன்படுத்தினதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. The word yhwh (the name of the Lord in Hebrew) appears in writing for the first time ever. The benediction quoted from the Book of Numbers was recited by the Temple priests when blessing the congregation; here it is found in writing and for individual use. The tiny silver scrolls were probably worn as amulets around the neck.

இன்றைக்கும் நமது ஆலய பாதிரியார்கள் கழுத்தில் சிலுவை அணிவதை பார்த்திருப்பீர்கள். கத்தோலிக்க போப் ஆண்டவர் முதற்கொண்டு எல்லா கிறிஸ்தவ போதகர்கள், ஆயர்கள் கழுத்தில் சிலுவை, ஆடையில் சிலுவை அணிவதை பார்த்திருப்பீர்கள். இது இன்று நேற்று உள்ள பழக்கம் அல்ல. இது பல ஆயிர வருகங்கலாக தொடரும் பழக்கம். ஆனால் அக்காலத்தில் சிலுவைக்கு பதிலாக வேத வசனங்களை கழுத்தில் அணிந்து கொள்வர். இதை அவர்களே எழுதியும் அணியலாம். இது பல ஆயிர வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இதை பற்றியும் நான் ஓர் பதிவை கொடுத்திருக்கிறேன். (https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836208./574057619365593/?type=3&theater)

கிறிஸ்து நமக்காக சிலுவை அடையாளத்தை தந்த பிறகு வசனங்களுக்கு பதிலாக சிலுவையை அணிந்துகொண்டிருக்கிறோம். ஆனால் காலபோக்கில் கழுத்தில் சிலுவை அணிய வெட்கப்பட்டு இன்று கத்தியையும், நடிகர்களின் படங்களையும், ஆசைப்படும் பெண்கள், ஆண்கள் படங்களையும், சிலர் செல்போன்களையும், அணிந்துள்ளனர். பாரம்பரியம் மறக்கடிக்கப்பட்டு மரணபடுக்கைக்கு சென்று விட்டதோ?

எது எப்படியோ, இப்படிப்பட்ட வேத வசனங்கள் நமக்கு தேவன் பாதுகாத்து கொடுத்திருக்கிறார். இந்த வசனங்கள் கிறிஸ்து பிறந்ததற்கு பின்போ, ப்ரொடெஸ்டண்ட் திருச்சபை உருவான பின்னரோ, கத்தோலிக்க சபையோ எழுதவில்லை. இது மனிதனால் மாற்றப்படவும் இல்லை. நம் கைகளில் இருக்கும் வேதாகம வசனங்கள் உண்மையானது. இதை போன்று பல ஆதாரங்கள் நம்மிடம் உள்ளது. முன் நான் பதிந்த சில பதிவுகளை இங்கே தருகிறேன்.. இன்னமும் பல நூற்றுக்கணக்கான பதிவுகள் தேவ நாம மகிமைக்காக வரும்.

1) இயேசு பிறந்து, மரித்து பின் உயிர்த்தெழுந்தாரா? (மூல ஆதாரம்: BBC செய்தி நிறுவனம்)
https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836225./499598573478165/?type=3&theater
2) வேதாகமத்தில் குறிபிடப்பட்டுள்ள 50 பெயர்களின் உண்மை சரித்திரத்தை பற்றியது
https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836225./531306100307412/?type=3&theater
3) 2500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த எல்பா சாம்ராஜ்யத்தின் சரித்திர பதிவுகள்.
https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836208./550419178396104/?type=3&theater
4) சமீபத்தில் எகிப்த்தில் கண்டெடுக்கப்பட்ட (கிறிஸ்துவுக்கு முன் 574 மற்றும் 660 ஆண்டு) முக்கியமான பண்டைய கால ஆதாரம் ஒன்று இன்று உலகையே கலக்கி வருகிறது.
https://www.facebook.com/TamilNaduChristianMinistries/photos/pb.329941190443905.-2207520000.1412836208./574057619365593/?type=3&theater
இன்னமும் நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளது. வரும் காலங்களில் உங்களுக்கு தருகிறேன். இந்த ஊழியத்தில் தேவனின் நாமம் மட்டும் மகிமைப்பட ஜெபியுங்கள்.

நான் ஆதாரத்தை வைத்து கொண்டு இயேசுவை தெய்வமாக ஏற்று கொண்டவன் அல்ல. இயேசு எனக்குள் இருக்கிறார் என்பதை தெள்ள தெளிவாக உணர்ந்து உண்மையான தெய்வத்தை அணிந்திருக்கிறோம் என்ற விசுவாசத்தில் பிள்ளையாக வாழ பேராசைப்படுகிறேன்.

இப்படிப்பட்ட ஆதாரங்கள் வேதாகம வசனங்களை நம்ப மறுக்கும் நண்பர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என நம்புகிறேன். தேவன் உண்மையுள்ளவர். அவரை நம்பும் ஜனங்கள் பாக்கியம் பெற்றது.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

வலைத்தள ஆதாரங்கள்
http://www.ancient-hebrew.org/6_40.html
http://en.wikipedia.org/wiki/Ketef_Hinnom
http://historicconnections.webs.com/archaeologythebible.htm
http://www.tamil-bible.com/
http://shoebat.com/2014/09/05/new-archaeological-discovery-proves-catholic-church/
http://opensiddur.org/tefillot/blessings-tefillot/adventures-in-ancient-jewish-liturgy-the-birkhat-kohanim/
http://www.arcvertuel.org/?q=node%2F386
http://crossconnection.hopetv.org/the-most-ancient-fragment-of-the-biblical-text
http://www.youtube.com/watch?v=XTqMpgz9D4I
http://www.fowlerbiblecollection.com/ketef-hinnom-silver-scrolls.html

