ஒரு முறை பிரசங்கியார் D.L.Moody அவர்கள்
தன்னுடைய பிரசங்கத்தில் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக்
காட்டி, அதனில் உள்ள காற்றை எப்படி எடுப்பது என்றுக்
கேட்டார். ஓவ்வொருவரும் ஒரு பதிலைக் கூறினார்கள்.
“ஒருவர் சொன்னார், ஒரு குழாயை வைத்து அதை உறிஞ்சி
எடுத்துவிடுங்கள் ” என்றுக் கூறினார். அப்படி எடுத்தால்
அங்கு வெற்றிடம் (Vaccum) உருவாகும். அதினால் கண்ணாடி உடைந்து
விடும் என்று மூடி கூறினார். இன்னும் அநேகர் வெவ்வேறு
கருத்துக்களைச் சொன்னார்கள். அப்போது அவர் ஒரு
பாத்திரத்திலிருந்து தண்ணீரை எடுத்து அந்த டம்ளரில்
நிறைய ஊற்றி, “இப்போது இதில் கொஞ்சம்கூட காற்று இல்லை.
தண்ணீரை ஊற்றியவுடன் காற்று எடுக்கப்பட்டு விட்டது”
என்றார்.
.
அவர் இந்த
சிறிய உதாரணத்தின் மூலம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வது
எப்படி என்றுக் காட்டினார். பாவத்தை அங்கும் இங்கும்
உறிஞ்சி எடுப்பதால் அது போய் விடாது என்றும், நாம்
பாவமில்லாத வாழ்க்கை வாழ்வதற்கு பரிசுத்த ஆவியானவரால்
நம்முடைய இருதயம் நிரப்பப்பட வேண்டும் என்றும்
விளக்கினார். பின்னும் அவர், ‘நம்முடைய
இருதயத்திலிருந்து பெருமையும் சுயநலமும் மற்றும்
பாவமான காரியங்களும்; விலகும்போது பரிசுத்த ஆவியானவர்
நம்முடைய முழு இருதயத்தையும் நிரப்புவார்’, ஆனால் நம்
இருதயம் அப்பாவங்களினால் நிறைந்திருந்தால் பரிசுத்த
ஆவியானவருக்கு அங்கு இடமில்லை என்றுக் கூறினார்.
நம்முடைய இருதயம் உலக காரியங்களுக்கு
வெறுமையாக்கப்படாலொழிய ஆவியானவர் அதை நிரப்ப முடியாது
என்றும் கூறினார்.
.
அதுப் போல
நாம் நம்மையே வெறுமையாக்கி ஆவியானவரை நம்
இருதயத்திற்குள் அழைப்போம். அவர் வந்து,
பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும்,
நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
அவர் வந்து நம் இருதயத்திற்குள் வாழும் போது எந்த
பாவமும் நம்மை நெருங்காது. கர்த்தர் நம்மைக் கொண்டு
பெரிய காரியங்களை செய்வார். மட்டுமல்ல சத்திய ஆவியாகிய
அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை
நடத்துவார்; - யோவான் - 14: 8:13.
No comments:
Post a Comment