ஒரு கூட்ட தவளைகள் தண்ணீரை நோக்கி
வேகமாக ஓடின. போகும் பாதை எப்படி உள்ளது என்று கூட
பார்க்கவில்லை. மூன்று தவளைகள் வழியில் உள்ள
பெருங்குழியில் விழுந்து விட்டன. மற்ற தவளைகளோ பாதையை
நோக்கி செல்லாமல் குழியின் அருகே வந்து நின்று வேடிக்கை
பார்த்து கொண்டிருந்தன. விழுந்த வேகத்தில் அந்த மூன்று
தவளைகளும் எப்படியாவது மேலே வந்து விட வேண்டுமென்று
வேகவேகமாக தாவின. இதை மேலிருந்து பார்த்து கொண்டிருந்த
தவளைகளில் ஒன்று, 'நீங்கள் மேலே வரவே முடியாது. ஏன் வீணாக
முயற்சிக்கிறீர்கள்' என்றது. இதை கேட்டவுடன் அந்த தவளை
சோர்ந்து ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டது. இரண்டு
மட்டும் மேலே வர முயற்சித்தன. மேலேயிருந்த மற்றொரு தவளை
கூறியது, 'மழைக்காலம் வரும் அப்போது இநத குழி மழை நீரால்
நிரப்பப்படும். அப்போது நீங்கள் எளிதாக நீந்தி வெளியே
வந்து விடலாம். அதுவரை இங்கே இருங்கள்' என்றது. அதுதான்
சிறந்த யோசனை என்று இரண்டாவது தவளையும் எண்ணி தாவுவதை
நிறுததியது. ஆனால் ஒன்று மட்டும் விடாப்பிடியாக வெளியே
வர முயற்சித்தது. ஆனால் உடனிருந்த இரு தவளைகளும் 'நீயும்
எங்களுடன் இரு. உனக்கு துணையாகத்தான் நாங்கள்
இருக்கிறோமே' என்றன. ஆனாலும் காது கேளாதது போல
பெருமூச்சுடன் தாவித்தாவி மேலேயும் வந்து விட்டது அந்த
தவளை.
எங்கள் தளத்தில் உங்களுக்கு பிடித்த கதைகளை பதிவு செய்துள்ளோம். உங்கள் சொந்த வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளோடு பகிர்ந்துகொள்வதற்கும், ஊழியத்தின் பாதையில் பகிர்ந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்த கதைகளை இனைத்துள்ளோம். படியுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள்
Wednesday, December 18, 2013
பாவத்திலிருந்து விடுதலை
ஒரு கூட்ட தவளைகள் தண்ணீரை நோக்கி
வேகமாக ஓடின. போகும் பாதை எப்படி உள்ளது என்று கூட
பார்க்கவில்லை. மூன்று தவளைகள் வழியில் உள்ள
பெருங்குழியில் விழுந்து விட்டன. மற்ற தவளைகளோ பாதையை
நோக்கி செல்லாமல் குழியின் அருகே வந்து நின்று வேடிக்கை
பார்த்து கொண்டிருந்தன. விழுந்த வேகத்தில் அந்த மூன்று
தவளைகளும் எப்படியாவது மேலே வந்து விட வேண்டுமென்று
வேகவேகமாக தாவின. இதை மேலிருந்து பார்த்து கொண்டிருந்த
தவளைகளில் ஒன்று, 'நீங்கள் மேலே வரவே முடியாது. ஏன் வீணாக
முயற்சிக்கிறீர்கள்' என்றது. இதை கேட்டவுடன் அந்த தவளை
சோர்ந்து ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டது. இரண்டு
மட்டும் மேலே வர முயற்சித்தன. மேலேயிருந்த மற்றொரு தவளை
கூறியது, 'மழைக்காலம் வரும் அப்போது இநத குழி மழை நீரால்
நிரப்பப்படும். அப்போது நீங்கள் எளிதாக நீந்தி வெளியே
வந்து விடலாம். அதுவரை இங்கே இருங்கள்' என்றது. அதுதான்
சிறந்த யோசனை என்று இரண்டாவது தவளையும் எண்ணி தாவுவதை
நிறுததியது. ஆனால் ஒன்று மட்டும் விடாப்பிடியாக வெளியே
வர முயற்சித்தது. ஆனால் உடனிருந்த இரு தவளைகளும் 'நீயும்
எங்களுடன் இரு. உனக்கு துணையாகத்தான் நாங்கள்
இருக்கிறோமே' என்றன. ஆனாலும் காது கேளாதது போல
பெருமூச்சுடன் தாவித்தாவி மேலேயும் வந்து விட்டது அந்த
தவளை.
Subscribe to:
Post Comments (Atom)
-
ஒரு தாயற்ற பெண் பிள்ளையை அவளுடைய தகப்பன் பரிவோடு வளர்த்து வந்தார். அவளுடைய தேவைகளை எல்லாவற்றையும் சந்தித்து தாய்க்கு தாயாகவும், ...
-
பல ஆண்டுகளுக்கு முன் செல்வந்தர் ஒருவர் வேலைக்கு ஆள் வேண்டி விளம்பரம் செயதிருந்தார்; விளம்பரத்தை பார்த்து இளைஞர்கள் பலர் வந்தனர்....
No comments:
Post a Comment