Friday, December 12, 2014

நயாகரா நீர் வீழ்ச்சி

நயாகரா நீர் வீழ்ச்சியில் ஒரு நிமிடத்திற்கு 50,00,000 டன் தண்ணீர் அருவியாக கொட்டப்படுகிறது. ஆனால் 1848ம் ஆண்டு, மார்ச் மாதம் 29ம் தேதி அந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது திடீரென்று நின்றது. அக்கம் பக்கத்தில் குடியிருந்தவர்கள், நீர்வீழ்ச்சியின் சத்தத்தை கேட்காததால், உலகின் கடைசி நேரத்திற்கு வந்துவிட்டோம் என்றே நினைத்தனர். ஆனால், 30 மணிநேரம் கழித்து, திரும்ப தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
.
என்ன நிகழ்ந்தது? எரிக் ஏரி (Lake Erie) என்னுமிடத்தில் ஒரு பெரிய பனி கட்டி உடைந்து, அது மிதந்து வந்து, நயாகரா நீர்வீழ்ச்சியின் மேற் மட்டத்தில் அடைத்து கொண்டதால், தண்ணீர் போக முடியாதபடி நின்று போனது. திரும்ப வெயில் ஏறஏற பனிகட்டி உருகி, தண்ணீர் திரும்ப பாய தொடங்கியது. பனிகட்டியினால், அவ்வளவு பெரிய நயாகரா நீர்வீழ்ச்சியின் தண்ணீர் கொட்டப்படாமல் நின்று போனது.
.
நம்முடைய வாழ்விலும் தேவனுடைய அன்பும், சந்தோஷமும் சமாதானமும் தொடர்ந்து பாய வேண்டுமானால், நம் வாழ்வில் எந்த பனிகட்டி போன்ற தடையும் காணப்படக்கூடாது. தேவன் பட்சபாதமுள்ள தேவனல்ல, அவர் நம்மேல் அன்பை எப்போதும் வெளிப்படுத்துகிற தேவனாகவே இருக்கிறார்.

Wednesday, December 10, 2014

நேர்த்தியாய் செய்கின்ற தேவன்

வழிபோக்கன் ஒருவன் வயல்வழியே நடந்து வந்தான். அப்போது பூசணிக்காய் தோட்டத்தில் பெரிய பெரிய பூசணிக்காய்கள் காய்த்து தரையில் கொடி படர்ந்திருந்தது. அதை பார்த்த வழிப்போக்கன், என்ன கடவுளுடைய சிருஷ்டிப்பு, நிமிர்ந்து நிற்க முடியாத செடியில் இவ்வளவு பெரிய பூசணிக்காய்களை உருவாக்கியிருக்கிறார் என சலித்து கொண்டான். இதை சிந்தித்தவாறே நடந்து வந்தான் வெயில் அதிகமாயிருந்ததால் களைப்பின் மிகுதியினாலும் சாலையோரத்திலிருந்த ஒரு ஆலமரத்தின் நிழலில் படுத்தான். படுத்தவன் அயர்ந்த நித்திரை செய்தான். சிறிது நேரத்தில் ஆலமரத்தின் சிறிய பழம் ஒன்று அவன் தலையில் விழுந்தது. பூசணிக்காயை நினைத்துக்கொண்டே படுத்திருந்த அவன் தன் தலையில் பூசணிக்காய் தான் விழுந்து விட்டது என்று அலறி அடித்து கொண்டு எழுந்து பார்த்தபோது ஒரு குட்டி ஆலம்பழம் ஒன்று உருண்டு கிடந்தது. 'இந்த பெரிய மரத்தில் பூசணிக்காய் போன்ற பெரிய பழத்தை படைத்திருப்பீரானால் என் தலை தப்பியிருக்காது. ஞானமான உம் செயலுக்கு நன்றி' என்றான்.
.
ஆம் நம் தேவன் அனந்த ஞானமுள்ளவர்.

Friday, December 5, 2014

தகப்பனின் அன்பு

ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் அவளை அன்புடன் வளர்த்து வந்தார். அந்த பிள்ளையும் அந்த தகப்பனிடம் அன்புடன் வளர்ந்து வந்தாள். ஒரு நாள் அவர் அந்த பிள்ளையை பார்த்து, 'நீ இன்று வெளியில் விளையாட போக வேண்டாம்' என்று கூறினார். அவள் தினமும் தன் தோழிகளோடு விளையாடுவது வழக்கமாக இருந்தது. அவளும் தன் தகப்பனிடம் சரி என்று கூறிவிட்டு, தன் அறையில் வேறு ஏதாவது செய்யலாம் என்று அமர்ந்தாள். அப்படி அவள் அமர்ந்த போது, அவளுடைய தோழிகள் விளையாடும் சத்தம் கேட்டது. அவளால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. சற்று நேரம் பார்த்தாள். அவளால் தாக்கு பிடிக்க முடியவில்லை, சரி, தகப்பன் வேலைக்கு போயிருப்பார், நான் விளையாடுவது அவருக்கு எங்கே தெரிய போகிறது என்று நினைத்து, விளையாட சென்று, நன்கு விளையாடிவிட்டு, எல்லாருக்கும் பை சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அப்போதுதான் அவளுடைய மனதில் வேதனை ஆரம்பித்தது, தன் தகப்பனின் சொல்லிற்கு கீழ்ப்படியவில்லை என்று, அதையே நினைத்து சென்று கொண்டிருந்தபோது, முன்னால் மாட்டப்பட்டிருந்த படத்தை காணாமல், போய் இடித்து, அது அந்த படம் கீழே விழுந்து, நொறுங்கி போனது, அவளுக்கும் தலையில் நல்ல அடி!
.
அவள் இருதயத்தில் தகப்பனுக்கு கீழ்ப்படியவில்லை என்ற துக்கம், தலையின் வேதனை வேறு, வேகமாக தன் அறைக்குள் சென்று படுக்கையில் படுத்து, விசும்ப ஆரம்பித்தாள். அப்போது அந்த வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண், 'நீ போய் உன் அப்பாவை பார், நடந்ததை சொல்' என்று கூறினாள். ஆனால் அந்த பிள்ளையோ, ஷநான் எப்படி என தகப்பனின் முகத்தில் விழிப்பேன், நான் அவர் சொல்லை கேட்கவில்லையே' என்று அழ ஆரம்பித்தாள். அதற்கு அந்த பணிப்பெண், 'உன் தகப்பனின் அன்பு நீ செய்கிற காரியத்தை பொறுத்தா இருக்கிறது? நீ அவருடைய மகள் அல்லவா?' என்று கூறினாள். அதனால் தைரியமுற்று, அந்த பிள்ளை தன் தகப்பனிடம் சென்று, 'அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்' என்று அவருடைய கரத்தை பற்றி கொண்டு அழ ஆரம்பித்தாள். அப்போது அவளுடைய தந்தை, 'மகளே, நீ என் சொல்லை கேளாமல், விளையாட போனதும் தெரியும், விளையாடிவிட்டு, வரும் வழியில் மாட்டப்பட்டிருந்த படத்தில் மோதி, தலைக்கு அடிபட்டதும் தெரியும், நீ வருவாய் என காத்திருந்தேன், அந்த வலிக்கு தடவி கொடுக்கலாம் என்று, ஆனால் நீ என்னிடம் வரவேயில்லை' என்று கூறினார். 'அது எப்படி உங்களுக்கு தெரியும், நீங்கள் வேலைக்கு போகவில்லையா?' என்று அந்த பிள்ளை கேட்டாள். அதற்கு தந்தை 'இன்று நான் உன்னுடன் நேரத்தை செலவழிப்பதற்காக விடுமுறை போட்டேன், ஆனால், நீ விளையாட போய் விட்டாயே' என்று கூறி, 'மகளே, நீ என்னுடைய மகள், ஆகையால் நீ தவறு செய்தாலும் நீ என்னிடம் வரும்போது, நான் உன்னை மன்னித்து, உன்னை ஏற்று கொள்வேன். ஆனால் நீ தான் நான் ஏற்று கொள்வேனோ மாட்டேனோ என்று தயங்கி என்னிடம் வராமல் போனாய்' என கூறினார். அப்போது மகள், அவருடைய கழுத்தை கட்டிக்கொண்டு, ஷநன்றி அப்பா' என கூறி முத்தமிட்டாள்.
.
நம்முடைய தேவனும் அப்படித்தான், அவர் நம்மேல் அன்புகூருவது நாம் செய்கிற நல்ல காரியங்களுக்காகவோ, அவருக்காக நாம் படுகிற பாடுகளுக்காகவோ அல்ல, நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதினால் மாத்திரமே அவர் நம்மேல் அன்பு கூறுகிறார். 'கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்' - (யோவான் 1:12) என்று வேதம் நமக்கு கூறுகிறது.

Wednesday, December 3, 2014

அந்நிய பாஷை

அந்நிய பாஷை.. வரமா? பேசாதவர்களுக்கு சாபமா?
ஓர் கிறிஸ்தவராக இங்கே அதை ஆராய்ந்து பார்போமே?

அந்நிய பாஷை எப்போது ஆரம்பித்தது? யார் மூலமாக உலகத்திற்கு வெளிப்பட்டது? பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எல்லாம் அந்நிய பாஷையில் கர்த்தரோடு பேசினார்களா? அந்நிய பாஷை பேசினால் தான் கர்த்தரோடு ரகசியம் பேச முடியுமா? அந்நிய பாஷை பேசினால் தான் பரலோகமா? அந்நிய பாஷை பேசுபவர்கள் எல்லாம் அதிகப்ரசங்கிதனம் பண்ணுகிறார்களா? அவர்கள் மட்டும் தான் பரிசுத்தவான்களா? பரலோகம் செல்வதற்கு இது ஓர் அடையாளமா? அன்னியபாஷை பேசும்போது மட்டும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபடுகிறோமா? இயேசு கிறிஸ்து அன்னியபாஷை பேசினாரா? என்ற பல கேள்விக்கு இங்கே சில வரிகளில் பதில் தேடுவோமே?

முக்கியமாக அந்நிய பாஷைக்கு அடித்தளமாக அமைவது அப்போஸ்தலர் 2ம் அதிகாரம். பெந்தேகோஸ்தே நாளில் ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் அந்நிய பாஷை unknown tongues பேசவில்லை. பல பாஷைகளை Other Tongues பேசினார்கள். இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. அந்நிய பாஷை என்பது ஒன்று தானா? அல்லது பல பாஷைகள் அடங்கியதா? இதற்கு பதில் அப்போஸ்தலர் 2:4 4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

ஆவியின் நிரப்புதல் அன்னியபாஷைகோர் அடையாளமா? அநேகர் அப் 2:1-4 வசனங்களை மேற்கோள்காட்டி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படவேண்டும் என்றால் இடிமுழக்கமும், அக்கினிமயமான நாவுகளும், அந்நியபாஷையும் கண்டிப்பாக காணப்படவேண்டும். இதுவே பரிசுத்த ஆவியின் அடையாளம் என்று வாதிடுபவர்கள் உண்டு. வேதாகமத்தில் பல இடங்களில் பரிசுத்த ஆவியானவரால் தேவனின் பிள்ளைகள் நிரப்பட்டபோது பல அடையாளங்கள் நடந்தன.

1). அப் 4:31ல் மீண்டும் ஆவியானவரால் நிரப்பப்படும்பொழுது இடம் மட்டும் அசைந்தது. 2). ஸ்தேவான் ஆவியானவரால் நிரப்பப்படும்பொழுது தரிசனம் கண்டான் (7:55). 3). சமாரியர் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றபொழுது அடையாளங்கள் எதுவும் நிகழவில்லை. (8:16,17). 4). சவுல் பரிசுத்த ஆவியானல் நிறைந்தபொழுது மீன் செதில்கள் போன்றவைகள் கண்களிலிருந்து விழுந்தன (அப் 9:17). 5). பரிசுத்த ஆவியானவர் கொர்நேலியு வீட்டார்மீது இறங்கினபோது பல பாஷைகளைப் பேசினார்கள்(அப் 10:44-46). 6). எபேசுவின் சீஷர்கள் மீது ஆவியானவர் வந்தபொழுது அவர்கள் அந்நிய பாஷை பேசினார்கள். தீர்க்கதரிசனமும் சொன்னார்கள் (19:6).

இவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடி அவரவர்கள் பெற்ற அனுபவத்தைக்கூறி சாட்சி சொன்னால் என்ன நடக்கும்? ஒருவர் ஆவியானவரைப் பெற்றதற்கு அடையாளம் மீன் செதில்கள் போன்றவை கண்களிலிருந்து விழவேண்டும் என்பார். இன்னொருவர் இல்லை, தரிசனம் காணவேண்டும் என்பார். மற்றவர் இல்லவே இல்லை. அந்நியபாஷைதான் பேசவேண்டும் என்பார், இல்லை தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்பார் வேறொருவர். எல்லாவற்றிற்கும் மேலாக சமாரியர் என்ன சொல்லியிருக்கவேண்டும். எங்களுக்கு ஒன்றுமே நடைபெறவில்லையே!. எனவே அடையாளம் ஒன்றும் அவசியமேயில்லை என்பார்கள்.

புதிய ஏற்பாட்டில் 16 பாஷைக்காரர்கள் உள்ளடக்கிய கொரிந்து சபையில் எழுந்த பாஷை பிரச்சனைக்காக அந்த ஒரு சபைக்காகமட்டும் பாஷைகளைக்குறித்து பவுல் எழுதுகிறார். யோவான் சின்ன ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு தன் தரிசனத்தைப்பற்றி எழுதும்போது அதில் பல விஷயங்களைப்பற்றி எழுதிய அவர் அந்நியபாஷைப்பற்றி எதையும் எழுதவில்லையே!

வரம் என்பது கர்த்தரால் கொடுக்கப்படவேண்டிய ஒன்று - கேட்கப்படவேண்டிய ஒன்றல்ல.

அன்னியபாஷை பேசுவது தவறா? பதில்: இல்லை. அந்நியபாஷையை பற்றி தேவன் குறித்துவைத்திருப்பதினால் அது தவறல்ல. தவறென்று சொல்பவர்கள் வேதத்திற்கு விரோதமானவர்கள். மாற்கு 16:14 ல் அந்நிய பாஷை விசுவாசிகளின் அடையாளம் என்று போடப்பட்டுள்ளது. 1 கொரிந்தியர் 12 தேவன் தம்முடைய தீர்மானத்தின்பாடு ஒருவருக்கு சுகமளிக்கும் வரத்தையும், மற்றொருவருக்கு தீர்க்கதரிசனம் சொல்லும் வரத்தையும், மற்றொருவருக்கு நவமான பாஷைகள் பேசும் வரத்தையும் கொடுக்கிறார். 1 கொரிந்தியர் 12: 7. ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு அந்நிய பாஷை பிரயஜோனமாய் இருக்காதென்றால் தேவன் அதை கொடுக்க மாட்டார்.

ஆதலால் அன்னியபாஷை பேசுவது தவறல்ல. ஆனால் அதை எப்படி கையாள வேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் பவுல் மூலம் தெளிவாக கூறியிள்ளார். எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா? ஆதலால் முக்கியமான வரத்தை நாடுங்கள்.

அந்நிய பாஷை என்ற பெயரில் பல பள்ளிகூடங்கள் சபைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம். யாரையும் அந்நிய பாஷை பேச சொல்லி வற்புறுத்தாதீர்கள். அந்நிய பாஷை பேசுபவரை தடை செய்யாதிருங்கள். அது தேவன் கொடுத்த வரம். தேவனோடு ரகசியம் பேசுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள வரம். யாரும் இதை குறைவாக மதிப்பிட வேண்டாம். தவறாக கருத்தக்களையும் இங்கே பதிவிட வேண்டாம்.

அந்நிய பாஷை பரிசுத்த ஆவியானரின் நிரப்புதளுக்கு அடையாளம் அல்ல. இரட்சிப்பின் அடையாளம் அல்ல. பரலோகம் செல்ல கற்றுக்கொள்ளவேண்டிய மந்திரமும் அல்ல. ஜெபம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மொழியும் அல்ல. விசுவாசிகள் கட்டாயம் பெற்றுகொள்ளவேண்டிய நிச்சயம் அல்ல. போதகராய், ஊழியனாய் இருப்பதற்கு வேண்டிய ஆதாரமும் அல்ல.

இது தேவனின் வரம். அவனவனுக்கு பிரயோஜனம் உண்டாயிருக்கும்படி தேவன் வரங்களை பகிர்தளிகிறார். அன்பில்லாமல் அந்நியபாஷை பேசுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை! அந்நியபாஷை பேசுபவர்களிடத்தில் காணப்படும் பெருமையும், அந்நியபாஷை பேசாதவர்களை இவர்கள் தாழ்வாக காணும் மனப்பான்மையும்.. இவர்களின் அன்பின் தாழ்ச்சியையே காட்டுகிறது.

"அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியால், அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான்" 1 கொரிந்தியர் 14:2
"அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்" 1 கொரிந்தியர் 14:4
"நீங்களெல்லாரும் அந்நியபாஷைப் பேசும்படி விரும்புகிறேன். ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன் 1 கொரிந்தியர் 14:5,6
"அந்நியபாஷைகள்" கண்டிப்பாய் வியாக்கியானம் செய்யப்படவேண்டும்!

"இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நியபாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைப் பண்ணாதிருங்கள். சகலமும் நல்லொழுக்கமாயும், கிரமமாயும், செய்யப்படக்கடவது"
இவ்வுலகத்தில் உன்னதமான கிறிஸ்தவர்களாய் திகழ்ந்தவர்கள், அந்நியபாஷை பேசினார்களோ இல்லையோ....ஆனால், இவர்கள் தங்கள் ஆண்டவராகிய இயேசுவின் மீது முழு இருதயமான சொல்லிமுடியாத நேசம் கொண்டிருந்தார்கள்! பேதுரு, யாக்கோபு, யோவான், பவுல் போன்ற சீஶர்கள் அந்நியபாஷை பேசினார்கள்! ஆனால், நமக்குத் தெரிந்தவரை ஜான்வெஸ்லி, சார்லஸ் பின்னி, D.L.மூடி, A.B. சிம்ஸன், வில்லியம்பூத், C.T.ஸ்டட், வாட்ச்மேன் நீ போன்ற தேவ மனிதர்கள் ஒருபோதும் அந்நியபாஷை பேசியதேயில்லை! ஆனால், அவர்கள் அனைவரும் சிலுவையின் வழியில் நடந்து சென்றார்கள்! ஆம், இவைகள்தான் அவர்கள் வாழ்வின் "மையமாய்" இருந்தது... மற்ற அனைத்தும் அவர்களுக்கு இரண்டாவதாகவே இருந்தது!!

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

Tuesday, December 2, 2014

வெள்ளியை போல புடமிடுகிறவர்

ஒருமுறை ஒரு போதகர் தன் மக்களுக்கு இந்த வசனத்தை குறித்து போதித்து கொண்டிருந்தபோது, அதில் பங்கெடுத்த சில சகோதரிகளுக்கு எப்படி தட்டான் வெள்ளியை சுத்திகரிப்பான் என்றும், அந்த காரியம் எப்படி தேவனோடு சம்பந்தப்படுத்தி எழுதியிருக்கிறது என்றும் பார்க்க தோன்றியது. அதன்படி ஒரு சகோதரி, தான் போய் தட்டானுடைய இடத்திற்கு சென்று பார்த்துவிட்டு, அடுத்த வாரம் அதை குறித்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள போவதாக சொல்லி போனார்கள்.
.
அதன்படி, ஒரு வெள்ளி தட்டானை கண்டுபடித்து, அவர் எப்படி அதை சுத்திகரிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டு ஒரு நாளை குறித்து, அதன்படி அங்கு போனார்கள். தான் எதற்காக அப்படி கேட்கிறார்கள் என்பதை அந்த மனிதரிடம் எதுவும் சொல்லாமல், அவர் செய்வதை பார்க்க ஆரம்பித்தார்கள்.
.
அவர்கள் பார்த்து கொண்டிருந்தபோது, அந்த தட்டான் தன் கையிலிருந்த வெள்ளியை எடுத்து, நெருப்பில் காட்ட ஆரம்பித்தார். அப்போது அவர் சொன்னார், 'இந்த வெள்ளி, நெருப்பின் நடு மையத்தில் வைத்து, சூடு காட்டப்பட வேண்டும். ஏனென்றால், நடுவில்தான் நெருப்பின் அதிகபட்சம் சூடு இருக்கும், அப்படி காண்பித்தால்தான், வெள்ளியிலிருக்கிற அழுக்கு எல்லாம் மாறும்' என்று கூறினார்.
.
அப்போது அந்த சகோதரி 'அவர் உட்கார்ந்து’ என்ற இடத்தை நினைவு கூர்ந்து, அந்த தட்டானிடம், “நீர் உட்கார்ந்து தான் அதை நெருப்பில் காட்ட வேண்டுமா” என்று கேட்டதற்கு, அவர், “ஆம், அந்த வெள்ளி நெருப்பில் காட்டி முடியும்வரை நான் இங்கு உடகார்ந்து தான் ஆக வேண்டும், மட்டுமல்ல என் கண்கள் அதன் மேலேயே இருக்க வேண்டும், ஒரு நிமிடம் அதிக நேரம் இந்த வெள்ளி நெருப்பில் இருந்தாலும், அது ஒன்றுமில்லாமற் சேதமாகி போய் விடும்” என்று கூறினார். அதை கேட்ட அந்த சகோதரி, சற்று நேரம் அமைதலாய் இருந்த பின், ‘நீர் எப்படி இந்த வெள்ளி சுத்தமாயிற்று என்று அறிவீர்’ என்று கேட்டதற்கு, அவர், 'அது மிகவும் சுலபம், என் சாயல் அதில் தெரியும்' என்று கூறினார்.
.
ஓ! எத்தனை உண்மை! நம் தேவன் எத்தனை அருமையானவர்! நீங்கள் ஒரு வேளை நெருப்பின் நடுவில் போடப்பட்ட வெள்ளியை போல இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? என்னால் தாங்க முடியாத வேதனைகளும் சோதனைகளும் என்னை சூழ இருக்கிறது என்று துவண்டு போயிருக்கிறீர்களா? தேவன், உங்களை உட்கார்ந்து, வெள்ளியை புடமிடுகிறது போல புடமிட்டு கொண்டிருக்கிறார்.

Sunday, November 30, 2014

வேதாகமமும் அறிவியலும் பதிவு 4


வேதாகமமும் அறிவியலும் பதிவு 4

எனக்கன்பான தேவ ஜனமே, இந்த பதிவில் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான கருத்துக்களை உங்கள் முன் வைக்கிறேன். பரிசுத்தர் இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.

1. பல நட்சத்திரங்கள் உருவாகும்
வேதாக வசன ஆதாரம் : ஆதியாகமம் 22:17 - உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்.
நாசா விண்வெளி ஆராய்ச்சி முடிவு - 1-5-2006 அன்று வெளியிடப்பட்டது http://www.nasa.gov/centers/goddard/news/topstory/2006/milkyway_seven.html

இதற்கு ஆதாரமாக பல விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் கொடுத்துள்ள பதிவுகள் http://www.space.com/1917-dozen-stars-born-milky-year.html

இந்த பதிவுகளில் கூறியுள்ள படி பால்வெளி மண்டலத்தில் வருடந்தோறும் பல நட்சத்திரங்கள் உருவாகுமாம். நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 6 அல்லது 7 புதிய நட்சத்திரங்கள் உருவாகும் என கணக்கிட்டு உள்ளனர். இதனை மற்ற நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஓர் பால்வெளி மண்டலத்தில் 7 உருவாகும் என்றால் இந்த பிரபஞ்சத்தில் பல பால்வெளி மண்டலங்கள் உள்ளது. இவ்வாறு இருக்கும் பொது ஓர் வருடத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உருவாகும்? உங்களால் கணக்கிட முடியுமா? முடியாது. அதனை போலத்தான் நம் தேவனின் ஆசீர்வாதத்தையும் உங்களால் எண்ணி பார்க்க முடியாது.

நமது வேதாகமத்தில் இந்த நட்சத்திர பெருக்கத்தை குறித்து ஆதியாகமத்தில் எழுதப்பட்டுவிட்டது. இதனை எழுதியவர் மோசே. எழுதப்பட்ட வருடம் கி.மூ 4000 வருடங்களுக்கு முன். மோசே விண்வெளி ஆராய்ச்சியாளரா? இல்லை நண்பரே. ஆனால் அவர் வின்னுலகை படைத்த இயேசு கிறிஸ்துவின் விசுவாசி. இவர் எழுதியது இன்று தான் உண்மை என்று பலருக்கும் தெரிகிறது. நட்சத்திரங்கள் உருவாகுமா? தேவன் ஆசீர்வதிக்கும் போது நான் உன்னை நட்சத்திரங்களை போல பெருக பண்ணுவேன் என்றார். நாம் பெருகுகின்றோம், நட்சத்திரம் பெருகுகிறதா? ஆம் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

2. கடற்கரை மணல் உருவாகி பெருகும்
வேதாகம வசன ஆதாரம் - ஆதியாகமம் 22:17 கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்.
ஆராய்ச்சி முடிவு - கடற்க்கரை மணல் உருவாகும்.
http://geology.com/stories/13/sand/

இப்படிப்பட்ட மணல் கடற்க்கரை காற்றில் ஏற்படும் மாற்றங்கள், மற்றும் கடல் அரிப்புகள், போன்றவைகளால் உருவாகும் என நிருபிக்கப்பட்டுள்ளது. http://global.britannica.com/EBchecked/topic/521932/sand-dune/49752/Formation-and-growth-of-dunes
"The wind adjusts its velocity gradient on reaching the sand patch; winds above a certain speed decrease their near-surface velocity and deposit sand on the patch. This adjustment takes place over several metres, the sand being deposited over this distance, and a dune is built up. " இதில் dune என்ற வார்த்தையின் அர்த்தம் a mound or ridge of sand or other loose sediment formed by the wind, especially on the sea coast or in a desert.

ஒருவேளை வேதாகமத்தில் கடற்க்கரை மணல் அல்லாமல் வேறு நிலப்பகுதி மணலை பற்றி கூறி இருந்தால் கருத்து மாறுபாடாக இருந்திருக்கும். ஆனால் வேதாகமத்தில் மோசே தேவ ஞானத்தால் எழுதியது ஆச்சரியமாகுமா? இன்றைய விஞ்ஞான துறைக்கு ஆச்சரியமே. தேவ பயத்தோடு நாம் எழுதும் ஒவ்வொரு காரியமும் விஞ்ஞானத்தை மிஞ்சும் என்பதற்கு இதனை விட என்ன ஆதாரம் வேண்டும்?

3. பூமி வெட்டவெளியில் தொங்குகிறது.
வேதாகம வசன ஆதாரம் - யோபு 26:7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
அறிவியல் கண்டுபிடிப்பு - நாசா விண்வெளி ஆராய்ச்சி முடிவுகள், இந்தியாவின் ஆராய்ச்சி முடிவுகள் ஒத்துக்கொண்டுள்ளன. http://spaceplace.nasa.gov/geo-orbits/en/

ஆதிகால மனிதர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் இந்த உலகம் எதோ ஒன்றில் அமர்ந்திருப்பதாகவும் அல்லது எதோ ஓர் மிருகம் தாங்கி கொண்டிருப்பதாகவும் படம் வரைந்தனர். ஆனால் பரிசுத்த வேதாகமம் தெளிவாக இந்த பூமி அவாந்திர வெளியில் அதாவது வெட்டவெளியில் தொங்குகிறது என்று கூறி இருக்கிறது. யோபுவின் புஸ்தகம் எழுதப்பட்டது 4000 வருடங்களுக்கு முன்னராக இருந்தாலும் அதை கடந்து பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் யோபு. ஆபிரகாமின் காலத்தில் வாழ்ந்தவர் என்று பல ஆதாரங்கள் கூறுகின்றன. பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே இந்த காரியம் மனிதனுக்கு தேவனால் வெளிப்படுத்தப்பட்டது.
Many ancient peoples believed that the world was a flat disk supported by a giant or an animal, such as a buffalo or a turtle.
http://www.clarifyingchristianity.com/science.shtml

4. மரபணு வளர்ச்சியின் அவசியம்
வேதாகம வசனம் - ஆதியாகமம் 1:11-12
தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
அறிவியல் ஆராய்ச்சி ஆதாரம் -http://www.ncbi.nlm.nih.gov/pubmed/22382462
http://www.globalsciencebooks.info/JournalsSup/images/SF/GGG_1%281%291-20.pdf

மனிதனில் உள்ள வித்து தான் இன்னொரு மனிதனை உருவாக்க முடியும். இது எல்லோருக்கும் தெரிந்த ஓர் தெளிவான உண்மை. கணிகளுக்கும், புல் பூண்டுகளுக்கும் இப்படிதான் என்பது ஆராய்ச்சி செய்யாமலே 4000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதா? அதுவும் உலக ஆரம்பத்தில் இருந்தே இந்த உண்மையை தேவன் மனிதனுக்கு புரிய வைத்திருந்தார். இந்த வசனத்தில் "தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள்" என்ற வார்த்தையை கவனிக்கவும். நமக்குள் இருக்கும் வித்து எப்படி இன்னொரு மனிதனை உருவாக்க வல்லதோ அதை போல கனிகளில், செடிகளில் உள்ள வித்துக்கள் அந்தந்த கனிகளை மட்டுமே கொடுக்கும். கணவனும் மனைவியும் இணையும் போது குழந்தை பிறக்கிறது. சிங்கமோ, கரடியோ பிறக்குமா? குருவியோ, மரமோ பிறக்குமா? நிச்சயமாக முடியாது. யார் இந்த அதிசயத்தை செய்திருப்பார். இயற்கையாக நடந்திருக்குமா? நிச்சயம் உருபாக்குபவர் வேண்டும் அல்லவா? அவர் நம் தேவனே.. இந்த உண்மையும் வேதாகமத்தில் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னமே எழுதப்பட்டு விட்டது. http://animalsmart.org/animal-science/the-fields-of-animal-science/breeding-and-genetics/important-terms-in-breeding-and-genetics

5. இந்த பூமியின் மண்ணிலே உருவாக்கப்பட்டவன் மனிதன்
வசன ஆதாரம் - ஆதியாகமம் 2:7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
ஆராய்ச்சி முடிவுகள் - http://www.theregister.co.uk/2013/11/06/science_and_religion_agree_life_and_mankind_are_from_clay/
http://www.foxnews.com/science/2013/11/06/new-study-suggests-man-came-from-clay-as-bible-suggests/

மனிதன் மண்ணிலே படைக்கப்பட்டதை பல ஆராய்ச்சி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. பழங்கால கிரேக்க, சீன, எகிப்து சித்தாந்தங்களும் கிறிஸ்தவர்களின் வேதாகமமும், இஸ்லாமியர்களின் குரானும் மண்ணிலே மனிதன் பிறந்தான் என்று எழுதி வைத்துள்ளது. ஆனால் மற்ற புத்தகங்கள் கூறும் இந்த கருத்தை பரிசுத்த வேதாகமம் 4000 வருடங்களுக்கு முன்னரே எழுதி வைத்திருந்தது. இதை பல ஆதாரங்கள் நிருபித்துள்ளது
http://en.wikipedia.org/wiki/Creation_of_man_from_clay
http://www.foxnews.com/science/2013/11/06/new-study-suggests-man-came-from-clay-as-bible-suggests/
https://esoriano.wordpress.com/2007/05/25/from-dust-to-man-a-scientific-proof/
இன்னமும் பல வலைத்தளங்கள் உள்ளது.

6. மனஉளைச்சல் / அழுத்தம் எலும்பை உருக்கும்
வசன ஆதாரம் - நீதிமொழிகள் 12:4. குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.

மற்றும் நீதிமொழிகள் 14:30 , 15:30 , 16:24 , 17:22
சாலமன் ராஜா கி. மூ 950 வருடங்களுக்கு முன்னமே இந்த எலும்புருக்கி நோயை குறித்து எழுதியுள்ளார். மன அழுத்தமோ ஆவிக்குரிய அழுத்தமோ இருக்குமாயின் அது எலும்பை பாதிக்கும் என்று கூறி இருந்தார். இது உண்மையா? ஆம் என்கிறது மருத்துவ ஆராய்ச்சி குழு. அதாவது தான் நேசித்த ஒருவரின் மூலம் (மனைவி - நீதி 12:4) லட்சை (வெட்கம்) அடைந்தாலோ, பொறாமையின் மூலமாகவோ, மனம் உடைந்த நிலையில் இருக்கும் மனிதனின் எலும்புகள் பாதிக்கப்படும். அதே நேரத்தில் நல்ல செய்தி கேட்பதின் மூலமாகவும், மகிழ்ச்சியான நேரங்களிலும் எலும்புகள் புஷ்டியாக இருக்குமாம். குழந்தை பெரும் ஓர் தாயிடம் எல்லோரும் அன்பாகவே இருப்பார்கள். ஏன் என்றால் அவர்கள் மனம் ஒடிந்தால் அவளின் ஆரோக்கியம் மட்டும் அல்ல அவளின் குழந்தையும் மனதளவிலும், ஆரோக்கியத்திலும் அதிகமாய் பாதிக்கப்படும்.

இதை வைத்து பார்க்கும் போது சாலமன் ராஜா கூறிய மனம் மற்றும் எலும்பு வசனங்கள் எவ்வளவு பெரிய உண்மை...
http://www.apa.org/helpcenter/stress-body.aspx
http://www.webmd.com/balance/stress-management/effects-of-stress-on-your-body

7. குகை மனிதன்
வேதாகம ஆதாரம் - யோபு 30:5,6. அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.
அறிவியல் ஆதாரம் - http://www.huffingtonpost.com/2012/06/28/cavemen-bones-dna-humans_n_1636289.html

குகை மனிதன் இருந்ததாக நமக்கு பல கல்வெட்டு ஆதாரங்கள் இருந்தது. ஆனால் அறிவியல் இதை உறுதி செய்யவில்லை. சமீபத்தில் குகை மனிதர்களின் எலும்புகள் கிடைத்துள்ளது. இது சுமார் 7,000 வருடங்களுக்கு முன் உள்ளதை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த குகை மனிதனை பற்றி யோபுவில் பல ஆயிர வருடங்களுக்கு முன்னமே எழுதப்பட்டு விட்டது.
http://www.gotquestions.org/cavemen.html
http://www.matrixbookstore.biz/caveman.htm

8. குழந்தை பிறந்த எட்டாவது நாளில் அதிக ரத்த உறைவு இருக்கும்
வசன ஆதாரம் - லேவியராகமம் 12:3 எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது.

அக்கால வழக்கப்படி பிறந்த குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்தது நமக்கு தெரிந்த ஓர் விஷயம். இந்த விருத்தசேதனம் பரிசுத்தமாக்குதலுக்காக கொடுக்கப்பட்டது. இதன் மூலம் ஓர் குழந்தையின் பாவபிறப்பு முடிவுக்கு வருகிறது. இந்த விருத்தசேதனம் மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பை குறிக்கிறது. ஆனால் கிறிஸ்தவர்கள் இதை இன்று செய்வதில்லை. காரணம் பரிசுத்த வேதாகமமே. 1 கொரிந்தியர் 7:19. விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.

தொழில் விருத்தசேதனம் பெறுவதை காட்டிலும் உள்ளத்தில் பாவத்தை வெறுத்து விருத்தசேதனம் அடைந்து பரிசுத்தமாய் வாழ தேவன் அழைக்கிறார். ஒருவன் கிரியையினால் இரட்சிக்கப்பட முடியாது என்று வேதாகமம் போதிக்கிறது. சரி... இந்த விருத்தசேதனம் பழக்கத்தில் இருந்த காலத்தில் தேவன் அதை ஏன் 8ம் நாளில் பண்ண சொன்னார்? எந்த மனிதன் இதை குறித்து ஆராய்ந்தான்?

பிறந்த குழந்தையின் ரத்த உறைவு எட்டாம் நாளில் அதிகமாய் இருக்கும். அந்த நாளில் விருத்தசேதனம் செய்ய வேண்டும். 9ம் நாளில் இருந்து ரத்தஓட்டம் சிறிது சிறிதாக வேகமெடுக்கும். இது அறிவியல் முடிவு. இதனை அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்தது. இதை தேவன் அக்காலத்தில் தம்முடைய பிள்ளைகளுக்கு நடைமுறைபடுத்தி கொடுத்திருந்தார். இது ஓர் அதிசயமே..

இன்றும் இது அறிவியல் பூர்வமாக நிருபிக்கபட்டிருக்கிறது.
http://www.timothylsmith.com/why-does-the-bible-say-that/
http://aliyosshmuel.com/thinkjewish.asp?AID=197

ரோமர் 11:33 ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!

பிரியமானவர்களே... இதுவரை (1,2,3ம் பதிவுகளில்) சுமார் 30க்கும் மேற்ப்பட்ட அறிவியல் அதிசயத்தை நாம் ஆராய்ந்திருக்கிறோம். இன்று நாம் 8 அறிவியல் அதிசயங்களை வேதாகமத்தோடு படித்தோம். இன்னமும் பல ஆயிரங்கள் உண்டு. தேவனின் பலத்தோடு மிகவிரைவில் உங்கள் கண்முன் கொண்டு வருகிறேன். தேவனின் நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.

I கொரிந்தியர் 2:13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்

ஆக்கம், தொகுப்பு, படைப்பு
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
www.facebook.com/TamilNaduChristianMinistries